இப்போ ஹதீஸுக்கு வாருங்கள்..வீடியோவை கீழே பார்வை இடவும்..
இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி #கிதாப்_அஹாதீஸுல்_அன்பியா #பாபு_வபாதி_மூஸா (அலைஹிஸ் ஸலாம்) என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 3407 அதே போல் #பாபு_மன்_அஹப்பத்_தபன_பிஃல்_அர்ழில்_முகத்ஸ்ஸதி_அவ்_நஹ்விஹா என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 1339, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், ஸுனன் நஸாயி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் எல்லாம் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.
ஸஹீஹ் உடைய நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருக்கும் நிலையில் மறுப்பதற்கும் இடமில்லாத நிலையில் ஹதீஸ் கலை வல்லுனர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருக்கும் ஹதீஸே இது..அதனால் தானே இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்..
#ஸஹீஹுல்_புகாரி
என்ற ஹதீஸ் கிரந்தம் தொகுத்து முடிப்பதற்கு ஏறத்தாள 16 வருடங்கள் சென்றது.எந்த அளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்தார்கள் என்றால் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் சொல்கிறார்கள்
ما وضعت في كتابي ( الصحيح ) حديثا الا اغتسلت قبل ذلك صليت ركعتين
என்னுடைய இந்த கிதாபில் ஒரு ஹதீஸை எழுதுவதென்றால் குளித்து இரண்டு ரக்கஅத் தொழுது விட்டுத்தான் எழுதுவேன் என்று சொல்கிறார்கள்...
என்றால் 7275 ஹதீஸ்களையும் எழுத முன் குளித்து வுழு செய்து இரண்டு ரக்கஅத் தொழுத பின் தான் எழுதுவார்கள் என்றால் எவ்வளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்து இருக்க வேண்டும்..
அதனால் தான் எல்லா இமாம்களாலும் ஏகோபித்த முடிவாக இப்புவியில் அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனுக்கு அடுத்த படியாக மிகச் சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுப்பு என்றால் அது ஸஹீஹுல் புகாரி என்று சொல்கிறார்கள்..
எனவே சிலரின் தவறான வாதங்கள் ஸஹீஹுல் புகாரியில் பலஹீனமான ( ழயீபான ) 20 ம் மேற்பட்ட ஹதீஸ் இருக்கு என்று சொல்கிறார்கள்..மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாத இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களும் உண்டு என்று சொல்கிறார்கள்..(உதாரணமாக சூனியம் பற்றிய ஹதீஸ் அஜ்வா பேரீத்தம் பழம் பற்றிய ஹதீஸ்) இன்னும் பல..
காரணம் இந்த ஹதீஸ்கள் பகுத்தறிவுக்கு முரணாகவும் ஷரீஅத்திற்கு முரணாகவும் இருக்கிறது என்ற சப்பைக்கட்டு வேற....
இவர்களுக்கு சவாலாகவே சொல்கிறேன் ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸ் ழயீப் (பலஹீனம்) அல்லது மவ்ழூஃ ( இட்டுக்கட்டப்பட்டது) என்பதை நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்..ஒரு நிபந்தனை யாரோ சொல்வதை எல்லாம் எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்ததை மட்டும் வைத்து பேசக்கூடாது..அறபியிலும், எல்லாக் கலைகளிலும் குறிப்பாக ஹதீஸ் கலையிலும் நல்ல திறமை உள்ளவர் வரலாம்.வாயல் எப்போதும் திறந்தே இருக்கும்..
சரி விடயத்திற்கு வருவோம்.மேற்கூறிய ஹதீஸ் புத்திக்கும் ஷரீஅத்திற்கும் முரணாக இருக்கிறதே!!
ஒரு நபி எப்படி மவ்த்தை வெறுப்பார்..?
மலக்கின் வேலை அல்லாஹ் என்ன சொன்னானோ அதை அப்படியே செய்ய வேண்டும் எந்த மாறுதலும் செய்ய முடியாது அப்படி இருக்க மலகுல் மவ்த் ஹழ்ரத் இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் எப்படி உயிரைக் கைப்பற்றாமல் அடி வாங்கிவிட்டு திரும்பிப் போவார்..?இது ஷரீஅத்திற்கு மாற்றமே!!
வந்தவர் மலகுல் மவ்த் என்பதை மூஸா அலைஹிஸ் ஸலாம் எப்படி அறியாமல் இருந்தார்..?
இதுவே இந்த ஹதீஸின் விமர்சனங்கள்..அதனால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது..
ஹதீஸ் என்பதும் வஹீ தான் என்பதை ஏற்கனவே தெளிவு படுத்தினோம்..லிங்க் கீழே 👇
https://m.facebook.com/story.php?story_fbid=953846502981880&id=100050696177320&mibextid=Nif5oz
அதே சமயம் வஹீயை மறுக்க முடியாது.அப்படி மறுத்தால் அவர் காபிர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் ஆவார்..
குறிப்பாக ஸஹீஹுல் புகாரியின் ஹதீஸை மறுத்தால் அதற்கு என்று தனி தீர்ப்பு உண்டு..எனவே ஹதீஸும் வஹியாக இருக்க வஹியும் வஹியும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளுமா என்றால் வஹியுடன் வஹி முரண்படவும் மாட்டாது...
உறுதியான (கதஇய்யத்தான) ஆதாரமான தெளிவான ஒரு ஹதீஸ் #புத்திக்கு முரண்படவும் மாட்டாது..
என்பதை இப்னு தைமியா தெளிவாகவே தன்னுடைய #தர்உ_தஆருழில்_அக்லி_வன்நக்லி
درء تعارض العقل والنقل
என்ற கிதாபில் சொல்லிக்காட்டுகிறார்..
11 பாகங்களைக் கொண்ட அருமையான கிதாப்.எதிர் கொள்கையானாலும் சரி இக் கிதாபுகளையும் படித்துப் பாருங்கள் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளலாம்..
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரோடு முற்றும்....
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்
+94 77 444 77 57