சத்தியத்தை தேடுபவனுக்கு ஒரு ஆதாரம் போதும், மனோஇச்சையைப் பின்பற்றுபவனுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் போதாது”
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும் என நபித்தோழர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். புகாரி. பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீதான அன்பு ஈமான் உள்ளவரைக் கண்டுகொள்வதற்கான அலவு கோளாகும் என்பதற்கு இந்தவொரு ஆதாரம் போதும்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், (பிறப்பு 02-03- 1703) அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியில் (ஹிஜ்ரி 1114 ஷவ்வால் மாதம் பிறை 4 ல்) தோன்றிய ஷெய்கு அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாக பிறந்தார்கள்.
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் முப்பாட்டனார் அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் அவர்கள் பாரூக்கி என அழைக்கப்பட்டார்கள். நக்க்ஷபந்திய்யா தரீகாவில் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அனுமதியின்படி பைஅத் செய்து கொண்டார்கள். கிலாபத்தும் பெற்றிருந்தார்கள். நபியே நாயகமே! நீங்கள் இல்லையென்றால் நான் ரப்பு என்பதை வெளிப்படுத்தி வைத்திருக்க மாட்டேன் என்ற நபி மொழிகளை பிரச்சாரம் சையும் சூபிகளில் ஒருவராகும். வலிமார்களை அதிகமதிகம் நேசிப்பவராக, அவர்களைத் தேடிச் சென்று நல்லாசி பெறுபவராகவும் இருந்துள்ளார்கள்.
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் கருத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிரார்கள். அதிகமதிகம் சலவாத் ஓதுபவர்களாக, அதன் பரக்கத்தினால்தான் தனக்கு சகலதும் கிடைக்கப்பெற்றதாகவும் கூறுவார்கள்.
சங்கையான ரபீஉனில் மாதத்தில் விசேடமாக உணவுகள் தயார் செய்து பங்கீடு செய்துள்ளார்கள்.
சங்கையான ரபீஉனில் மாதத்தில் விசேடமாக உணவுகள் தயார் செய்து பங்கீடு செய்துள்ளார்கள்.
ஒரு தடவை உணவு தயார் செய்து கொள்வதற்கான வசதி இல்லாமல் போனதற்காக கவலை அடைகிறார்கள். அன்றிரவு நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தயார் சைய்யப்பட்ட உணவுகளை வழங்கியிருந்தார்கள். அதனை மறு நாள் பங்கீடு செய்ததாகவும் ஷாஹ் வலியுல்லாஹ், அன்பாசுள் ஆரிபீன் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் நல்லடியார்களான வலிமார்கள் சமாதி கொண்ட பின்னரும் அவரின் பழைய தோற்றத்தில் இவ்வுலகில் காற்சியளிப்பார்கள். எனது தந்தை அஷ்ஷாஹ் வஜீஹுத்தீன் மரமான பின்னர் பல தடவைகள் காற்சியளித்து நிகழவுள்ள விடயங்களை அறிவித்து தருவார்கள். அவ்வாறு ஒரு நாள் மறுமை நாள் வரை நடக்கவுள்ள சகல விடயங்களையும் காண்பித்து தந்தார்கள் என்று தன்னிடம் கூறியதாக அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் மேற்க்கூறிய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
(இது பரேலவி, தேவபந்த் என்ற பிரச்சினை எழுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்.)
வலியுல்லாஹ் என்று தன் மகனுக்குப் பெயரிட்டதற்கான காரணத்தினை தந்தை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
ஒரு தடவை குத்புத்தீன் அஹ்மது பக்தியார் காகீ (கி.பி 1173-1235 )ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தை தரிசிக்க அப்துர் ரஹீம் வலி அவர்கள் சென்று அவ்விடத்தில் நீண்ட நேரம் முராகபாவில் மூழ்கி இருந்தார்கள். அப்பொழுது உங்கள் இல்லத்தரசி கருவுற்றிருப்பதாகவும் அதுவொரு ஆண் மகன் என்றும் அதற்கு குத்புத்தீன் அஹ்மத் என்ற எனது பெயரையே சூட்ட வேண்டும் என்று அந்த வலியுல்லாஹ் வேண்டிக்கொண்டார்கள். இதனை பெரியார் மறந்து போய் விட்டார்.
ஒருநாள் பெரியார் அவர்களின் மனைவி தொழுதுவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அவரது கரங்களில் சின்னஞ்சிறிய கரங்களைக் காணுகிறார். இதனால் அச்சம் கொண்டு கணவரிடம் கூறியபொழுது பயப்படத்தேவையில்லை. நீங்கள் வலியுல்லாஹ் ஒருவரை சுமந்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அவ்வாறே குத்புத்தீன் அஹ்மத் எனப் பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது. இதனால் வலியுல்லாஹ் என்றே அழைக்கப்பட்டார். (அர்வாஹ் ஸ லாஸா )
அன்பர்களே! சூபித்துவ குடும்பத்தில் பிறந்த மௌலவி இஸ்மாயில் திஹ்லவி, “பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் ) [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59] என்று நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவமதித்து, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிறார்.
எனவே இவரும் இவரை தலைவராகவும் நம்புகின்றவர்கள் இஸ்லாமியர்களா?
தொடரும்..........
அர்வாஹ் ஸலாஸா நூலின் பிரதியும் அஷ்ஷேக் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் முபாரக்கான மஸார் ஷரீபும்.