ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக்கல்லூரியின் இவ்வாண்டுக்கான இறுதியாண்டு பரீட்சை பெறுபேற்று அறிக்கை வழங்கும் நிகழ்வும் மாணவர் விடுமுறை விடும் நிகழ்வும் இன்று காலை கல்லூரியின் ஷாஹுல் ஹமீத்&பத்ருன்னிஸா வரவேற்பு மண்பத்தில் கல்லூரியின் அதிபர் ஷங்கைமிகு அல்உஸ்தாத். P MA ஜலீல் (பாக்கவி) ஹழரத் பெருந்தகை அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் எமது கலாபீடம் ஜனவரி 1ம் திகதி ஆரம்பிக்கப்படும்.இம்முறை அதிகளவான மாணவர்கள் மாணவர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு தோற்றி இருந்த போதிலும் தேர்வு அடிப்படையில் குறிப்பிட்ட அளவான மாணவர்களை மாத்திரமே கல்லூரி உள்வாங்கி இருக்கிறது. மிக சிறப்பான உலமாக்களை கொண்டு சிறப்பான மார்க்க கல்வியை வழங்கி வரும் எமது ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக்கல்லூரி மென்மேலும் உயர் நிலையை அடைய வல்ல இறைவன் துனை புரிவானாக!!!