‘ஸம் ஸம்’ தண்ணீரின் பிறிதொரு அற்புதம்தான் தாகத்தையும் பசியையும் போக்கக்கூடிய திருப்திகரமான இயலுமையாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார். “இஸ்லாத்துக்கு முன்னர் இந்தத் தண்ணீர் சப்பாஹ் அளிப்பது திருப்திகரமானது” என அழைக்கப்பட்டது என்று.
அது அவருடைய குடும்பத்தைப் போஷித்து வளர்க்க உள்Zடாகவும் உதவியாகவும் அமைந்திருந்தது. இஸ்லாத்துக்குப் பின்னர் இந்தப் பலம் பொருந்திய நீர் தாகத்தைத் தணியச் செய்து வயிற்றை நிரம்பச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பூமியிலுள்ள மிகச் சிறந்த தண்ணீர் ஸம் ஸம் நீராகும். அது ஒருவகையான உணவாகவும் நோய் நிவாரணியாகவும் அமைந்துள்ளது என்று.
முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிற்கேற்ப, அபூதர் அலி கிப்பாரீ (தோழர் சஹாபீ) குறிப்பிட்டதாவது, தான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவுக்கு வந்தபோது ஒரு மாதம் பூராவும் ஸம் ஸம் நீர் அருந்தி தாகம் தீர்த்தது மாத்திரமன்றி, அந்த ஸம் ஸம் நீரால் தான் வாழ்ந்ததாகவும் அறிவித்துள்ளார்கள். மிக அண்மைக் காலமாகிய கடைசி ஒரு சில தசாப்தங்களில் விஞ்ஞானிகள் ஸம் ஸம் தண்ணீரின் சில மாதிரிகளை ஒன்று சேர்த்து அதில் அதிகமான கல்சியம் உள்ளதென்றும் அது சிறப்புத் தன்மையுள்ள ஆரோக்கியமான தண்ணீர் என்றும் கண்டுபிடித்தனர். இரண்டு அற்புதங்கள் உண்டு.
ஸம் ஸம் நீர் உடனடியாக மீள் நிரப்பப்படுவதும் அல்லாஹ் நிகரில்லாத ஸம் ஸம் கிணற்றுக்கு மேலதிகமாகக் கொண்டு வந்து ஊற்றாததும் அன்றி உலகமே அதில் மூழ்காததுமாகும். ஸம் ஸம் என்பதன் மொழிபெயர்ப்பு (ஹாஜரா (அலை) அவர்களால்) நில்! நில்! என்பதே அதன் பொருளாகும்.
பாணந்துறை
http://thinakaran.lk/2014/09/26/?fn=r1409262Add caption |