السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 6 December 2018

பள்ளிவாசல் கட்டுமாணம்

பள்ளிவாசல் கட்டுமாணம்

விஷேட ஜூம்ஆ பயானும் -பள்ளிவாசல் கட்டுமாணம் மற்றும் மையவாடி உள்ளக வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வும்

ஏறாவூரில் பாரிய இடப்பற்றாக்குறையுடன் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் இயங்கி வரும் பள்ளிவாசல்களில் ஒன்றாக ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவசல் இருக்கின்றது, மழை காலம் வந்து விட்டால் பல்வேறு அளெகரியங்களை தொழுகைக்காக செல்லும் ஜமாஅத்தார்கள் எதிர்கொண்டு வந்தார்கள்..
இந்நிலையில் இந்த பள்ளிவாசலை எப்படியாவது நிர்மாணித்து விட வேண்டும் என்பதற்காக விஷேட நம்பிக்கையாளர் சபை தலைவர் ஜே.எம்.முஸ்தபா , மற்றும் செயலாளர் நியாஸ் ஆகியோர் அடங்கலான நிருவாக சபை உறுப்பினர்களும் ஜமாஅத்தார்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்,
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேரத்தின் போது அரசியல்வாதிகளது தேர்தல் ஏமாற்று ஜாலத்திற்கும் இந்த பள்ளிவாசலும் தப்பவில்லை- வெறும் வாக்குறுதியாகவே அது காற்றில் பறந்து போனது,
சளைத்து விடாத நிர்வாகத்தினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக உதவி கோரி தமது உதவி கோரும் முயற்சியை தொடர்ந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
முயற்சிக்கான முதற்கட்ட கதவு பல்வேறு தனவந்தர்களின் பங்களிப்புடன் தற்போது திறந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ் ஷேய்க் #யூசுப்#ஹனிபா (முப்தி) அவர்களது ஜும்ஆவை தொடர்ந்து மிகவும் அவசியமான கட்டட தேவை உள்ள இடமாக உணரப்பட்டு முயற்சிக்கப்பட்டு வந்த ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வரலாற்று நிகழ்வும் நடைபெற உள்ளதுடன் அணனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் #செய்யித்#அலி #ஸாஹிர் #மௌலானா அவர்களினால் வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் மையவாடிக்கு உள்ள வீதி அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் இன்று அலி சாஹிர் மௌலானா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
குறித்த நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது