ஆதாரங்களை அடுக்கி தேடி பித்அத் மார்க்கத்தில் இல்லை என்றெல்லாம் பேச முன்னாடி சிறு நுற்பத்தைப் பார்ப்போம்..
தனித்து துஆ செய்வது தான் உண்டு என்பது மார்க்கத்தில் இல்லவே இல்லை..மறுமை வரை அவகாசம் தனித்துத்தான் துஆ செய்ய வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தாருங்கள்..
#முதல்ல கூட்டுதுஆ என்றால் என்ன..?
"ஒருவர் துஆ ஓத ஏனையவர்கள் ஆமீன் சொல்லுதல்,,
இது தான் கூட்டு துஆ..
இது தொழுகையிலும் உண்டு தொழுகைக்கு வெளியிலும் உண்டு..
நீங்கள் துஆ செய்யும் போது உங்களுக்கு என்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்...
ஆக நீங்க எவ்வளவு தான் தனிய உக்காந்துக்கிட்டு எதைக் கேட்டாலும் யாருக்கு கேட்டாலும் உங்களுக்கென்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...
அப்ப எங்க தனித்து துஆ இருக்கு..??கூட்டு துஆ தான் இருக்கு..
#வலல்ழால்லீன் எனும் போது ஆமீன் சொல்கிறோமே இது விடயத்தில் #மலாயிக்கத்துமார்களின் ஆமீனோடு ஒன்றுபடுமானால் என்று ஏன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விடத்தில் மலாயிக்கத்துமார்களை சேர்த்தார்கள்..?
சிந்திக்கவும்..!!
ஆமீன் என்றால் #இஸ்தஜிப் ஏற்றுக்கொள்வாயாக!!!
யகூதிகள் ஆமீனுடைய விடயத்தில் பொறாமை கொண்டது போல் வேறு எதிலும் பொறாமை கொள்ளவில்லை என்பது ஹதீஸ்...
யகூதிகளுக்கு மாறு செய்யுங்கள் என்பதும் ஹதீஸ்..
அப்ப ஆமீன் அதிகரிக்கப்பட வேண்டும்..ஆமீன் அதிகரிக்க துஆக்கள் அதிகரிக்க வேண்டும்...
எனவே தஸ்பீஹ் செய்வது போல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று அதிகமாக சொல்லி யகூதிகளின் பொறாமைக்குணத்திற்கு மாறு செய்வதா..?துஆவுடன் ஆமீன் சொல்லி மாறு செய்வதா..?
இல்ல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் என்று கூறுவதில் என்ன உண்டு.?எதைக் கேட்டு ஆமீன் சொல்வது..?
சாரமாக!!நீங்கள் எவ்வளவு தான் தனியாக கத்தினாலும் கதறினாலும் அல்லாஹ்விடம் இறைஞ்சினாலும் #மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...
ஆமீன் சொல்பவர் மனிதனாக இருக்க வேண்டும்.சத்தம் காதில் கேட்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான விமர்சன நிபந்தனை கடல்லே இல்ல...அப்ப மலக்குமார்களின் ஆமீன் என்பதால் மார்க்கத்தில் கூட்டுதுஆவே தவிர தனித்து துஆவே இல்லை...
ஜனாஸா விடயத்தில் அவர் பற்றியதில் நல்லதையே சொல்லுங்கள் ஏனெனில் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பதும் தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்..
இப்ப தனியாக அவருக்காக எவ்வளவு துஆ செய்தாலும் மலக்குமார்களின் ஆமீன் உண்டு....ஆக தனித்து துஆ என்பது மார்க்கத்திலேயே இல்லை...
இப்ப அடுத்தகட்டம் வாங்க ஆதாரங்களோடு பேசலாம்..
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
ஏறாவூர்
+94 77 444 77 57