*ஏந்தல் நபி தாஹாவே*
என் கவியின் நாயகரே
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
முஹம்மதென்ற முத்துக்குள்
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
கண்ணுக்குள் கரு மணியாகி
கல்புக்குள் கலந்து உடலுக்குள்
கல்புக்குள் கலந்து உடலுக்குள்
உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!
இனிக்கிறதே என் இதய நதி!
இனிக்கிறதே என் இதய நதி!
கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன்
கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலே
விழிகள் தேடும் விடியலே!
விழிகள் தேடும் விடியலே!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யாஹ்*
Manaleerul Anwar ladies arabic college Eravur Srilanka