السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 4 December 2015

தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் கொள்கை கோட்பாடு

தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் கொள்கை கோட்பாடு

மௌலவி அஷ்ரப் அலி தானவியின் வாழ்வில் பல நிகழ்வுகள் விருப்பமான நிகழ்வுகளாக இருந்துள்ளது. பஷன்தீதா வாக்கிஆ எனும் பெயரில் அந்நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது. அவை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்களினால் பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுமாகும். அவற்றில் ஒருசிலவற்றை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.
அருமை நாயகம் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருவுடல் பாதுகாப்பாக இருக்கிறது. பிற மத சகோதரர்களிடமும் இதே நம்பிக்கை இருந்துள்ளதென்று மௌலவி தானவி கூறுகிறார். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் பரிசுத்த ரவ்ளா ஷரீபை தோண்டி எடுத்துச்செல்ல வந்த நிகழ்வொன்றை அதற்கு சான்றாக குறிப்பிடுகிறார். (பக்கம் 178)
உம்மத்தினர்களுக்கு கிடைக்கப்பெறும் பாக்கியங்கள் அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் பரக்கத்தினால்தான் வந்தடைகின்றதென்று கூறிவிட்டு, நபித்தோழர் சைய்யிடுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் விருப்பத்தின்படி வஹி வந்ததெற்கெல்லாம் இதுவே காரணமாகும் என்று 110ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
ஒரு வலிய்யுல்லாஹ்விடம் விஷப் பாம்பு ஒன்று பைஅத் செய்து கொண்டது. அப்போது நீ யாருக்கும் தீங்கிழைக்க வேண்டாம் என்று அதனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அந்த பான்பு வாழ்ந்து வரும் சந்தர்பத்தில் ஷைக் அவர்களை அது சந்திக்கிறது. அதன் தோற்றத்தைக்கண்டு அதிர்சியுற்று உன்னை நான் யாருக்கும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன். அச்சுறுத்தக் கூடாதென்று சொல்லவில்லையே என்று கூறிச் சென்ற தகவலும் தானவிக்கு விருப்பமுள்ள தகவலாக 206ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ் கடமை பற்றி அழைப்புவிடுத்தபோது அவ்வழைப்பை உலகம் முடியும் வரை உள்ளவர்களுக்கு அல்லாஹ் சென்றடைய செய்ததுபோல கவ்துள் ஆழம் பாஸுள் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு அன்னவர்கள் எனது பாதம் எல்லா வலிமார்களின் பிடரியின் மீது இருக்கின்றதென்று கூறியபொழுது உலகம் முடிவுள்ளவரை உள்ள எல்லா வலிமார்களுக்கும் அல்லாஹ் சென்றடை வைத்து சிரம் தாழ்த்த வைத்தான் என்று 110ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
குத்புல் அக்தாப் கௌதுள் ஆழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறுத்து சமைத்து உண்ட கோழியின் முற்களை ஒன்று திரட்டி அதனை மீண்டும் உயிப்பித்த நிகழ்வினை அவருக்கு விருப்பமான நிகழ்வாக பதிவு செய்துள்ளார். பக்கம்
கௌது நாயகம் அவர்களுக்கு பணிவிடை செய்த சலவைத் தொழிலாளி ஒருவர் மரணமாகி நல்லடக்கம் சைய்யப்பட்ட பின்னர் அவரிடம் வருகை தந்த அமரர்கள், உமது ரப்பு யார்? நபி யார்? என்று வினவுகிறார்கள். நான் பெரிய குருநாதருக்கு சலவை பணி செய்பவன் என்றார். இதனைக் கேட்ட அமரர்கள் சிரித்துவிட்டு அவரையும் விட்டுச் சென்றார் என்ற நிகழ்வையும் விருப்பமுள்ள சம்பவம் என்று கூறிகிறார். (பக்கம் 36.)
இமாம் கஸ்ஸாலி நாயகம் அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயருள்ள சகோதரர் ஒருவர் இருந்தார். இமாம் கஸ்ஸாலி பள்ளிவாயில் ஒன்றில் இமாமாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சகோதரர் பள்ளிக்குச் செல்வதும் இல்லை. இமாம் ஜமாஅத்துடன் தொழுவதும் இல்லை. இதனை இமாம் அவர்கள் தாயாரிடம் முறைப்பாடு செய்கிறார்கள். தாயாரும் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுமாறு வேண்டிக்கொல்கிறார். ஒரு முறை பள்ளிக்கு சென்று இமாம் அவர்களின் பின்னால் கூட்டாகத் தொழுது கொண்டிருக்கும்போது தொழுகையை இடையில் விட்டுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
நடந்த நிகழ்வை இமாம் அவர்கள் தாயாரிடம் மீண்டும் முறையிடுகிறார்கள். அதற்கு,. இவர் தொழுவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர் உள்ளம் இரத்தம் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தது. தொழும் ஒருவரின் உடல் சுத்தமாக இருப்பதுபோன்று உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும். இவரின் உள்ளம் அசுத்தமாக இருந்தது. அதனால்தான் தொழுகையின் இடையில் வந்துவிட்டேன் என்ற நிகழ்வும் மௌலவி தானவிக்கு விருப்பமுள்ள நிகழ்வாக இருந்துள்ளது. பக்கம் 74.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார்
“யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.” [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41] 34
“அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் “[நூல் -தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ],
“அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.”
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
இஸ்மாயில் திஹ்லவியின் இவ்வாறான கருத்துக்கள் அல்லாஹ்வின் ரசூலையும் அவனின் நேசர்களையும் நோவினை செய்வதாக கருதப்பட மாட்டாதா?
இன் ஷா அல்லாஹ் தொடரும்..........

See More