السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 17 July 2015

புது ஆடையும் பெருநாளும்

அஸஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... நண்பர்களே....!

Mohamad Nasir's photo.Mohamad Nasir's photo.
என் இனிய தோழமைகளே... உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...
எதிர்வரும் நாளையோ நாளை மறு தினமோ பெருநாளுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாம் பல tex tile களிள் பலவித ஆடைகளையும் உயர்தர ஆடை முதல் உள்ளுரிலும் வெளியூர்களிளும் கொள்வனவு செய்து பெருநாளை
எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல இந்த பரகத் நிறைந்த பெருநாளுக்காக 2...3... என்று கொள்வனவு செய்துள்ளோம்...ஆனால் ஆடைவாங்க பணமில்லாமல் நமது சகோதரர்கள் பெருநாள் சோகத்துடன் கழிந்து தான் போகின்றது...
இதை தடுக்க ஒவ்வோரு வசதி படைத்த முஸ்லீமாலும் முடியும்..... நீங்கள் துர பிரதேசத்துக்குத்தான் போக வேண்டும் என்று அவசியமில்லை உங்களது அன்டை வீட்டை பாருங்கள்... நம்மில் எத்தனைபேர் அன்டை வீட்டுக்காரர்களுக்கு ஆடை வாங்கி கொடுத்து இருக்கின்றோம்......! சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.! நமது பிள்ளையும் அன்டை வீட்டு பிள்ளையும் உரையாடிய உரையாடல் ஒன்று நான் நேரடியாக கண்டது......
அன்டை வீட்டு பிள்ளை :,- உடுப்பு எடுத்தாச்சா ...? உனக்கு உங்க வாப்பா எத்துன உடுப்பு எடுத்து தந்த ...?
அதற்கு நமது பிள்ளை 3 டவுசர் 2 சேட்டு 1டீசட்டு என்று பதிலளித்தது அதே கேள்வியை அன்டை வீட்டு பிள்ளையிடம் கேட்டதற்கு அப்பிள்ளையின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது..... அப்பிள்ளையின் மனம் எவ்வளவுக்கு பாதிப்படையும் ..! நாம் ஒருநாளைக்கு கறி வாங்குவதற்கே ஆக குறைந்தது 1000/= ரூபாய் தேவைப்படுகின்றது..... அப்படி இருக்க அன்டை வீட்டு பிள்ளைகளுக்ககு ஆடை வாங்க 1000/=, 500/= தான் தேவைப்பட போகின்றது
இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக செலவுசெய்யம் ஒரு ரூபாய் கூட மறுமையில் பண்மடங்காகின்றது எனவே நல்ல உள்ளம் படைத்த எமது சகோதரர்கள் நமது அன்டைவீட்டையும் கோஞ்சமாச்சும் கவனிங்கப்பா......