மிஃராஜும் புனித இடங்களும்
***********************************
புனித இடங்களை நாடி செல்லுதல், அங்கு தொழுதல், துஆ செய்வது, நபிமார்களின் நடைபாதைகளை அறிதல் இதை மறுப்பவர்களுக்கு சிந்திக்க சில பதில்கள்.
மெளலவி எச் எம் யூசுப் முஸ்தபி ,காதிரி
Muhammed Yoosuf Musthafi
@top fans
இஸ்ரா (இரவு பயணம்) சம்பவத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான ஹதீஸ் இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.
இந்த ஹதீஸை
பஸ்ஸார் தனது முஸ்னத் (ஹதீஸ் எண்: 3484) இலும்,
தபரானி தனது அல்-முஅ்ஜமுல் கபீர் (ஹதீஸ் எண்: 1742) இலும் அறிவித்துள்ளார்.
ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) பத்ஹுல் பாரி (7/198) இல் கூறுகிறார்கள்:
“இதை இமாம் பய்ஹகி, தலாயிலுன் நுபுவ்வா*வில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக ஸஹீஹ் என உறுதி செய்துள்ளார்.”
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸில் வருகிறது:
“நாங்கள் (பயணத்தில்) பேரீச்சை மரங்கள் நிறைந்த ஒரு நிலத்தை அடைந்தோம்.
அப்போது (ஜிப்ரீல் அலையிஸ்ஸலாம்) என்னிடம்,
‘இறங்குங்கள்’ என்றார்.
நான் இறங்கினேன்.
பின்னர், ‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.
அதன் பிறகு நாங்கள் மீண்டும் பயணித்தோம்.
அப்போது மலக்கு என்னிடம்,
‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’ என்று கேட்டார்.
நான், ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று கூறினேன்.
அவர் கூறினார்:
நீங்கள் யஸ்ரிப் (மதீனா) நகரில் தொழுதீர்கள்.
பின்னர், அந்த புராக் தனது கால் எட்டிய தூரமெல்லாம் தாண்டி பறப்பது போல எங்களை எடுத்துச் சென்றது.
நாங்கள் ஒரு வெள்ளை நிற நிலத்தை அடைந்தோம்.
அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’
நான் இறங்கினேன்.
‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.
பின்னர் அவர் கேட்டார்:
‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’
நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.
அவர் கூறினார்:
‘நீங்கள் மத்யன் பகுதியில் தொழுதீர்கள் அது மூஸா அலையிஹிஸ்ஸலாம் அவர்களின் மரத்தருகில்.’
பின்னர் மீண்டும் அந்த புராக் எங்களை எடுத்துச் சென்றது.
அதன் பின் அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’
நான் இறங்கினேன்.
‘தொழுங்களா என்றார்; நான் தொழுதேன்.
பின்னர் அவர் கூறினார்:
‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’
நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.
அவர் கூறினார்:
‘நீங்கள் பைதுல் லஹம் (பெத்லகேம்) நகரில் தொழுதீர்கள் அங்கேதான் மர்யம் அவர்களின் மகன் ஈஸா அலையிஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.’”
இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகப் புரிகிறது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
நபிமார்களுடன் தொடர்புடைய புனித இடங்களில் நிறுத்தப்பட்டு
அங்கே தொழுமாறு கட்டளையிடப்பட்டார்கள்
இது
👉 புனித இடங்களை அறிதல்,
👉 அவற்றில் தொழுதல்,
👉 நபிமார்களின் நினைவுகளை உயிர்ப்பித்தல்
ஆகியவை ஷரீஅத்திற்கு முரணானவை அல்ல மாறாக நபிவழியில் உள்ளவை என்பதை காட்டுகிறது.
இன்ஷாஅல்லாஹ், இது இந்த விஷயத்தில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதிலாக அமையும்.
முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி
جزاك الله خيرا الجزاء







