السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 10 January 2026

வஹ்ஹாபிஷ_விஷச்செடிகளும்_புனிதமிக்க_புகாரி_மஜ்லிஸும்

 


#வஹ்ஹாபிஷ விஷச்செடிகளும் புனிதமிக்க புகாரி_மஜ்லிஸும் 


1- ஜஹான் பலாஹி 

2- சாபித் ஷரயி ரியாதி 

3- அஸ்ஹர் மதனி 

4 - சாதிகீன் மதனி 

இவர்கள் போன்று இன்னும் பலர் பல்வேறு பட்டம் பதவிகளை பின்னால் போட்டுக்கொண்டு வலம் வரும் இவர்கள் மார்க்க விடயத்தில் என்ன படித்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உண்டு...


புனிதமிக்க புகாரி மஜ்லிஸ் ஏன் நடக்கிறது..? என்பதே இன்னும் இவர்களுக்கு தெரியவில்லை..காரணம் தெரியாமலேயே #பித்அத் என்று தீர்ப்பு கூறி நரகவாதியாக தீர்ப்பும் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இவர்கள் நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகளே தவிர வேறில்லை..


#புகாரி_மஜ்லிஸ்_ஏன்_நடைபெருகிறது.?

أن قرآءة صحيح الامام البخاري رحمه الله تعالى سبب من أسباب تفريج الكرب ودفع البلاء 

இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் ஸஹீஹுல் புகாரியை வாசிப்பதால் அது துன்பத்திற்கு நிவாரணியாகவும் துன்பம்,பலாய் முஸீபத்துக்களை விரட்டக்கூடியதாகவும் காரணமாக அமைகிறது என்பது அறிஞர் பெருமக்களின் முடிவு..மட்டுமல்ல நன்மையும் உண்டு,பரகத்தும் உண்டு..


அதனால் தான் வருடா வருடம் குறிப்பிட்ட ஓர் மாதத்தில் ஓதப்படுவதும்.தண்ணீர் வைத்து அதை பரகத்திற்காக,நோய் நிவாரணிக்காக குடிப்பதும் இந்த மார்க்கம் அனுதித்த காரியம்..


இப்னு தைமியாவின் சிரேஷ்ட மாணவர் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸிய்யா தன்னுடைய 

زاد المعاد في هدي خير العباد 

#ஸாதுல்_மஆத்_பீஃ_ஹத்தியி_கைரில்_இபாத் என்ற கிதாபில் பாகம் 04 பக்கம் 244 ல் ஒரு தகவலை பதிவு செய்கிறார்..


ورأى جماعة من السلف أن تكتب له الآيات من القرآن ثم يشربها 

ஸலபுஸ் ஸாலிஹீன்களான நல்லோர்களில் சிலர் கண்ணூரு பிடித்த ஒருவருக்கு அல் குர்ஆன் வசனங்களில் சிலதை எழுதி அதை கரைத்து குடிக்க கொடுப்பதை சரி கண்டு இருக்கிறார்கள்...

وقال مجاهد لا بأس أن يكتب القرآن ويغسله ويسقيه المريض  

முஜாஹித் ரஹ்மஹுல்லாஹ் சொல்கிறார்கள்.

அல் குர்ஆனின் சில வசனங்களை எழுதி அதை கரைத்து நோயாளிக்கு குடிக்க கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..


ஆக எழுதிக் கரைத்து குடிப்பதற்கும் தண்ணீரை வைத்து ஓதி குடிப்பதற்கும் பாரிய வேறுபாடு இல்லை.அல் குர்ஆன் ஆயத்துக்களை எழுதி கரைத்துக் குடிப்பதற்கும் ஹதீஸ்களை வாசித்து அத்தண்ணீரை குடிப்பதற்கும் பாரிய வேடுபாடு இல்லை.ஏன்னா ஹதீஸ்களில் அல் குர்ஆன் வசனங்களும் உண்டு.குறிப்பிடப்பட்ட துஆக்களும் உண்டு. ஏன்னா அல் குர்ஆன் #வஹ்யுன்_மத்லுவ்வுன் அல் ஹதீஸ் #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன்..

