பலாங்கொட ஜெய்லானில் தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது
December 7, 2018
நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நேற்று (06) ஆங்கிலப் பாடத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சை வினாக்களுக்கு விடை எழுத முற்பட்ட பரீட்சார்த்தியொருவர் பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட ஜெய்லான் வித்தியால பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசியையொன்றை இரு பாதங்களுக்கும் இடையில் வைத்துக் கொண்டு அதற்கு வரும் எஸ்.எம்.எஸ். தகவல்களை வைத்து விடை எழுதிக் கொண்டிருக்கையில் குறித்த மாணவன் பிடிபட்டுள்ளான்.
பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் உதவியுடனேயே இம்மாணவன் பரீட்சை எழுதியுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. இவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பலாங்கொட தெபெலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (டெ/சி)
நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நேற்று (06) ஆங்கிலப் பாடத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சை வினாக்களுக்கு விடை எழுத முற்பட்ட பரீட்சார்த்தியொருவர் பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட ஜெய்லான் வித்தியால பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசியையொன்றை இரு பாதங்களுக்கும் இடையில் வைத்துக் கொண்டு அதற்கு வரும் எஸ்.எம்.எஸ். தகவல்களை வைத்து விடை எழுதிக் கொண்டிருக்கையில் குறித்த மாணவன் பிடிபட்டுள்ளான்.
பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் உதவியுடனேயே இம்மாணவன் பரீட்சை எழுதியுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. இவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பலாங்கொட தெபெலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (டெ/சி)