புனித முஹர்றம் 10ம் நாள் ஆஷூறா தினத்தில் உலகில் அற்புதங்கள் அனந்தம். அவற்றுல் சிலதை இங்கு தருகின்றோம்.
- ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “தவ்பஹ்“இன்றுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- இன்றுதான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.இதில் கப்பலில் ஏறியவர்களும்,ஏற்றப்பட்ட மிருகங்கள்,பறவைகள் அனைத்தயும் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டன.150 தினங்கள் தொடராக பெரு மழை பொழிந்து உலகெங்கும் வெள்ளப்பிரளம் ஏட்பட்து.
- இன்றுதான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்
- இன்றுதான் சர்வதிகாரி நிம்றூதால் தீங்கிடங்கில் எறியப்பட்ட நபி இப்றாஹீம் அலைஹிஸ்லாம் காப்பாற்றப்பட்டார்கள்
- இன்றுதான் நபி யுனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
- இன்றுதான் நபி ஐயுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துன்பம் நீங்கியது.
- நபி யுசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரிவால் தேய்ந்திருந்த பார்வை நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்தது.
- இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்ட நபி யுசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
- இன்றுதான் உலகம் படைக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
- இன்றுதான் உலகில் முதன் முதலில் வானத்திலிருந்து மழை பெய்தது.
muharram