இது புத்தியுடையோருக்கு,சிந்திப்போருக்கு எளிதானது..இது பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்..ஏன் எங்களுடைய இமாம்களின் கருத்தை சொல்லாமல் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸிய்யாவின் கருத்தை சொன்னேன் என்றால்... வஹ்ஹாபிஷ முல்லாக்களே முதலில் சூபியாக்கள் சூபியாக்கள் என்று குரைக்காமல் முதலில் நீங்கள் நாடு கடந்து போய் படித்து வந்தீர்களே!அங்கு உங்களுக்கு யாரின் கிதாபுகள் முக்கியப்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து முதலில் உங்கள் ஆசாமிகளின் கிதாபை படியுங்கள்...


நிற்க! புகாரி மஜ்லிஸ் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது சூபியாக்களால் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லி #இப்னு_அபீ_ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் தான் துவக்கி வைக்கப்பட்டது என்று ஜஹான் பலாஹி பேசுகிறார்..அந்தாளுக்கு தாடி காடுபோல வளர்ந்திருக்கே தவிர முளை வளரல்ல..


#இப்னு_அபீ_ஜம்ரா_ரஹ்மஹுல்லாஹ்


புகாரி ஷரீபில் அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஸலாஹ் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் கருத்துப்பிரகாரம் 7275 ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 3275 ஹதீஸ்கள் #முகர்ரர்..அதாவது மீண்டும் மீண்டும் ஒரே ஹதீஸ் பல விடுத்தம் பதிவு செய்யப்பட்டது..


இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

مختصر البخاري 

#முஃக்தஸருல்_புகாரி என்று ஒரு கிதாபை அதாவது 

مختصر ابن ابي جمرة 

முஃக்தஸர் இப்னு அபீ ஜம்ரா அல்லது 

جمع النهاية 

#ஜம்உன்_நிஹாயா என்று அறிமுகமான கிதாப்..மட்டுமல்ல 

بهجة النفوس 

#பஹ்ஜதுன்_நுபூஃஸ் என்று அழகிய விரிவுரை என்று இப்படி அறிமுகமான கிதாப் தான் #முஃக்தஸருல்_புகாரி_என்பது..


ஸஹீஹுல் புகாரிக்கு அற்புதமான ஒரு விரிவுரை தான் அது....எனவே இதை நீட்டுவதல்ல விஷயம்...

இவர்கள் மிக பிரபலமான புகாரி ஷரீபின் விரிவுரையாளர் என்று அறியப்பட்டவர்...

#முஃக்தஸர் ஆனது அதாவது சுருக்கமானது என்பதோடு முற்றுப்பெற்றதல்ல 

الاختصار 

அல் இஃக்திஸார் 

الاقتصار 

அல் இக்திஸார் 

என்று உண்டு.இரண்டுமே சுருக்கமானது என்ற கருத்தை தரக்கூடியது தான் ஆனால் 

الاختصار 

அல் இஃக்திஸார் என்பது வார்த்தைகள் சுருக்கமாக குறைவாக இருக்கும்.அதன் கருத்து ஆழமானதாக,அதிக பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் இதுவே அல் இஃக்திஸார்..

அதனால் தான் 

#முஃக்தஸருல்_புகாரி...297 ஹதீஸ்களை மட்டுமே எடுத்து எழுதி இருக்கிறார்கள்....


ஆக முதன் முதலில் புகாரி மஜ்லிஸ் மக்களை ஒன்று கூட்டி ஆரம்பித்தது இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் அல்ல..இவர்கள் பின்தொடர்ந்து வந்தவர்கள்....


#யாரை...??


#இமாம்_புகாரி_ரஹ்மஹுல்லாஹ் 


முதன் முதலில் மக்களை ஒன்று கூட்டி ஸஹீஹுல் புகாரியை வாசித்து மக்களை பிரயோஜனமடைய வைத்தது அல் ஹாபிழ் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களே!!

மக்கா ஹரம் ஷரீபிலே நடந்தது...

மட்டுமல்ல புகாரி ஷரீபை வாசிக்கக்கூடியவர்களுக்கு இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையும் உண்டு..


