இவர்கள் உண்மை விசுவாசிகள்.
“நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் எதிர்கின்றார்களோ அவரகள் மிகத் தாழ்ந்தவர்கள்.” சூரத்துல் முஜாதலா 20ம் வசனம்.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசங்கொள்ளும் கூட்டத்தினரை, அல்லாஹ்வுக்கும் அவன் ரசூலுக்கும் மாறு செய்பவர்களை நேசிப்பவர்களாக நீர் பெற்றுக்கொள்ளமாட்டீர். அவ்வாறு மாறு செய்பவர்கள் இவர்களுடைய தந்தைமார்களாக அல்லது அவர்களுடைய புதல்வர்களாக அல்லது அவர்களுடைய சகோதரர்களாக அல்லது அவர்களுடைய குடும்பத்தினர்களாக இருந்த போதிலும் சரியே!,(ஏனெனில் விசுவாசங்கொண்ட) அவர்கள் இதயங்களில் அ(வ்விறை)வன் ஈமானை எழுதிவிட்டான். இன்னும் அவர்களைத் தனது அருள் என்னும் ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தி இருக்கிறான். மேலும் அவர்களை சுவனங்களில் நிரந்தரமாக பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப்பற்றி திருப்தியடைந்தான். அவர்களும் அவனைத் திருப்தியடைந்தார்கள். அறிந்துகொள், நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுவார்கள்.” சூரத்துல் முஜாதலா 22ம் வசனம்.
அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் தரக்குறைவாகப் பேசுகின்றவர்கள் இஸ்லாத்தின் விரோதிகள். அவர்கள் தங்கள் தந்தையராகவோ தனையராகவோ ஏனைய உறவினர்களாக இருப்பினும்கூட உண்மை விசுவாசிகள் நேசிக்க மாட்டார்கள்.
உண்மை விசுவாசிகளே!
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” கூறப்படாத நல்ல காரியங்கள் குறையுள்ளதென்றும் அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறப்படாத வணக்கம் திரையிடப்பட்டிருக்கும் என்ற நபிமொழிகள் ஆழமான அற்புதமான கருத்துக்களை தாங்கி நிற்கிறது.
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” கூறியே சகல நல்ல காரியங்களையும் துவக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் பெயர்கூறி துவக்கம் செய்ய வேண்டும் என்று அதற்குப் பொருள் கூறுகின்றோம். உண்மைதான். ஆனாலும்கூட இதற்குள் இவ்வாறனதொரு கருத்தும் கூறுவதற்கு சந்தர்பம் இருக்கின்றதாவென்று ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.
சகல நல்ல காரியங்களையும் துவக்கம் செய்யும் முன் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று கூறவேண்டும் என்பது ஸுன்னத்தான ஒரு அமலாக இருக்கிறது. எனவே சுன்னத்தானதொரு அமலை செய்யும்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நமது நினைவுக்கு வர வேண்டுமா? இல்லையா?.
அல்லாஹ், அகிலங்களையெல்லாம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக்கொண்டுதான் ஆரம்பித்து வைத்தான். எனவே அகிலங்களெல்லாம் அண்ணலாரின் நினைவோடு சலக நல்ல காரியங்களையும் ஆரம்பிக்கவேண்டும் என்று இது வலியுறுத்துகிறதென்று சொன்னால் இதனை உங்களால் ஜீரணிக்க முடிகின்றதா?
இன்னும் ஒவ்வொரு நல்ல கருமங்களையும் முடிக்கும்போது ஸலவாத் கூறி முடிக்க வேண்டும். கலிமாவை பெருமானாரின் பெயரைக்கொண்டு முடிக்க வேண்டும். தொழுகையை சலாம் கூறி முடிக்கின்றோம். நோன்பில் ஸகாத்துல் பித்ராவுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. ஸகாத்தில் கூட்டு ஸகாத்திற்கு சிறப்பு இருக்கிறது. ஹஜ், உம்ராவை தவாபுல் விதாவைக்கொண்டு நிறைவு செய்கின்றோம். இவ்வாறு இங்கு கூறப்பட்ட அல்லது கூறப்படாத ஒவ்வொரு விடயமும் முடிவுறும்போது அங்கே நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கண்பித்துத்தந்த வழிமுறைகள் நினைவுக்கு வருகின்றதா? இல்லையா?
பெருமானாரைக் கொண்டு துவக்கம் பெற்ற இவ்வுலகம் பெருமானாரின் மறைவோடு அது முடிவுக்கு வந்துவிட்டது. அவ்வாறே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை மீண்டும் அவர்களின் அருள் நிறைந்த சுவத்துப் பூங்காவில் இருந்து எழுப்பாட்டி வைபதனூடாக துவக்கம் பெரும் மஹ்ஷரின் வாழ்க்கை, பெருமானாரின் பிரார்த்தனையோடு அதுவும் முடிவுக்கு வருகிறது. இன்னும் சுவனத்து வாயில்களும் பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினால்தான் துவக்கம் பெறப்போகிறது. அதன் முடிவை அல்லாஹ்வும் அவன் ரசூலுமே நன்கறிந்தவர்கள்.
இவ்வாறு பெருமானாரின் பெருமைகள் போதிக்கப்பட்டு வருகின்றபோது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஒரு கூட்டம் ஏகத்துவ அணி என்னும் பெயரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க இன்னுமொரு கூட்டம் தொழுகைக்கு அழைத்தல் என்னும் பெயரில் நடமாடித் திரிகிறது.
எனவே உண்மையான விசுவாசிகள் பெருமானார் அவர்களின் நினைவில் இருந்து விலகி தூரமாகி அகன்று எவ்வாறு இருக்க முடியாதோ அவ்வாறே “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதற்கு பொருள் தெரியாமல் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவமதிக்கின்ற இயக்கங்களை நேசிப்பவர்களாகவும் உண்மை விசுவாசிகள் என்றென்றும் இருக்கமாட்டார்கள்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரை சுமார் 800 ஆண்டுகள் அந்நாடு இஸ்லாமியர்களால் ஆளப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த காலப்பகுதியில் சுன்னா, ஷீஆ என்னும் இரு கொள்கைக் கோட்பாடுகள்தான் அங்கு இருந்திருக்கிறது. பதில் கூற முடியாதளவுக்கு ஷீஆ அமைப்புக்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அறிஜர்களால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேவபந்த் தாருல் உலூம் மதரசா தோற்றம் (31- 05-1866) பெற்றதன் பின்னர் 800 ஆண்டுகள் இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டில் காணாத பிளவுகளை சீரழிவுகளை இந்தியா கண்டு கொண்டது.
இன் ஷா அல்லாஹ் தொடரும்..........