சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல் அன்மையில் 20-01-2015 அன்று ஏறாவூர் ஸாலீஹீன் பள்ளிவாயலிள் நடை பெற்றது.
இக்கூட்டம் ஏறாவூர் காழி நீதிபதி முன்னால் உலமா சபைத் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ ஏ.எம் அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இக்கூட்டத்துக்கு ஏறாவூர் பைஸானுல் மதீனா அறபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அப்துர் றஹீம் நூரீ (ஜெ.பி) அவர்களும் புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் றப்பானி அவர்ளும் மற்றும் ஏறாவூர் உலமா சபையின் செயலாளறும் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியன் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ யு.அப்துல் ஹலீம் மன்பயீ அவர்களும் மற்றும் பல அறபுக்கல்லூரி உஸதாதுமார்களும் கலந்து சிறப்பித்தார்கள்.