இந்தியா ஸக்காபியத்துஸ்ஸுன்னிய்யா மதரஸா Islamic Educational Board of India என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி உலகம் முழுவதும் ஸுன்னத் வல் ஜமாத் அகீதாவினைப் போதிக்கும் குரான் மதரஸாக்களை உருவாக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்தியாவில் மட்டும் பல லட்சம் மாணவர்கள் கல்வி கறுகும் 10000 குரான் மதரஸாக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அது தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் வெற்றிகரமாக இம்மதரஸாக்கள் இயங்கிவருகின்றது.
அதன் தொடரில் இலங்கையிலும் குர்ஆன் மதரஸாக்களை நிறுவும் நோக்கில் கடந்த புதன்கிழமை மேற்படி அமைப்பின் இலங்கைக்குரிய பொறுப்பாளரான சேலத்தை சேர்ந்த மௌலவி இஸ்மாயில் முஸ்தபவி ஹழரத் அவர்களுக்கும் எமது அஸ்டோ அமைப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்று முடிவில் கல்முனையில் முதன்முறையாக மதரஸாவை ஆரம்பிக்க எமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலகுவான முறையில் குர்ஆனையும் பிற மார்க்க விடையங்களையும் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மிக கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸுன்னத் ஜமாத் அகீதாவை சிறுபராயம் தொட்டு போதிப்பதே இம்மதரஸாக்களின் நோக்கமாகும்.
எனவே இன்ஷா அல்லாஹ்! மிக விரைவில் எமது கல்முனையில் எமது அமைப்பின் கீழ் இம்மதரஸா ஆரம்பிக்கப்படவிருப்பது முழு கல்முனை மாநகருக்கும் கிடைத்த ஓர் வரப்பிரசாதமே!