பள்ளிவாயில்" என்றால் அது இரு வகைப்படும்.
ஒன்று: மஸ்ஜிதுத் தக்வா. இது அடியார்களை அல்லாஹ்வுடன் இணைத்து வைப்பதற்கான பாலமாக நிராமாணிக்கப்படும் பள்ளியாகும்.
இரண்டு: மஸ்ஜிதுத் ழிரார். இது அடியார்களை அல்லாஹ்வை விட்டும் பிரிப்பதற்காக நிர்மாணிக்கப்படும் பள்ளியாகும்.
இவ்விரு பள்ளிவாயில்களில் முதலாவது பள்ளிவாயில் அல்லாஹ்வின் தூதர்களினாலும் அவனின் அதிகாரிகளான அவ்லியாக்களினாலும் அமைக்கப்படும் பள்ளியாகும். முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான பள்ளியாகும்.
நபிமார்கள் மற்றும் வலிமார்கள் அல்லாஹ்வுடன் அடியார்களை இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் ஈருலகிலும் பள்ளியோடு தமது இருப்பை அமைத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது பள்ளிவாயில் முனாபிகீன்களினால் உருவாக்கப்பட்ட பள்ளியாகும். முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான பள்ளியாகும். இப்பள்ளிக்கும் நபிமார் மற்றும் வலிமார்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அதனால் நபிமார் மற்றும் வலிமார்கள் ஈருலகிலும் இவ்விடத்தை விட்டும் தூரமானவர்கள்.
இதில் முதலாவது பள்ளி பாதகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் அதேவேளை இரண்டாவது பள்ளி தகர்க்கப்படவும் வேண்டும். ஆனாலும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பள்ளிகள் பாழடைந்தும் உடைக்கப்பட வேண்டிய தளங்கள் உயரமாகவும் கட்டப்படுகிறது.
இது உலக அழிவின் அடையாளம்.