السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 16 January 2026

மிஃராஜும் புனித இடங்களும்


 மிஃராஜும் புனித இடங்களும்

***********************************


புனித இடங்களை நாடி செல்லுதல், அங்கு தொழுதல், துஆ செய்வது, நபிமார்களின் நடைபாதைகளை அறிதல்  இதை மறுப்பவர்களுக்கு சிந்திக்க சில பதில்கள்.


மெளலவி எச் எம் யூசுப் முஸ்தபி ,காதிரி

Muhammed Yoosuf Musthafi 

@top fans 


இஸ்ரா (இரவு பயணம்) சம்பவத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான ஹதீஸ் இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.


இந்த ஹதீஸை

பஸ்ஸார் தனது முஸ்னத் (ஹதீஸ் எண்: 3484) இலும்,

தபரானி தனது அல்-முஅ்ஜமுல் கபீர் (ஹதீஸ் எண்: 1742) இலும் அறிவித்துள்ளார்.


ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) பத்ஹுல் பாரி (7/198) இல் கூறுகிறார்கள்:


 “இதை இமாம் பய்ஹகி, தலாயிலுன் நுபுவ்வா*வில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக ஸஹீஹ் என உறுதி செய்துள்ளார்.”


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸில் வருகிறது:


 “நாங்கள் (பயணத்தில்) பேரீச்சை மரங்கள் நிறைந்த ஒரு நிலத்தை அடைந்தோம்.

அப்போது (ஜிப்ரீல் அலையிஸ்ஸலாம்) என்னிடம்,

 ‘இறங்குங்கள்’ என்றார்.

 நான் இறங்கினேன்.

 பின்னர், ‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

அதன் பிறகு நாங்கள் மீண்டும் பயணித்தோம்.


 அப்போது மலக்கு என்னிடம்,

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’ என்று கேட்டார்.

 நான், ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று கூறினேன்.

 அவர் கூறினார்:

நீங்கள் யஸ்ரிப் (மதீனா) நகரில் தொழுதீர்கள்.


பின்னர், அந்த புராக் தனது கால் எட்டிய தூரமெல்லாம் தாண்டி பறப்பது போல எங்களை எடுத்துச் சென்றது.

 நாங்கள் ஒரு வெள்ளை நிற நிலத்தை அடைந்தோம்.

அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

 பின்னர் அவர் கேட்டார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் மத்யன் பகுதியில் தொழுதீர்கள் அது மூஸா அலையிஹிஸ்ஸலாம் அவர்களின் மரத்தருகில்.’


பின்னர் மீண்டும் அந்த புராக் எங்களை எடுத்துச் சென்றது.

 அதன் பின் அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

 ‘தொழுங்களா என்றார்; நான் தொழுதேன்.


பின்னர் அவர் கூறினார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் பைதுல் லஹம் (பெத்லகேம்) நகரில் தொழுதீர்கள் அங்கேதான் மர்யம் அவர்களின் மகன் ஈஸா அலையிஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.’”


இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகப் புரிகிறது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

  நபிமார்களுடன் தொடர்புடைய புனித இடங்களில் நிறுத்தப்பட்டு

  அங்கே தொழுமாறு கட்டளையிடப்பட்டார்கள்

இது


  👉 புனித இடங்களை அறிதல்,

  👉 அவற்றில் தொழுதல்,

  👉 நபிமார்களின் நினைவுகளை உயிர்ப்பித்தல்

  ஆகியவை ஷரீஅத்திற்கு முரணானவை அல்ல மாறாக நபிவழியில் உள்ளவை என்பதை காட்டுகிறது.


இன்ஷாஅல்லாஹ், இது இந்த விஷயத்தில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதிலாக அமையும்.


முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி

جزاك الله خيرا الجزاء