தொடர் 01 ல் நாம் இரண்டு விதமான வஹியைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னேன்..அதன் லிங்க் கீழே
1- அல் குர்ஆன் இது #வஹியுன்_மத்லுவ்வுன்
( وحي متلو )
2- அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா) இது #வஹியுன்_ஙைரு_மத்லுவ்வுன்
( وحي غير متلو )
இதன் சுருக்கம் அல் குர்ஆனும் அல் ஹதீஸும் #வஹி #இறை_செய்தி #இறை_தூது என்பதே!! இரண்டுமே வஹி என்றால் ஒன்றுக்கொண்று மோதிக்கொள்ளுமா..?வஹியுடன் வஹி முரண்படுமா..? என்பதே தலைப்பின் கேள்வி...
#வஹியுன்_மத்லுவ்வுன்_என்பது அல் குர்ஆன் இறை வேதம் இது அல்லாஹ்வின் தூது இறை செய்தி வஹி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
இந்த வசனத்தைப் பாருங்கள்
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
(சூரத்து அந் நஜ்ம் - 3)
اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
(சூரத்து அந் நஜ்ம் - 4)
இந்த இரண்டு வசனமும் வஹி என்பது இரண்டு வகை என்பதை தெளிவாக காட்டுகிறது..
1- அல்லாஹ்வால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அல் குர்ஆன்..இடத்துக்கு ஏற்றவாறு சூழ் நிலைகளைக் கவனித்து நேரடியாகவும்,ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வழியாகவும்,மணி ஓசை போன்ற அமைப்பிலும் இவ்வாறு பல ரூபங்களில் வஹி இறங்கியது.ஓதிக்காண்பிக்கப்பட்டது.மட்டுமல்ல இதை ஓதினால் நண்மையும் உண்டு.அதனால் தான் அல் குர்ஆனை #வஹியுன்_மத்லுவ்வுன்_என்று சொல்லப்படும்..
2- மேற்கூறியது போன்று அஸ் சுன்னா இதுவும் வஹிதான் என்பதை மேற்கூறிய வசனம் ( சூரத்து அந் நஜ்ம் - 3,4 ) எடுத்துச் சொல்கிறது..நன்றாக சிந்திக்கவும் புலப்படும்..
இப்போது இந்த வசனத்தைப் பாருங்கள்
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
(சூரத்து அந் நஹ்ல் - 44)
அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்ட வஹியான அல் குர்ஆனை #மக்களுக்கு_தெளிவுபடுத்துவதற்காக அருளப்பட்டது அனுப்பப்பட்டார்கள்...
எனவே தான் நேரடியாக கொடுக்கப்பட்டது #வஹியுன்_மத்லுவ்வுன்_என்றும் கொடுக்கப்பட்ட அவ்வஹியை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தவேண்டும்..அல்லாஹ் என்ன சொல்கிறான் அவர்கள் மனோ இச்சைப்படி எதையும் பேசமாட்டார்கள்.பேசினால் அது வஹிதான் என்று அல்லாஹ் சொல்கிறான்.அதனால் தான் அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா) .என்பது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன்_என்று அல்லது #வஹியுன்_மர்விய்யுன் என்று சொல்லப்படுகிறது..
எனவே அல் குர்ஆனுக்கும் கட்டுப்பட வேண்டும் அஸ் சுன்னாவுக்கும் கட்டுப்பட வேண்டும்...இரண்டுமே வஹி தான்..
இரண்டுமே வஹி என்பதை அல்லாஹ் சொல்லும் #திக்ர் ( ذكر ) என்ற வார்த்தையில் புரிந்து கொள்ளலாம்..மேற் கூறிய வசனத்திலும் அவ் வார்த்தை உண்டு அதே போல் இவ்வசனத்தைப் பாருங்கள்
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(சூரத்து அல் ஹிஜ்ர் - 9)
#சுருக்கமாகவும்_தெளிவாகவும்_சொல்வதென்றால்
أخبر تعالى أن كلام نبيه صلى الله عليه وسلم كله وحي
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சு எல்லாமே #வஹி என்று அல்லாஹ் சொல்கிறான்..
والوحي بلا خلاف ذكر
வஹி என்பது எந்த மாற்றுக்கருத்துமே இல்லாமல் அது #திக்ர்_என்று அல்லாஹ் சொல்கிறான்..
والذكر محفوظ بنص القرآن
#திக்ரை_அல்லாஹ் பாதுகாப்பதாக நேரடியாகவே #நஸ்ஸாகவே அல்லாஹ் கூறுகிறான்..
அல்லாமா இமாம் இப்னு ஹஸ்ம் அல் அந்துலிஸி ( ஹிஜ்ரி 384. - 456 ) ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_இஹ்காம்_பீஃ_உஸூலில்_அஹ்காம்
( الإحكام في أصول الأحكام )
என்ற நூலில் பாகம் 01 பக்கம் 98 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..
மேற் கூறிய ஏனைய விளக்கங்களும் அதே கிதாப் அதே பாகம் 01 பக்கம் 96 ல் 11 வது பாடத்தில் இடம் பெருகிறது...
அருமையான 8 பாகங்களைக் கொண்ட கிதாப்..கிதாபை படியுங்கள் இன்னும் நிறைய விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்...
எனவே அல் குர்ஆனும் அல் ஹதீஸும் ( அஸ் சுன்னா) இறை செய்தி இறை தூது வஹி தான் என்பதை அல் குர்ஆனின் மூலமே தெளிவாகிறது..அதனால் வஹியோடு வஹி ஒரு பொழுதும் மோதாது..வஹியுடன் வஹி முரண்படாது..
என்றால் புகாரி முஸ்லிம் இரு பெரும் கிரந்தங்களில் வரக்கூடிய ஹதீஸ் அதாவது உயிரைக் கைப்பற்ற இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் போன சமயம் அறைந்தார்களாம்...கண் வெளியே வந்ததாம்...
வாருங்கள் அடுத்த தொடரில் ....
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்