اللهم من قرأ كتابي هذا فاجعل له نصيبا من كل خير أنزلته على عبادك الصالحين 


யா அல்லாஹ்! யார் என்னுடைய இந்த கிதாபை வாசிக்கிறார்களோ அவர்களுக்கு உன்னுடைய ஸாலிஹான நல்லடியார்களுக்கு என்ன நலவுகளை இறக்கினாயோ அத்துனை நலவுகளிலிருந்தும் இதை வாசிக்கக்கூடியவர்களுக்கும் ஓர் பங்கை கொடுத்தருள்வாயாக!!


اللهم من قرأ كتابي هذا فاجعل له دعوة مستجابة ومغفرة ورحمة 


யா அல்லாஹ்! என்னுடைய இந்த கிதாபை யார் வாசிக்கிரார்களோ அவர்களின் துஆக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்குவாயாக!அவர்களுக்கு உன்னுடைய மஃபிரத் எனும் பாவ மன்னிப்பையும் ரஹ்மத் எனும் அருளையும் கொடுப்பாயாக!!


இக்கருத்தைப் பொதிந்த பல துஆக்கள் பொதுவாக கிதாப் எழுதக்கூடிய இமாம்களிடம் அவர்கள் தங்களின் கிதாபை வாசித்து பிரயோஜனத்தை அடையும் பொறுட்டு துஆ செய்வது வளமை...இதை பெரிய ஆதாரம்,சனது,ஸஹீஹ்,ழயீப் ,பித்அத் என்று இப்படி மக்களை குழப்பத்தில் வீழ்த்தும் விடயம் அல்ல....


பதிவை நீட்ட விரும்பவிலல்லை.அதனால் ஸஹீஹுல் புகாரி ஆண்டாண்டு காலம் வாசிக்கப்பட்டு பரகத்தை பெருவதும்,நன்மையை அடைந்து கொள்வதும் இடம் பெற்று வரும் விடயம்..ஹதீஸ் வாசிக்கப்படுகிறது.அதில் அல் குர்ஆன் வசனம் உண்டு அது ஓதப்படுகிறது.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய துஆக்கள் உண்டு ஓதப்படுகிறது.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் ஸலவாத் சொல்லப்படுகிறது..

இப்படி பல அமைப்பில் நன்மையை வருத்தி வைக்கும் இச்சிறப்பான மஜ்லிஸை எப்படி பித்அத் என விமர்சிக்கலாம்...??


குறிப்பிடப்பட்ட மாதத்தில் ஸஹீஹுல் புகாரி வாசித்து பூரணமாக்கி பரகத்தைப் பெருவது ஆண்டாண்டு காலம் நடைபெற்று வருகிறது என்பதை கீழ் வரும் கிதாபுகளில் காணலாம்..


* سير أعلام النبلاء 

* وفيات الاعيان 

* التكملة لكتاب الصلة 

* معجم أصحاب القاضي أبي على الصدفي 

* تذكرة الحفاظ 

* الوافي بالوفيات 

* معجم الشيوخ 

* المعجم المختص بالمحدثين 

* ذيل طبقات الحنابلة 

* المقصد الارشد 

* البداية والنهاية 

* أعيان العصر وأعوان النصر 

* الدرر الكامنة 

* ذيل التقييد في رواة السنن والاسانيد 

* الضوء اللامع 

* شذرات الذهب 

* التنبيه والايقاظ 

* المنهل الصافي 

* إنباء الغمر 

* فهرس الفهارس 

* البدر الطالع 

* التحفة اللطيفة في تاريخ مدينة الشريفة 

* الكواكب السائرة بأعيان المئة العاشرة 

* خلاصة الاثر في أعيان القرن الحادي عشر 


இன்னும் பல கிதாபுகள் அடுகிக்கொண்டே போகலாம்...முதல்ல மார்க்கத்தை சரி வர படியுங்கள்..கிதாபுகளை வாசியுங்கள் புகாரி ஷரீப் எத்துனை ஆண்டுகளாக வாசிக்கப்படுகிறது என்பது புரியும்...


