السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 30 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 204

 அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை...

நிலையா உடலைவிட்டே உயிர் செல்லும் நேரத்திலே

அண்மையில் நடந்த இந்தோனேசிய விமான விபத்து மிகவும் துயரமானது. இறப்பு உண்டு என்பது,இறையடியார்கள் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் திடீர் மரணம் வந்துவிடக் கூடாது என்பது குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். எங்கிருக்கும் போது இறப்பு எப்படி வரும் என்பதை இறைவனே அறிவான்.எனினும் "அழகிய முடிவு"க்காக நாம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். ஒருவரின் இறப்பு எப்படி நேர்ந்தாலும் அதன் ரகசியத்தையும் மதிப்பையும் அறிந்தவன் அல்லாஹ்வே. சற்றும்...

Monday, 29 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 201

இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள். துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள். கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.       அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத...

சாந்த நபியின் சிறு பிராயம்

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் முன்பே தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்கள் அவர்களுக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள்  *மகனே* *மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா?* எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்கள்.       அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் ).. அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து...

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 203

என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது… அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன்...

ஏந்தல் நபி தாஹாவே

*ஏந்தல் நபி தாஹாவே* என் கவியின் நாயகரேஏந்தல் நபி தாஹாவேஉம் புகழை நினைக்கயிலேஇனிக்கிறது என் இதய நதி! முஹம்மதென்ற முத்துக்குள்என் சிந்தையை சிறைபடுத்திபுகழ் மாலை புனைகயிலேஇனிக்கிறது என் இதய நதி! கண்ணுக்குள் கரு மணியாகிகல்புக்குள் கலந்து உடலுக்குள்  உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!இனிக்கிறதே என் இதய நதி! கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன்  கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலேவிழிகள் தேடும் விடியலே! ✍🏻 *நூருல் ஈமானி...

Saturday, 27 October 2018

காசிம் நானூத்தவி பற்றி சதீதுத்தீன் பாகவி

ஒரு வழிகெட்ட வஹ்ஹாபியை வலியுல்லாஹ் என்று சொல்லி முஸ்லிம்களை வழிகெடுக்கும்"தப்லீக் சதியுத்தீன் பாக்கவி !* கண்மணி நாயகத்தை மிகவும் மோசமான முறையில் விமர்சித்த தேவ்பந்திய வஹாபியாகி காஃபிராகிப்போன காசிம் நானூத்தவி பற்றி சதீதுத்தீன் பாகவி " பெரும் மகான் " என்று புகழ்கிறார். தப்லீக் பாக்கவி 01   தப்லீக் பாக்கவி 2...

ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்

ஆப்ரஹாவின் யானைச்சண்டை நடை பெற்று 50 நாட்களுக்கு பின்னர் 12 ம் திகதி கி.பி 571 ஏப்ரல் 20 ம் திகதி திங்கட் கிழமை காலை நேரத்தில் ஆமினா அம்மையாருக்கும் அப்துல்லாஹ் என்பவருக்கும் அருமைப் புதல்வராக அண்ணல் நபி அவர்கள் பிறந்தார்கள். பிறக்கும் போதே தந்தையை இழந்து விட்ட முஹம்மது நபியவர்கள் பிறந்த செய்திப பாட்டனார் அப்துல் முத்தலிபின் காதுக்கு எட்டியதும் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. உடனே அவர் வந்து குழந்தையை அணைத்து தன் மடியில் அமர்த்தி முத்தமிட்டு...

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர்கள்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.... ஆனால், அவர்களது வீட்டிலோ வறுமை. ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும். இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,  ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 2567) கோதுமை...

Wednesday, 24 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 202

கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.  நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள்.  அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான்...

Tuesday, 23 October 2018

மாணவிகளுக்கான ஷரீஆ கற்கை நெறி

ஏறாவூர் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியில்  O/L, A/L படித்த மாணவிகளுக்கு மாத்திரம் 3 மாதம் ஷரீஆ கற்கை நெறியினை அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00  மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும். ehs; ghlk; jpq;fs; mfPjh nrt;tha; gpf;`; ...

Wednesday, 17 October 2018

மீலாத் விழாவுக்கான கேள்வி பதில்

2018 ரபிஉல் அவ்வல் மாதத்தில் ஏறாவூரில் நடை பெறும் மாபெறும் மீலாத் விழாவுக்காக அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்சி மிகச் சிறப்பாக நடைபெறும் . தேவையானவர்கள்  PDF இங்கே பெற்றுக் கொள்ளலாம். மீலாத் விழாவுக்கான கேள்வி பதில் 01 மீலாத் விழாவுக்கான கேள்வி பதில் 02 ...

Saturday, 13 October 2018

புனித ரபீவுல் அவ்வல் புகழ்ப்பா

தாஹா ரஸூலே திங்கள் ஹபீபே மதீனத்து மன்னரே மஹ்மூது மா நபியே விண் போற்றும் விந்தையரே மண் தேடும் மதி ஒளியே ஏழை ஏங்கி அழைத்திடும் எழில் ஓங்கும் ஏந்தலரே! 1) ஆமினாவின் அருள் மகவே தாங்கள் மலர்ந்த திரு நாளில் தரிசனம் யாசிக்கும் தங்களின் அடிமையின் பாவப் பிழை பொறுத்து ஏற்றிடுவீர் யாநபியே வாடி நிற்கும் பாவியை பாருமிந்த வேளையிலே 2) முத்து முஹம்மதரே! முழு மதி தாங்களே! அகிலத்தில் உதித்தீரே! அழியாத ஒளி விளக்காய்! ரஹ்மானின் புண்ணிய நேசராய் வந்துதித்தீர் ரஹ்மதுல்லில்...

Wednesday, 10 October 2018

நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது

 *நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது* *ظل ظل ظلت ظل الظل لا ظل له* *ظلا ظليلا ظلل الغمام بالمظال ظال*          (நாயகமே ஒளிமயமான தங்களுடைய) எதார்த்தத்தின் (அஸலின்) நிழலாக (பிரதியாக) ஆகிவிட்டீர்கள். (அந்த) எதார்த்தத்தின் நிழலாகிறது அதற்கு அறவே (சூரிய ஒளியில்) நிழலில்லை. (தாங்களுக்கு) மேகம் குடைப்பிடித்து நேர்த்தியான நிழலைத் தந்தது. (தாங்களோ எங்களுக்கு நாளை மறுமையில் *லிவாஉல் ஹம்து புகழ் கொடி* என்ற) கண்ணியம் மிகு...