நேற்று பதிவு செய்த இவ்விஷயத்தில் லிங்க்
https://www.facebook.com/share/p/eksjrm66gaFHGjhN/?mibextid=oFDknk
சிலருக்கு விஷயம் விளங்கவில்லை என நினைக்கிறேன்..அதில் என்னுடைய நெருங்கிய நண்பர் Ahamed Imthiyas அவர்களுடைய சந்தேகத்திற்கும் இன்னொருவர் Abu Ayzer இருவர்களும் அப்பதிவில் காமன்ட் எழுதியதை ஸ்கிரீன் ஷாட் தருகிறேன்..கிழே ...
#முதலாவது இந்த சந்தேகத்திற்கு பதில் அப்பதிவிலேயே உண்டு..
அதை கொஞ்சம் தெளிவு படுத்துவோமே!
துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பர்ழான தொழுகைக்குப் பின் கேட்கப்படும் துஆவும் இரவின் நடுநிசியில் ( தஹஜ்ஜுத்) ல் கேட்கப்படும் துஆவும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..
இது திர்மிதியில் வரும் ஹதீஸ்..இதை பலஹீனம் ழயீபானது என்ற குற்றச்சாட்டு உண்டு கூட்டு துஆ எதிர்ப்பாளர்களால்..( பலஹீனம் என்ற விஷயத்தில் அது உஸூலுல் ஹதீஸ் படி மருந்து கொடுக்க இருக்கு இன்னொரு நேரம் வரட்டும்..)
இப்ப ஹதீஸுக்கு வாங்க இந்த ஹதீஸில் أاي الدعاء أسمع என்று #அஸ்மஉ என்ற வார்த்தைக்கு நேரடி கருத்துக்கொடுக்காமல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதில் சொல்லித்தரும் கருத்தை கவனித்து அதாவது குறிப்பிட்டு இரண்டு நேரங்களை சொல்கிறார்கள் அதனடிப்படையில் துஆ கபூல் ஆகும் நேரம் எது என்று மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்...( அது சரி பிழை என்ற விஷயத்திற்குள் வந்தால் வேட்டி களரும் என்பதை ஞாபகப்படுத்தியவனாக)
ஆக இரண்டு நேரத்தில் கேட்கப்படும் துஆ கபூல் ஆகிறது...இன்னொன்றை விளங்கிக்கொள்ளுங்கள் துஆ விஷயத்தில் ஒன்றிற்கீழ் உடனே கபூல் ஆகும்..அல்லது தாமதமாகலாம்..அல்லது கபூல் ஆகாது மறுமையில் அது பிரயோஜனத்தைத் தரும் இந்த மூன்றுமே துஆவில் உள்ளடக்கப்பட்டது..ஆனால் துஆ கபூலே ஆகாது தன்னில் ஹராம் உணவு உடை போன்றவற்றில் கலந்திருந்தால்....
#இப்ப_ஹதீஸுக்கு_வாங்க..
இரண்டு நேரங்களை சொல்லி குறிப்பாக்கப்பட்டுள்ளது..ஆக ஹதீஸ் #காஸ் ( خاص )
ஆனால் இங்கு கூட்டாக,தனியாக என்பது பேசப்படவில்லை..
குறிப்பிட்டு பேசப்பட்டால் அச்செயலை குறிப்பிட்ட நேரத்தில் விரும்பியவாறு செய்யலாம் என்பது #காஸ்_خاص_ன் தத்துவம்..
அச் செயல் துஆவை நீங்கள் தனித்தும் கேளுங்கள் கூட்டாகவும் கேளுங்கள் எந்த தடையும் இல்லை..
எப்பொழுது தடை வரவில்லையோ அது ஆகுமானது என்பது பொதுவிதி
ஆனால் சிக்கல் என்னன்டா தனியாக இருந்து துஆ கேட்டாலும் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது ஹதீஸ் இதுதான் ஆப்பு....
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி ஸஹாபாக்கள் ஆமீன் சொல்லித்தான் இது காட்டப்பட வேண்டும் என்ற வாதம் மார்க்க அறிவு இல்லாமை..
செயல் மட்டும் தானா...?சொல் மார்க்கமில்லையா..?
அதான் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்ற சொல் இருக்கே!!!
இதுக்கு என்ன செய்வது..??
அப்ப கூட்டு துஆ என்றால் என்ன..?என்ற .கேள்வி மீண்டும் ஆரம்பத்திற்கே செல்ல வேண்டி வரும்..அதை மேலே லிங்க்ல பார்க்கலாம்..
கூட்டு துஆ என்ற ஒன்று இல்லை என்றால் ஏன் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்ற கேள்வியோடு...
இன்னும் விரிவு வேறு ஹதீஸ்களுக்குள் செல்லவில்லை என்பதை ஞாபகமூட்டியவனாக!!!
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
ஏறாவூர்
+94 77 444 77 57