தொடர் 01
முரண்பாடுகளை தவிர்ப்பதென்றால் முதலில் மார்க்க கல்வியை சரி வர ஆய்வுக்குட்படுத்தி கற்க வேண்டும்..நாம் அறிந்தது தான் மார்க்கம் நமக்கு தெரிந்தது தான் மார்க்கம் என்ற நிலை வருமானால் அங்கே குழப்பத்திற்கு பஞ்சமில்லை..
#முதலாவது வஹியைப் பற்றி அறிய வேண்டும்..
வஹி என்பது #இறைதூது #இறைசெய்தி இது வார்த்தையின் கருத்து..வெறுமனே வார்த்தையின் கருத்தை மட்டும் சொன்னால் தெளிவாக புரிந்து கொள்ளலாமா..?என்றால் முடியவே முடியாது..
இங்கு இரண்டு விதமான வஹியை பார்க்கப் போகிறோம்.
1- அல் குர்ஆன் இது #வஹ்யுன்_மத்லுவ்வுன் (وحي متلو )
2- அல் ஹதீஸ் (அஸ் சுன்னா) இது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் ( وحي غير متلو )
இவை இரண்டையும் பார்க்க முன் வஹி இறைசெய்தியை இரண்டு விதமான கருத்துக்களில் நோக்கலாம்...
1- வஹியிற்கு குறிப்பான கருத்து..அதாவது இது நபிமார்களுக்கும் ரஸுல்மார்களுக்கும் மட்டுமே அந்த இறை செய்தி வரும். இது எல்லோரும் அறிந்தது...
2- வஹியிற்கு பொதுப்படையான கருத்து..அதாவது நபிமார்கள் அல்லாத மனிதர்களுக்கும் வரும் இதற்கு #இல்ஹாமிய்யத் இறை ஞான உதிப்பு என்று சொல்லப்படும்..அல்லது #அர்ருஃயஸ்_ஸாலிஹா நல்ல கனவின் மூலம் வரும் இவைகள் எல்லாம் வஹியின் பொதுப்படையான கருத்தில் அடங்கும்..
இவைகளை சற்று விரிவாக்கினால்
1-#வஹ்யுன்_நுபுவ்வத்_வர்ரிஸாலத்
( وحي النبوة والرسالة )
ஆதாரம் ..
اِنَّاۤ #اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْ بَعْدِهٖ #وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(சூரத்துன் நிஸா - 163)
2- #வஹ்யுல்_இல்ஹாம்
( وحي الإلهام )
இறை ஞான உதிப்பு...ஆதாரம்
#وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
(சூரத்து அந் நஹ்ல் - 68)
#وَاَوْحَيْنَاۤ_اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
(சூரத்து அல் கஸஸ் - 7)
3- #வஹ்யுல்_இஷாரா
(وحي الإشارة )
சைக்கினை மூலம் வஹி வரும் ..ஆதாரம்..
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ #فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
(சூரத்து மர்யம் - 11)
4- #வஹ்யுத்_தக்தீர்
( وحي التقدير )
ஆதாரம்..
فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ #وَاَوْحٰى_فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَحِفْظًا ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
(சூரத்து புஸ்ஸிலத் - 12)
இப்படி அல்லாஹ் #வஹிதான் அறிவித்தான்...இன்னும் நிறைய உண்டு வஹியைப் பற்றி எழுதுவதென்றால் மாதக்கணக்கில் எழுதலாம் அவ்வளவு விரிவான விஷயம்.. ..பதிவு நீண்டு செல்கிறது என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..
எனவே இவைகளை எல்லாம் தெரிந்தால் தான் நம் #தலைப்பின் தெளிவை இலகுவாக அறிந்து கொள்ளலாம்...
இன்னும் தலைப்பிற்குள் நுழையவில்லை..
எனவே அடுத்த தொடரில் மேற்கூறிய
#வஹ்யுன்_மத்லுவ்வுன்_வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் விபரத்தைப் பார்க்கலாம்....அங்கு தலைப்பிற்கு உட்படும் ஹதீஸ் வந்துவிடும்...
தொடரும்...
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்