இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தமது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், கிழக்கு இஸ்லாமிய உலகின் பல நகரங்களின் ஆட்சியாளர்களால் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள்.
குறிப்பாக நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களில்.
இதற்குக் காரணங்கள் பல இருந்தன. அவற்றில் முக்கியமானவை:
ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்கு அவர்களது அரண்மனைகளில் கற்பிக்க மறுத்தது.
அதற்கு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறிய பிரபலமான வார்த்தை: “அறிவைத் தேடி வரப்பட வேண்டும்; அதை கதவுகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது.”
அவர்களுடைய புகழையும், உயரிய பண்புகளையும் பார்த்து சிலர் பொறாமை கொண்டது.
இதர பல காரணங்களும் இருந்தன.
#இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு வயது 62 ஆக இருந்தபோது,
நைசாபூர் ஆளுநரிடமிருந்து
“நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்; நீங்கள் இங்கு விரும்பப்படாதவர்” என்ற உத்தரவு வந்தது.
அதனால் அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேறி, தமது பிறந்த ஊரான புகாரா நோக்கி சென்றார்கள்.
#புகாரா நகரின் வாயிலில் மக்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர்.
அந்த மக்கள் அவர்கள்மீது பணமும், சர்க்கரையும் தூவி மரியாதை செய்தனர்.
மாணவர்கள், ஹதீஸ் அறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்தனர்.
இதனால் மற்ற ஹதீஸ் அறிஞர்களின் மத்ரஸாக்கள் வெறிச்சோடின.
இதுவே சிலரின் உள்ளங்களில் பொறாமையையும், கோபத்தையும் தூண்டியது.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பெரும் புகழைக் கண்டு,
புகாரா ஆளுநரும் விரைவில் கோபமடைந்தார்.
மேலும், நைசாபூர் ஆளுநரிடமிருந்து
“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் புகாராவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும்”என்ற கடிதங்களும் வந்தன.
ஒரு நாள், நகரின் ஆளுநரின் தூதர்,
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் வீட்டிற்கு வந்து,
“இப்போதே நகரை விட்டு வெளியேற வேண்டும்”என்று உத்தரவிட்டார்.
அந்த நேரத்தில், இமாம் அவர்களுக்கு தமது நூல்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஒழுங்குபடுத்தவும் கூட நேரம் வழங்கப்படவில்லை.
அவர்கள் நகரை விட்டு வெளியேறி,
நகரின் புறப்பகுதியில் ஒரு கூடாரத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.
அந்த நாட்களில் தமது நூல்களை ஒழுங்குபடுத்தினார்கள்.
ஆனால், எங்கு செல்ல வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.
பின்னர், அவர்கள் சமர்கந்து நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் நகருக்குள் நுழையாமல்,
அதற்கருகிலுள்ள “குர்தங்க் (خرتنك)” என்ற கிராமத்திற்குச் சென்றார்கள்.
அங்கு தமது உறவினர்களின் வீட்டில் விருந்தினராக தங்கினார்கள்.
அவருடன் இப்ராஹீம் பின் மஅ்கல் இருந்தார்.
அதிக நாட்கள் ஆகவில்லை.
சமர்கந்து ஆளுநரின் காவலர்கள் அந்த வீட்டின் வாசலுக்கு வந்தனர்.
அவர்களுடைய உத்தரவு:
“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், சமர்கந்தின் நகரத்திலோ, கிராமத்திலோ எங்கிலும் தங்கக் கூடாது. இப்போதே வெளியேற வேண்டும்.”
அந்த நாள் ஈதுல் பித்ர் பெருநாளுடைய இரவு
ஈதுக்குப் பிறகு அல்ல.
“இப்போதே” வெளியேற வேண்டும் என்ற கட்டளை.
தன்னை வரவேற்ற உறவினர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்பதற்காக,
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உடனே புறப்பட சம்மதித்தார்கள்.
இப்ராஹீம் பின் மஅ்கல்,
இமாமின் நூல்களை ஒரு விலங்கின் மேல் ஏற்றினார்.
மற்றொரு விலங்கைக் இமாம் அவர்களை ஏற்றுவதற்குத் தயார் செய்தார்.
பின்னர் வீட்டிற்குள் சென்று,
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களைத் தாங்கியபடி வெளியே அழைத்து வந்தார்.
சுமார் 20 அடிகள் நடந்தபின்,
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மிகவும் சோர்வடைந்தார்கள்.
அவர்கள்,
“சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதியுங்கள்.
என்று கேட்டார்கள்.
அவர் சாலையோரத்தில் அமர்ந்தார்கள்
பிறகு சிறிது நேரத்தில் தூங்கினார்கள்.
சில நிமிடங்கள் கழித்து,
இப்ராஹீம் பின் மஅ்கல் அவரை எழுப்ப முயன்றபோது,
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பரிசுத்தமான உயிர் அல்லாஹ்விடம் சென்று விட்டதை கண்டார்.
انالله وانااليه راجعون
இவ்வாறு,
👉 இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்)
👉 ஈதுல் பித்ர் இரவு
👉 1 ஷவ்வால், ஹிஜ்ரி 256
👉 வீதியோரத்தில்
👉 ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரம், மூன்றாவது நகரம் என விரட்டப்பட்ட நிலையில்
👉 62 வயதைத் தாண்டிய நிலையில்
இந்த உலகை விட்டு பிரிந்தார்கள்.
இன்று,
நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களின் ஆட்சியாளர்களின் பெயர்களை மக்கள் அறியமாட்டார்கள்.
ஆனால்,
உலகமெங்கும் அனைவரும் அறிந்த பெயர் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ்
அல்லாஹ் அவர்கள்மீது கருணை பொழிவானாக.
அவரின் தரங்களை உயர்த்தி,
நபிமார்கள், ஷஹீத்கள், சாலிஹீன்களுடன் உயரிய இடங்களில் சேர்த்தருள்வானாக.
ஸியர் அஃலாமுன் நுபலா பாகம் 12, பக்கம் 468
இந்த பதிவை முழுமையாக வாசித்திருந்தால்,
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத்து சொல்லுங்கள்.
என்காகவும் என்குடும்பத்திற்காகவும் துஆ செய்யுங்கள்







