மட்டக்களப்பு கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி தீ வைப்பில் முடிவு
__________________________________
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மரண வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 22/12/2018 திகதி இரவு எற்பட்ட மோதல் காரணமாக, ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் தீ வைக்கப்பட்டுள்ளது.
__________________________________
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மரண வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 22/12/2018 திகதி இரவு எற்பட்ட மோதல் காரணமாக, ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அருகாமையிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மரண வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றுக்கும் அங்கிருந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தாக்கத்தின்போது ஒருவர்மீது பத்துக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த நபரின் முச்சக்கர வண்டியையும் இழுத்துச் சென்று வீதியில் போட்டு தீயிட்டு எரித்துள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதே நேரம் அப்பகுதிக்கு சென்ற குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.