தப்லீக் இயக்க அமைப்பாளர்களே! ஆதரவாளர்களே! உங்களிடம் கடுகளவாவது ஈமான் இருக்குமானால் இதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.
அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நம்முடைய பிள்ளைகள், சொத்து சுகங்கள், ஏனையவர்களைவிட அதிகம் நேசிக்கும் ஒருவர்தான் உண்மையான விசுவாசியாகும். (நபி மொழி) எனவே எவரொருவர் சதாவும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் எண்ணத்தில் சிந்தனையில் வாழ்வாரோ அவரே உண்மை விசுவசியாகும்.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நினைவு ஒரு நொடிப்பொழுதுகூட என்னைவிட்டும் பிரிந்திருக்குமனால் நான் என்னை இஸ்லாமியனாக கருதமாட்டேன் என்று ஷாதுலியா தரீக்க்த்தின் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
தேவபந்த் உலமாக்களின் குரு நாதர் அல்லாமா ஹழ்ரத் அஷ்ஷேக் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) நாயகம் அவர்கள் பல வருடங்கள் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் முபாரக்கான தோற்றத்தில் வாழ்ந்து வந்ததாக மௌலவி அஷ்ரப் அலி தானவி (கிஸஸுள் அகாபிர்) எனும் நூலின் 88 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறே அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை சந்திக்க சென்ற பயணத்தில் தன்னில் தன்னுடைய தோற்றத்தில் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை கண்டதாக “அன்பாசுள் ஆரிபீன்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இதனை தகவலை சென்ற தொடரிலும் பதிவு செய்திருந்தோம்.
இவ்வாறு தப்லீக் இயக்க முன்னோடிகளான தேவபந்த் உலமாக்களின் குருமார்கள் கூறியிருக்க அவர்களின் வழிவந்த இஸ்மாயில் திஹ்லவி பின்வருமாறு எவ்வாறு சொல்வதற்கு முன் வந்திருப்பார்? என்று உள்ளத்தில் கடுகளவாவது ஈமான் உள்ளவராக நீங்கள் இருப்பின் சிந்தித்துப்பாருங்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் ஆழம் அளந்து வெளிப்படுத்தி வைக்க வேண்டும். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தவறுதலாகவாவது ஒரு வார்த்தை வெளிப்படுமானால் அதற்காக தவ்பா செய்து அந்த வார்த்தையை நீக்கிவிட வேண்டுமேயன்றி விளக்கம் கூறி வலிந்துரை செய்திட அவரோ அல்லது அவரது அணியினரோ முன்வருவது புத்திசாலித்தனம் அல்ல.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொடர்பில் பிழையான தவரான கீழ்த்தரமான அசிங்கமான வார்த்தைகளை உபயோகம் செய்துவிட்டு அதற்குப் பரிகாரம் தேடாமல் அவ்வார்த்தைகளை மீளப்பெறாமல் அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் தற்போதைய தப்லீக் இயக்க தலைவர் மௌலவி தாரிக் ஜமீல் (பாகிஸ்தான்) சைய்யிதுனா ஹுஸைன் ரலியள்ளாஹு அன்ஹு அன்னவர்களை பைத்தியக்காரன் என்று கூறியுள்ளார்.
மரணம் எவரையும் விட்டு வைக்காது. யாராக இருந்தாலும் மரணித்தே ஆக வேண்டும். ஆனாலும்கூட மரணித்து விட்டார் என்ற சொற்பிரயோகத்தினை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விடயத்தில் உபயோகம் செய்திட சைய்யிதுனா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு விரும்பி இருக்கவில்லை. அதனால்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மரணமாகியுள்ளார் என்று சொல்பவரை கொலை செய்வேன் என்று வீர வசனம் பேசிஇருந்தார்கள்.
அவ்வுத்தமத் தோழரின் 34 வது தலைமுறையில் வந்த மௌலவி இஸ்மாயிலின் வார்த்தைப் பிரயோகங்களை சாதாரண எங்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கும்போது இறை நேசர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள்.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின்மீது தரக்குறைவாக கருதப்படும் வார்த்தைக்கு வேறு விளக்கங்கள் இருந்தாலும்கூட அதைச் சொன்னவருக்கு குப்ருடைய பத்வா வழங்கப்படும் என மௌலவி கொன்கொஹி ஸாஹிப் கூறியதாக “அஷ்ஷிஹாபுஸ் ஸாகிப்” எனும் நூலில் பதிவாகியுள்ளது.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“நீங்கள் தொழுகையின் போது உங்கள் மனைவியுடன் கூடுவது அல்லது தீய சலனமுடைய விபச்சார சிந்தனை கொள்வது நல்லது மேலும் ஷைகுமார்களையோ அல்லது ஒரு நல்லடியாரையோ அல்லது அது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவு வருவதைக் காட்டிலும் கீழானது”
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,லாகூர் பதிப்பகம் ]
“நீங்கள் தொழுகையின் போது உங்கள் மனைவியுடன் கூடுவது அல்லது தீய சலனமுடைய விபச்சார சிந்தனை கொள்வது நல்லது மேலும் ஷைகுமார்களையோ அல்லது ஒரு நல்லடியாரையோ அல்லது அது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவு வருவதைக் காட்டிலும் கீழானது”
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,லாகூர் பதிப்பகம் ]
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“தொழுகையின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவில் மூழ்கி இருப்பதை விட கீழானது”(அஸ்தக்பிருல்லாஹ் )
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]
“தொழுகையின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவில் மூழ்கி இருப்பதை விட கீழானது”(அஸ்தக்பிருல்லாஹ் )
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]
சிராத்துல் முஸ்தகீம் என்ற பெயரில் இப்னு தைமியாவும் நூல் ஒன்றைத் தொகுத்தார். அதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அஹ்லெ பைத்துகள், சஹாபாக்கள், இமாமே முஜ்தஹித், வலிமார்கள் போன்றோரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இமாம்களின் இஜ்மாவுக்கு முரணாக மார்க்கச் சட்டங்களை இயற்றியுள்ளார்.
இன் ஷா அல்லாஹ் தொடரும் ............