மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் போது ரபிய்யுள் அவ்வல் 12 இலேதான் நபிகளார் பிறந்தார்ளா என்றும் அது அவர்கள் மரணித்த நாள் என்று கூறி வஹ்ஹாபிகள் அந்த தினத்தை கொண்டாடமல் விடுவதற்கும் மீலாது கூடாது என்று கூறுவதற்கும் படாத பாடு படுத்துவார்கள் இது யஹூதிகளின் சதித்திட்டம் என்பதைக்கூட இவர்கள் அறியவில்லை
அதேபோல் மிஃராஜ் இரவு ரஜப் மாதம் 27 இல் தான் நபிகளார் மிஃராஜ் சென்றதற்கு பலமான ஆதாரமில்லை என்று கூறி இந்த தினத்தில் முஸ்லிம்களால் முஃமின்களால்
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நல்லமல்களில் மண்ணை அள்ளி போட பல பிராயத்தணங்களை இந்த யஹூதி நஸாராக்களது கைக்கூலிகளான வஹ்ஹாபிச வழிகேடர்களால் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் தான் ஷஃபான் மாதம் 15 ஆம் நாளில் பராஅத் இரவு ஒன்று இல்லை என்றும் நபிகளார் அப்படி அந்த தினத்தில் விசேட வழிபாடுகள் எதையும் காட்டி தரவில்லை என்றும் கூறி குறித்த தினத்தில் முஸ்லிம்களால் முஃமின்களால் செய்து வருகின்ற தர்மம் செய்தல் நோன்பு நோற்றல் போன்ற நல்லமல்களில் மண்ணை அள்ளி போட படாத பாடு படுத்துகிறார்கள்.
ஆனால் ரபிய்யுள் அவ்வலில் ஏதோ ஒரு தினத்தில் நபிகளார் பிறந்திருந்தாலும் அந்த பிறப்பை கொண்டாடுவது அந்த ரஹ்மதுல் லில் ஆலமீனை அருளாக எடுத்து அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதை ஏன் இந்த வழிகேட்டு வஹ்ஹாபிச கொள்கை வாதிகள் தடுக்க வேண்டும்? நபிகளார் காலத்தில் அது செய்யவில்லை ஆகவே நபிகளாரின் மீலாதும் கொண்டாட தேவையில்லை என்று கூறுவதாக இருந்தால் நபிகளாரின் காலத்தில் இல்லாத கூட்டு தறாவீஹ்,கூட்டு ஸகாத் வசூலிப்பு,குர்ஆனை ஒன்று திரட்டியமை,தர்ஜுமதுல் குர்ஆன்,ஸஹீஹா ல் ஈபா என ஹதீஸ்களை தரம்பிரித்தரியும் முறை, ஹதீஸ் கிரந்தங்கள், விரிவுரை நூற்கள்,முபஸ்ஸிரீன்கள்,வீடியோ பயான்கள், பளிங்கு கல் ஸஜ்தாக்கள், காற்சட்டை தொழுகைகள்,மதீனா யுனிவர்ஸிட்டிகள், குளிரூட்டப்பட்ட. பள்ளிவாசல்கள், குளிரூட்டப்பட்ட மார்க்கம் சார்ந்த மற்றும் மார்க்கம் சாராத வகுப்பறைகள்,யூடியூப் மூலமாக பயான்கள் எதுவுமே நபிகளாரின் காலத்தில் காணப்படவில்லை அப்படியானால் இதுவும் புதிதாக உருவாக்கப்பட்டது தானே அப்படியானால் இவற்றை பின்பற்றி வருபவர்கள் எல்லோரும் நரகவாசிகள் என்றால் இப்படி பேசபவர்களின் நிலையும் அதுவாக தானே இருக்க முடியும்?
ஆகவே நல்லதொரு விடயத்தை செய்வதற்கான ஆதரவும்,வரவேற்பும் உற்சாகமூட்டலும் இமாம்களின் தீர்ப்பும் மார்க்க பெரியார்களின் வழிகாட்டுதல்களும் முன்மாதிரிகளும் இருக்கும் என்றால் அதை அப்படியே செய்து விட்டு செல்வது தான் நமக்குள்ள வேலையும் கடமையும் என்றிருந்தால் யஹுதிகளது குழப்பத்தை நாம் தலையில் போட்டு தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ரஜப் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நபிகளார் மிஃராஜ் சென்றார்கள் என்று எடுத்து கொண்டு அந்த நிகழ்வையும் அந்த மாதத்தை கண்ணியம் செய்யும் பொருட்டும் முன்னோர்களான மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை சிறப்பாக எடுத்து கூறிய இமாம்களது தீர்ப்பு க்களை வைத்து அந்த தினத்தை ரஜப் மாதம் 27 இல் வைத்து அதில் நல்லமல்கள் செய்வதை ஏன் இந்த வழிகேட்டு வஹ்ஹாபிகள் தவிர்க்கவும் தடுக்கவும் முற்பட வேண்டும்?
யஹுதிகளுக்குதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணம் எரிச்சலாகவும் ,கேலியாகவும்,மதிக்காத ஒரு நிகழ்வாகவும் இருக்கும் மாறாக முஸ்லிம்களுக்கும்,முஃமின்கள்,நல்லடியார்களுக்கும் அது மகத்தான சாதனை புரிந்த நாளாகும் அல்லாஹ் அண்ணலாரை கௌரலித்த நிகழ்வாகும் மேலும் முஸ்லிம்களுக்கே இந்த ரஜப் மாதம் முக்கியத்துவமானனதாகும் இதை இல்லாமல் செய்ய திகதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தி அந்த சர்ச்சையை மக்கள் மத்தியில் நுழைத்து நபிகளாரின் கௌரவத்தை அவமதிப்பதற்காக யஹூதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகளில் ஏன் தான் இந்த முஸ்லிம் பெயர் தாங்கிகளும் சிக்குண்டாகி அதை விமர்சிக்க வேண்டும்?
