இன்று ஏறாவூர் அப்துர் ரஹ்மான் மாவத்தையில் அமைந்துள்ள அப்துுர் ரஹ்மான் மஸ்ஜிதில் 30 நாட்களாக ஓதப்பட்டு வந்த பரக்கத் பொருந்திய புனித புஹாரி மஜ்லிஸ் இன்று மிகவும் சிறப்பான முறையில் தமாம் செய்யப்பட்டு மார்க்க உபதேசமும் விஷேட துஆஃ பிரார்த்தனையும் நடை பெற்றது.
இந்நிகழ்வினைச் சிறப்பித்து நடாத்திய ஜமாத்தார்களுக்கும் உலமாக்களுக்கும் மத்ரஸா மாணவர்களுக்கும் தபர்ருக் வழங்கி வைக்கப்பப்டது.
இதனை ஏற்பாடு செய்த அம்மஸ்ஜித் நிருவாகிகள், கலந்து கொண்டோர்,பங்களிப்பு செய்தோர்,30 நாட்களும் மார்க்க உபதேசம் செய்த உலமாக்கள் அனைவருக்கும் இம்மஜ்லிஸின் பொருட்டினால் அல்லாஹ் பர்கத் செய்வானாக இஸ்லாத்தின் கடமைகளை கடைபிடிக்கக்கூடிய நல்லடியார்களாக்கி வைப்பானாக ஆமீன்.
புஹாரியுடை பரக்கத்தை பெற்றுக்கொண்ட நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக ஆமீன்