உங்கள் இயக்கத்தின் முன்னோர்களின் கருத்துக்களையும் அதன் ஸ்தாபகரின் கருத்தையும் படித்துப்பாருங்கள்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் “வஹ்ததுல் வுஜுத், வஹ்ததுஷ் ஷுஹுத் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலும் இணக்கம் காண முயன்றார். வஹ்ததுல் வுஜூத் பற்றிய கொள்கையை ஷைகுல் அக்பர் இப்னு அரபியும் வஹ்ததுஷ் ஷுஹுத் பற்றிய கோட்பாட்டை ஷைக் அஹ்மத் ஸிர் ஹிந்தியும் ஒரே உண்மையை இரு வேறுபட்ட மொழிகளில் விளக்குகின்றார்கள் என்றும், ஆனால் தூரப்பார்வையற்ற விமர்சகர்களே இவற்றிற்கிடையில் முக்கிய வேறுபாடு இருப்பதாக கருதி சிந்தனைக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். ”என்றும் ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகின்றார். கடுமையான விசனத்திற்குரிய ஒரு விடயத்தை பின்வரும் உதாரணத்தினூடாக விளக்க பிரயத்தனப்படுகின்றார்.
“மெழுகை மூலப் பொருளாக கொண்டு குதிரை, கழுதை, மனிதன் போன்ற வடிவங்களை உருவாக்கினால் மூலப் பொருள் ஒன்று, ஆனால் வடிவம் வேறாகும். வடிவத்தில் வித்தியாசம் இருப்பதன் காரணமாகவே அதற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மூன்றும் இயற்கையின் வடிவங்களே. ஆனால் ஆழ்ந்து சிந்திதால், அது மெழுகுதான் அதுபோன்றே இவ்விருவரின் கோட்பாடுகளுக்குமிடையில் எந்த விதமான வேறுபாடுகளுமில்லை” எனக் கூறினார்.
இந்தியாவில் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பாற்றிய ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்
சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.
இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.
ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.
இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.
ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.
இப்பொழுது மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி, அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இறுதி தருவாயில் கண்ட கார்ச்சியின் வாக்கு மூலத்தைப் பார்போம்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மரண தருவாயில் சிறு குழந்தை போன்று தமது பிள்ளைகள் பற்றி கவலைப்பட்டு தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் அவ்விடத்திற்கு சமூகமளித்த நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள், எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் எனக்கும்தான் குழந்தைகள் என்று கூறிச் சென்றார்கள். அதனால்தான் ஒருவரைத் தவிர சகல பிள்ளைகளும் மார்க்க அறிஜர்களாக விளங்கினர் என்று மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி “தத்கிரதூர் ரஷீத் ” எனும் நூலில் குறிப்பிடுகிறார். (அர்வாஹே தலாதா பக்கம் 22)
மேலும் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுமாறும் இந்த உலக நியதிற்கு ஏற்றவாறு வாழுமாறும் முந்திய இரு கலீபாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமாறும் என்னை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் வலியுறுத்தினார்கள் என்ற அஷ்ஷாஹ் வலியுல்லாஹ்வின் குறிப்பை மௌலவி தானவி “கிஸஸுள் அகாபிர்” 14 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுமாறும் இந்த உலக நியதிற்கு ஏற்றவாறு வாழுமாறும் முந்திய இரு கலீபாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமாறும் என்னை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் வலியுறுத்தினார்கள் என்ற அஷ்ஷாஹ் வலியுல்லாஹ்வின் குறிப்பை மௌலவி தானவி “கிஸஸுள் அகாபிர்” 14 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார்
“பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]
இன் ஷா அல்லாஹ் தொடரும்.........