புகாரி ஷரீபை வாசிக்கக்கூடியவர்களுக்கு இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை துஆ செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

سير أعلام النبلاء 


ஹதீஸ் கலையில் அமீருல் முஃமினீன் என சிறப்புப் பெயர் பெற்ற புகாரி ஷரீபின் விரிவுரை பத்ஹுல் பாரியின் ஆசிரியர் அல்லாமா அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

هدي الساري مقدمة فتح الباري 


தாஜுத்தீன் அஸ் சுபுக்கி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

الطبقات الشافية الكبرى 


அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

تاريخ الاسلام 

போன்ற கிதாபுகளில் பார்வையிடலாம்...


அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவர் அல்லாமா அல் ஹாபிழ் ஷம்ஷுத்தீன் அஸ் ஸகாவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

الإعلان بالتوبيخ لمن ذم أهل التوريخ 


என்ற கிதாபில் மக்கா மதீனா ஹரம்களில் புகாரி ஷரீப் வாசிக்கப்பட்ட விடயத்தை சொல்வதை பார்வையிடலாம்..மட்டுமல்ல 

عمدة القارئ والسامع في ختم الصحيح الجامع 


என்ற ஓர் அருமையான கிதாபை தொகுத்திருக்கிறார்கள்...


அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஷம்ஷுத்தீன் அஸ் ஸகாவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவர் அல்லாமா இமாம் கஸ்தலானி ரஹ்மஹுல்லாஹ் புகாரி ஷரீபின் விரிவுரை #இர்ஷாதுஸ்_ஸாரி கிதாபின் ஆசிரியர் 

تحفة السامع والقاري بختم صحيح البخاري 

என்ற ஓர் நூலையும் தொகுத்து இருக்கிறார்கள்....


இன்னும் நிறைய விடயங்கள் இது பற்றி எழுதலாம்....எனவே பல பெரும் பட்டங்களை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டு மடயர்களைப் போல் பேசாமல் திராணி இருந்தால் வாருங்கள் இது பற்றி பேசலாம்...நான் தயாராகவே இருக்கிறேன்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி ஸஹாபாக்களை அழைத்து புகாரி வாசித்தார்களா.?என்று பேசினார் பாருங்க ஜஹான் பலாஹி அங்க தான் நிக்கார் ஹாஜி...என்னா ஓர் அறிவு கூர்மை திறமை...அட வஹ்ஹாபிஷ ஷைத்தானே இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் பிறந்து ஸஹீஹுல் புகாரியை தொகுத்தார்களா சாமி..??


ஸஹீஹுல் புகாரியில் #கிதாபுத்_தவ்ஹீத் என்று ஒரு பாடம் இருக்காம்..அதைப் பார்த்தால் எல்லாரும் ஷிர்க்ல இருந்து உண்மையான தவ்ஹீதுக்கு வந்துருவாங்களாம்...எங்க கிதாபுத் தவ்ஹீத்ல உள்ள ஒவ்வொரு ஹதீஸா பார்க்கலாம் வர்ரீங்களா..?


புகாரி ஷரீபை பார்த்திருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை #விழிப்பில் பார்க்கலாம் என்று இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் வாதாடினார்கள் என்று தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கமாட்டார் ஜஹான் பலாஹி..

இப்படிப்பட்ட கிருக்கனுகள் தோன்றுவார்கள் என்று அறிந்ததால் தான் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பது பற்றிய ஹதீஸை புகாரி ஷரீபில் பதிவு செய்திருக்கிறார்கள்....


அதில் கனவில்,விழிப்பில் இரண்டு விடயங்கள் உண்டு.விழிப்பில் காணலாமா என்றால் ஆம் முடியும்..அது பற்றி பேசுவதென்றாலும் வாங்க பேசலாம்....அது பற்றி இங்கு எழுத இடம் கொடுக்காது.பதிவும் திசைமாறிப்போகும்,நீண்டு விடும் மட்டுமல் அது ஒரு நீண்ட ஆய்வுத் தொடர்....இன்ஷா அல்லாஹ் நேர காலத்தைப் பொறுத்து அதையும் எழுதுவோம்..


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57