உங்கள் இயக்கத்தின் முன்னோடிகள் பாரம்பரிய அகீதாவை உங்களுக்கு நினைவூட்டவும் வளர்ந்து வரும் இளம் சமுதாய சந்ததியினர்களுக்கு நீங்கள் யார்? உங்களின் சுய தோற்றம், ரகசியம் என்னவென்பதையும் வெளிப்படுத்தி வைத்து வரலாற்று நிகழ்வுகளை பாதுகாத்து பத்திரப்படுத்தி வைப்பதற்கென்றே இதனை நாம் தொகுத்து வழங்க முன்வந்தோம்.
தப்லீக் ஜமாஅத் இந்தியாவின் தலைநகர் டில்லியில் மேவாத் எனும் கிராமத்தில் 1925ம் ஆண்டளவில் முழப்பர் நகரின் காந்தலவி எனும் ஊரில் பிறந்த மௌலவி இல்யாஸ் (பிறப்பு 1886- இறப்பு 1944) என்பவரால் துவக்கம் பெற்றதாகும். இந்த அமைப்பின் வெளித்தோற்ற நடை முறை அமைப்புக்கள் மௌலவி இல்யாசுடையது. ஆனால் இதன் கொள்கைக் கோட்பாடுகள் தேவபந்த் எனும் ஊரின் அறிஜர்கள் அகீதாவாகும். இதனை மௌலவி இல்யாஸ் தீனி தாவத் எனும் நூலில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இவ்விரு ஊர்களும் பக்கத்து பக்கத்து ஊர்களாகும்.
தேவபந்த் அறிஜர்களில் மௌலவி காசிம் நாநூதவி ( ஹிஜ்ரி 1248 - 1297 ஆங்கில வருடம் 1880 - 1833) மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி (ஹிஜ்ரி 1244 - 1323 ஆங்கில வருடம் 1829-1905) மௌலவி முஹம்மது யாகூப் நாநூதவி ( ஹிஜ்ரி 1249 - 1302 ஆங்கில வருடம் 1833 – 1884 ) மௌலவி மஹ்மூத் ஹசன் தேவபந்தி (ஹிஜ்ரி 1268 - 1339 ஆங்கில வருடம் 1851- 1920 ) மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் (ஹிஜ்ரி 1269-1346, ஆங்கில வருடம் 1852-1927) மௌலவி அஷ்ரப் அலி தானவி (ஹிஜ்ரி 1280 - 1362 ஆங்கில வருடம் 1863- 1943) போன்றோர் அதிகம் பேசப்படுபவர்களாகும்.
இவர்களெல்லாம் அஷ்ஷாஹ் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சீடர்கள் மட்டுமல்லாது சூபித்துவ கலீபாக்கள் ஆகவும் இருந்தார்கள். அத்துடன் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவின் தந்தை அஷ்ஷாஹ் அப்துல் கனியின் மாணவர்களாகும்.
இதில் மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் மாணவரும் கலீபாவுமாக மௌலவி சகரிய்யா ஸாஹிப் ( ஹிஜ்ரி 1315- 1402 ஆங்கில வருடம் 1897-1982 ) காணப்படுகிறார். இவ்விருவரும் புண்ணிய நகரம் மதீனா முனவ்வராவின் ஜன்னத்துல் முஆல்லாவில் நல்லடக்கம் சைய்யப்பட்டார்கள். மௌலானா சகரிய்யாவின் சிறிய தந்தைதான் தப்லீக் இயக்க ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் என்பவராகும்.
ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற மௌலவி இல்யாஸ், மௌலவி கலீல் அஹ்மத் சகாரன்பூரியின் முரீதும் கலீபாவும் ஆகும். எனவே தப்லீக் இயக்க அமைப்பின் தலைவர் மௌலவி இல்யாசுக்கும் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவிக்கும் நெருங்கிய ஆழமான ஆத்மீக தொடர்புகள் இருந்திருப்பத்தை உத்தியோகபூர்வமாக அறிந்து கொண்டோம். அத்துடன் இவர்கள் யாவரும் சூபித்துவ வழியில் ஆழமாக மூழ்கியவர்கள்.
ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற மௌலவி இல்யாஸ், மௌலவி கலீல் அஹ்மத் சகாரன்பூரியின் முரீதும் கலீபாவும் ஆகும். எனவே தப்லீக் இயக்க அமைப்பின் தலைவர் மௌலவி இல்யாசுக்கும் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவிக்கும் நெருங்கிய ஆழமான ஆத்மீக தொடர்புகள் இருந்திருப்பத்தை உத்தியோகபூர்வமாக அறிந்து கொண்டோம். அத்துடன் இவர்கள் யாவரும் சூபித்துவ வழியில் ஆழமாக மூழ்கியவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் (யாருடைய பெயர் முஹம்மது, அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]
என்பனபோன்ற இஸ்லாமிய கருத்துக்கு முரணான இஸ்லாமிய மார்கத்தின் ஆணிவேர் அறுத்தெறியும் நச்சுக் கருத்துக்களை எவ்வாறு கூறியிருக்க முடியும்? என்ற வினாவுக்கான பதிலைப் பார்க்கும் முன்னர் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் குடும்ப உறவினர்களின் கொள்கைக் கோட்பாடுகள் என்னவாக இருந்ததென்பதை அறியத்தரக் கடமைப்பட்டுள்ளோம்.
13ம் நூற்றாண்டின் முஜத்திதாகவும் மிகப்பெரிய சூபியாகவும் முஹத்தித் திஹ்லவி என்றும் வலியுல்லாஹ் என பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டவருமான அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ் அன்னவர்களின் இளைய மகனாகிய அஷ்ஷாஹ் அப்துல் கனியின் ஒரே புதல்வர் மௌலவி இஸ்மாயில் ஆகும். (பிறப்பு 26- 04-1779- இறப்பு 06—5-1831)
தொடரும்.............
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், பாரியார், புதல்வர் அஷ்ஷாஹ் அப்துல் கனி, மௌலவி இஸ்மாயில் ஆகியோரின் சமாதிகள். கப்ருகள் கட்டப்பட்டிருக்கிறது. பராமரிக்கபடுகிறது. பெயர்கள் பொறிக்கப்பட்திருக்கிறது.