ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்) அவர்களைக் குறித்து அவர்களுது கிதாபாகிய ‘’தப்காதுல் குப்ராவில்’’ சேக் ஸாலிஹ் அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்) அவர்கள் பெண் பார்த்த விஷயத்தில் ஆபாசமான வாசகங்கள் உள்ளன என்றும், எந்த ஆலிமும் தங்களுது ஜும்ஆ மேடையில் அர்த்தம் வைத்து பேசினால் தனது ஜமாஅத்தையே களைத்து விடுகிறேன் என்று வீர வசனம் பேசிய வீடியோ ஒன்று முகநூல்,டெலிகிராம், வாட்ஸ்ஆப்களில் உலா வருகிறது.
இதை நாம் ஒன்று பெறிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நபி (ஸல்) அவர்களையும், உம்மஹாத்துல் முஃமினீன்களான நபியின் மனைவியர்களையும், ஸஹாபாக்களையும், இறை நேசர்களையும், மற்றும் நான்கு மத்ஹபுகளை உருவாக்கிய கண்ணியத்திற்குரிய இமாம்களையும் வசைபாடி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்) அவர்கள் எழுதிய கிதாபின் முழுப்பெயர்
(الطبقات الكبرى المسمى لوافح الانوار القدسية فى مناقب الاخيار الصوفية, الناشر: مكتبة الدينية, القاهرة )
‘’அத்தபாகாதுல் குப்ரா என சொல்லப்படுகின்ற இந்த கிதாபின் முழுப்பெயர்: ‘’லவாஃபிஹுல் அன்வாருல் குத்ஸிய்யா ஃபீ மனாகிபில் அக்யாரிஸ் ஸுஃபிய்யா’’ என்பதாகும். இதை எகிப்தைச் சார்ந்த ‘மக்தபா தீனிய்யா’ என்பவர்கள் வெளியீடு செய்திருக்கிறார்கள்.
ஸ்பெயினில் ஸுஃபியிஸத்திற்கு எதிராக பல போரட்டங்களும் குழப்பங்களும் மேற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் அல்லாமா இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதிய மிகப் பிரமளமான கிதாபாகிய ‘இஹ்யாவுல் உலூமுத்தீன்’ அல்லாமா முஹையித்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்களது பிரபலமான கிதாபாகிய ஃபுதூஹாதுல் மக்கிய்யா’ போன்ற கிதாபுகளை தீயிட்டு கொளுத்தவும் செய்திருக்கின்றனர். இன்று இஹ்யாவும், ஃபுதூஹாதுல் மக்கிய்யாவும் வாழ்கிறது. அதை கொளுத்தியவர் காணமல் போய்விட்டார்கள். அதே காலகட்டத்தில் தஸவ்வுஃப் கிதாபுகளில் விளையாடவும் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த விளையாட்டை ‘அத்தபகாதுல் குப்ராவிலும் காட்டியிருக்கிறார்கள்.
ஆதாரமாக போடப்பட்டுள்ள அந்த கிதாப்
(الطبقات الكبرى للشعرانى)‘’
அத்தபாகாதுல் குப்ரா லிஷ்ஷஃரானி’’ என்று மொட்டையான பெயரோடும், அந்த கிதாபை பப்ளிஷ் (வெளியிட்டவர்) யார்? என்ற தகவலோ, எந்த ஆண்டு? என்ற தகவலோ இல்லை. அதோடு மட்டுமல்ல, அந்த கிதாபின் பக்கங்கள் (Page Aliments Justify) ஒழுங்கு படுத்தப்படவில்லை. அது மோசடித்தனமாக இடைசெறுகல் செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டிக்கொடுக்கிறது. இது மக்தபுஷ் ஷாமிலாவிலும், கூகுலில் இலவச PDF கிதாபாகவும் கிடைக்கிறது. அசல் கிதாபில் அப்படி ஒரு வாசகம் இல்லை என்பதே தெளிவான முடிவாகும். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குழப்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!!