கல்முனை அஸ்டோ அமையம் தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை*
முதலாவது பயிற்சி பட்டறை நிறைவு
அல்ஹம்துலில்லாஹ்
கல்முனை அஸ்டோ அமையம் நடாத்தும் தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை* என்ற திட்டத்தின் முதலாவது பயிற்சி பட்டறை ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவை மற்றும் ஏறாவூர் ஸதகா பௌண்டேஷனின் அனுசரனையுடன் கடந்த 24-02-2024 அன்று ஏறாவூர் மனாழீருல் மகளீர் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
பயிற்சி பட்டறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வை ASSDO மீடியா யுனிட்டின் உறுப்பினர் S.L. றிஸ்கான் நெறிப்படுத்தினார்.
பயிற்சி பட்டறை அல்ஹாபிழ் A.K. M. ஹப்னானின் கிரா அத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திட்டத்தின் நோக்கம் பற்றி அஸ்டோ அமைப்பின் கௌரவ தலைவர் U.L. றியாழின் உரை இடம்பெற்றது . தொடந்து ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் மௌலவி A.A. இப்ராஹீம் ( அஸீஸி ) அதிபர் ஏறாவூர் நிழாமிய்யா அரபுக் கல்லூரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது
பயிற்சி பட்டறையை
NM_Nouzath_BA (Dep.in. Counselling, Master Dep.in. Counselling & Dip.in.Sp.Edu, Senior psychological counselor, Life coach &Trainer) அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
அதைத் தொடந்து கலந்து கொண்ட உலமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்
ஏறாவூரின் மூத்த உலமாவும், முன்னாள் காதியாருமான மௌலவி A.C. மஜீட் மிஸ்பாஹி, ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் A.A. இப்ராஹீம் ( அஸீஸி ) ஏறாவூர் ஸதக்கா பௌண்டேஸன் சர்பாக மௌலவி U.L. நவாஸ் உஸ்மானி, பயிற்சி பட்டறையின் வளவாளர் ஜனாப் N.M. நௌஸாத், அஸ்டோ அமைப்பின் தலைவர் U.L. றியாழ், உலமாக்கள், அஸ்டோ அமைப்பின் பொருளாளர் ரைய்யான், அஸ்டோ நூலக பொறுப்பாளர் அர்சக், அஸ்டோ ஜூனியர் பிரிவின் பொறுபாளர் ஜெசுலி ஹிகம், மற்றும் Assdo Voice மீடியா பிரிவின் உறுப்பினர்களான றிஸ்கான்,இன்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்து மௌலவி A.S.M. பர்ஹான் ஹஸனிய்யி இனால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு
இறுதியில் யா நபி பைத்துடன் நிறைவு பெற்றது.