ரஜப் 20 ஆக இருந்தால் என்ன ரஜப் 25 ஆக இருந்தால் என்ன ரஜப் 27 ஆக இருந்தால் என்ன எந்த திகதி என்று சரியாக அறியப்படவில்லை என்றால் அந்த திகதி ரஜப் 27 என்று இமாம்கள் குறிப்புணர்த்தி இருந்தால் அதை எடுப்பது தான் சரியான அனுகு முறையே தவிர அதை நாமே சந்தேகத்துக்குள்ளாக்கி எந்த ஒரு தினத்திலும் அந்த மாதத்தில் நல்லமல்கள் எதுவும் செய்யாமல் தானும் தவிர்த்து பிறரையும் தடுப்பதல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக பழைய காலத்தில் வீடுகளிலேயே குழந்தை பிரசவம் நடைபெறும் அப்போது அவர்களுக்கு சரியான பிறப்பு சான்றிதழ் பத்திரங்கள் கூட இருக்கவில்லை இந்த நிலையில் தற்காலத்தில் அவர்களின் பிறந்த நாள் இதுதான் என்று ஊகத்தின் அடிப்படையில் அரச கொடுப்பனவுகள் ஆட்பதிவுகளுக்கு ஏதோ ஒரு எடுகோள் மதிப்பின் படி பிறந்த நாள் ஒன்றை போட்டு உரிய ஆளடையாள அட்டையையும்,ஆவணங்களையும் செய்கிறோமா இல்லையா? எத்தனை பழைய மக்கள் இப்படி செய்து ஹஜ் உம்ரா கடமைகளை செய்து வருகின்றனர்.
இந்த விடயத்தை பிழைகண்டு சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டு இருந்தால் எந்த முயற்சியும் செய்யமுடியாமல் குறித்த விடயம் பிழையானது என கூறி கொண்டு தனக்கு தானே பத்வாக்களை வழங்கி கொண்டு அவர்களது ஹஜ் உம்ரா கடமைகளை கூட செய்யாமல் செய்ய விடாமல் இத்தகைய வாதங்களை முன்வைத்து கொண்டு யஹூதி நஸாராக்களது எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றி கொடுப்பவர்களாக இருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இது விடயத்தில் இவ்வாறு செய்வதில்லை ஏனெனில் இப்படி செய்வதால் மக்கள் மத்தியில் தமது மூடத்தனம் இன்னும் தெளிவாக விளங்கிவிடும் அதனால் அவர்களிடம் கொள்கைப்பிழைப்பு நடத்த முடியாது என்ற பயம்தான்.
அதேபோல் தான் ஷஃபான் மாதத்தில் பதினைந்தாவது நாள் நோன்பு நோற்பது ஸுன்னத்து என்றால் அதை எந்த பெயரை வைத்து கொண்டு நோன்பு நோற்றாலும் எந்த பெயரை வைத்து கொண்டு இரவில் நல்லமல்கள் புரிந்தாலும் அந்த தினத்தை கண்ணியப்படுத்தியவர்களாகவே நாம் ஆகிவிடுவோம் மாறாக இஸ்லாம் ஹறாமாக்கிய ஒன்றையோ வேண்டாம் என தெளிவாக தடுத்த ஒன்றையோ தவிர்த்து ஏனைய நல்லமல்கள் செய்வதற்கான பொதுவான ஏவல் அனுமதி அடிப்படையில் தான் அவைகள் செய்யப்படுகின்றன.மேலும் மார்க்க வழிகாட்டிகளான இமாம்கள் இப்படித்தான் வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு முன்னோர்களின் வழியில் சென்று அதன் மூலம் நல்லமல்கள் செய்து அந்த தினத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் வழிகாட்டிய விடயங்களை செய்வது தான் நமக்குள்ள கடமையும் பொறுப்பும் ஆகும்.
ஆழ்கடலில் நாம் திக்கு திசை தெரியாமல் தவிக்கும் போது அங்கே வருட காலமாக கடல் பயணத்தில் இருக்கும் மற்றும் ஒரு படகின் சாரதி நமக்கு சரியான திசையும் வழியும் காட்டுவார்கள் என்று நம்பிக்கை கொண்டு அவனை பின்பற்றி எப்படி கரையை அடைய முடியும் என நம்பலாமோ அதேபோல் மார்க்கத்தை விளங்கி அதை ஆராய்ந்து எமக்கான வாழ்வியல் பாதைகளை வழிகாட்டி வரும் இமாம்களையும், ஹக்கான இஸ்லாமிய அறிஞர்களையும் நம்பினால் அவர்கள் காட்டிய பிரகாரம் எமது மார்க்க விடயங்களை கடைப்பிடித்தால் நாமும் வழி தவற மாட்டோம் என்பதே வெள்ளிடை மலையாகும்.
சரியான அனுகு முறையாகும் மாறாக தடி எடுத்தவன் எல்லாம் வேட்டை காரணாக போய்விடுவதால் தான் மார்க்கத்தின் பெயரால் இவ்வளவு பிரிவுகளும் பிரிவினைகளும் பித்னாக்களும் ஆகும் என்பதை இனிமேலாவது சிந்தனை செய்து யஹூதி நஸாராக்களது சதிகளில் சிக்கி ஈமானை இழந்த கூட்டத்தில் சேராமல் இருப்பதற்கு வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரிவானாகவும் ஆமீன்.
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
7/2/2024