السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 3 November 2025

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

 

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

(சட்ட விளக்கத்துடன் – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பதிவு)


சீவிய உரித்து (Life Interest) என்பது,

ஒரு நபருக்கு அவரின் உயிர்வாழும் காலம் வரை குறித்த காணியை பயன்படுத்துவதற்கு, வாழ்வதற்கு, பயனடைய சட்ட உரிமை வழங்கப்படும் உரிமையாகும்.


சீவிய உரித்தை உடைய நபர் இறந்தவுடன், அந்த காணியின் முழு உரிமையும் (Absolute Ownership) குறித்த காணி ஏற்கனவே உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்ட நபருக்கோ அல்லது அவரது உரித்தாளர்களுக்கோ தானாகவே செல்கிறது.


"காணியை நன்கொடை (Gift) கொடுப்பவர் காணியின் உரிமையை (Ownership) மாற்றம் செய்து கொடுக்கிறார். ஆனால் அதில் தனக்கான ஒரு உரித்தை தன் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்படி வைத்துக் கொள்கின்றார், இது தான் சீவிய உரித்து" 


சட்ட அடிப்படை:


இத்தகைய உரிமைகள் Civil Law Principles மற்றும் Transfer of Property அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டவை.


ஒரு “Life Interest” சீவிய உரித்து உடையவர் குறித்த காணியின் பதிவு பெற்ற உரிமையாளரின் அனுமதி இன்றி காணியை விற்கவோ, அடைவு வைக்கவோ முடியாது — அவர் அதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் உரிமை மட்டும் பெற்றிருப்பார்.


உதாரணம்:

அம்மா தனது காணியை மகனுக்காக நன்கொடையாக உறுதி மூலம் கொடுக்கிறார், அந்த உறுதி மூலம் அவர் தன் வாழ்நாளில் காணியை பயன்படுத்துவதற்கான சீவிய உரித்து (Life Interest) வைத்துக்கொள்கிறார் என்றால்,


குறித்த அம்மா உயிரோடு இருக்கும் வரை மகன் அந்த காணியை அம்மாவின் எழுத்துமூல அனுமதி இன்றி எந்தவித உரிமை மாற்றமும் செய்ய முடியாது. 


அம்மா இறந்த பின்பு தான் மகன் முழு உரிமை பெறுவார்.


"சீவிய உரித்து" வைத்துக் கொண்டு காணியை உரிமை மாற்றம் செய்யக்கூடிய முறை "நன்கொடை" வழங்கல் மூலம் நன்கொடை உறுதிகளில் (Deed of Gift) மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.


சட்டபூர்வ விளக்கம்:


✅ Life Interest – ஒரு temporary beneficial right (தற்காலிக பயன்பாட்டு உரிமை).

✅ Ownership – ஒரு absolute right (முழு உரிமை).

✅ Life Interest கொண்டவர் காணியை விற்க முடியாது.

✅ அவர் இறந்த பின், உரிமை தானாகவே நிரந்தர பதிவு பெற்ற (Registered Owner) உரிமையாளருக்குச் செல்கிறது.


சீவிய உரித்து வைக்கப்படும் காரணங்கள்:

- முதியோர் தங்கள் வாழ்நாள் பாதுகாப்பிற்காக

- குழந்தைகளுக்கான எதிர்கால ஒழுங்குக்காக

- சொத்து வழக்குகளைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுவதற்காக

- பரம்பரை சொத்துக்க் வேறு நபருக்கு மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு.


"சீவிய உரித்து" இன் கட்டுப்பாடுகள்


01. உரிமை மாற்றம் பெற்ற காணி உரிமையாளர் Deed Registered Owner) குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபருக்கு மாற்றம் செய்ய முடியாது. 


02. உரிமை மாற்றம் பெற்ற காணி உரிமையாளர் குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபரிடம் ஈடு அல்லது அடைவு வைக்க முடியாது. 


03. உரிமை மாற்றம் பெற்ற (Deed Registered Owner) காணி உரிமையாளர் குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபருக்கு விற்கவோ நன்கொடை வழங்கவோ முடியாது. 


04. சீவிய உரித்து உடையவர் (Life Interest Holder) காணியை விற்க அல்லது நன்கொடை வழங்க முடியாது.

05. சீவிய உரித்து உடையவர் (Life Interest Holder) காணியை ஈடு அல்லது அடைவு வைக்க முடியாது.


முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்:

“Life Interest” என்பது உங்கள் வாழ்நாளுக்கான பாதுகாப்பு குடை

ஆனால் அது நிரந்தர உரிமை அல்ல!


பலர் இதைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள்!


இந்த பதிவை உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் — அவர்கள் தங்கள் சொத்து உரிமைகளை சரியாக புரிந்துகொள்ளட்டும்!


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#LifeInterest #சீவியஉரித்து #LegalAwareness #PropertyLaw #SriLankaLaw #LawAndThirukkural #LegalEducation #வாழ்நாள்_உரிமை #சட்டவிழிப்பு #DeedExplained #KamsanLegalPosts