புன்னக்குடா விதியிலுள்ள
அபூ ஸாலிஹ் தைக்கா.
உருவான வரலாறு.
1990 முந்திய காலங்களில் இந்திய உலமா பெருந்தகைகள் இலங்கை வருவதும். சில நாட்கள் தங்கியிருந்து பல பாகங்களுக்கும் செல்வது வழக்கமாக யிருந்தது.
அந்த வருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரக்க அதிகமாக சூபி ஷேஹ் மார்கள்
வருவது.
நமதூரக்கிடைத்த சிறப்பு.
அலஹம்துலில்லாஹ்.
விடயத்தக்க வருவோம்....
அபூஸாலிஹ் தைக்கா காணியானது.
பனமரத்தார் என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நபருடைய பூர்வீகக்காணியாக இருந்தது.
அந்தக் காணி வெற்றுக்காணியாக யிருந்தால் ஒலைக்கொட்டில் கட்டப்பட்டு குர்ஆன் மத்ரஸா இடம் பெற்றது. யாவரும் அறிந்ததே.
பனமரத்தாரது பரம்பரை தற்போது முன்றாவது தலை முறையும் ஊரிலுள்ளது.
பனமரத்தாரக்க பணத்தேவை வந்த போது இந்தக் காணியை அடகு வைத்துள்ளார் சிறிய தொகைக்க இருவருடமாகியும் மீளா முடியாது போனதால் காணி ஏல விற்பனைக்க வந்தது.
கடந்த காலங்களில் ஏலத்தக்க விற்பனை செய்வதை அறிவிக்க பரை அடித்த விளம்பரப் படுத்துவர்.
இவ்வாறு விற்பனைக்க வந்த காணியை யாரும் வாங்கக் கூடாது.
என்று பனமரத்தார் ஆவேசமாக பேசித் திரிந்தார்.
ஏலத் திகதி அன்று கிராம நீதி மன்ற வீதியில் வசித்த வந்த நபரை அழைத்தார் சரிபிய்யா இக் காணியை வாங்கிப் போடு. என்ற அறிவுரைக்க அமைய இந்தக்காணியை
அந்த தம்பி போடியார் வாங்கினார்.
இதனை அறிந்த பனமரத்தார் (வன்டில் மாடு வைத்திருந்தார்.)
பதுளை வீதியாக வந்த தம்பி ஹாஜியரது ஹவஸக்கி மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்தக்காணியை வாங்கிய உன்னை வண்டில் மாட்டால் குத்திக் குரல்வலை எடுப்பேன் என்று வாக்கு வாதமாகி களைந்த கதையுமுண்டு.
பனமரத்தாரக்க காணி யை இழந்ததை விட கௌரவம் பார்ப்பது நமது மூததையர்களின் மரபாக இருந்தது.
ஏலத்தில் விற்பனை யானதை தரக்குறைவாக நினைத்து வந்த கோபமே அது.
இவ்வாறு வாங்கப்பட்ட காணியில் மத்ரஸா இடையூறாது நடை பெற்றது. இந்தக்காலப்பகுதியில் தற்போதைய
நகர சபை பட்டினசபையாக இருந்தது.
இதில் தம்பி ஹாஜியார் காணிப் பெயர் மாற்றம் செய்தார்.
அந்த ஒரிஜினல் பிரதியுமுண்டு அவரிடம்.
இந்தக்காணியில் காலப்போக்கில் மத்ரஸா பிள்ளைகள் அஸர் தொழுவது வழக்கமாகி அந்த சமயத்தில் அயலிலுள்ளவர்களும் கலந்து பள்ளியாக மாறுவதை கண்ட தம்பி ஹாஜியார்.
எனது அனுமதி பெறாமல் செய்வது தவறு என்று கோபமாக சண்டை ஒன்றும் நடந்தது.
இப்பள்ளிவாயல் அருகிலே LTTE காரியாலம் ஒன்று.
இதில் ஓட்டுப்பள்ளி காணின்ட உம்மா மகன் சரிபுத்தீன் பொறுப்பதிகாரியாக இருந்தார்..
இவரை சரிவு என்று அழைத்தனர். இவரது நண்பர்கள் பதுர் ஒரு கூறுப் இருந்தது.
தம்பி ஹாஜியாரிடம் விசாரித்த சரிவு தவறு என்று. கூறி கலைந்து விட்டனர்.
ஒரிறு நாட்கள் பிறகு சிறிய பள்ளியாக இயங்கிய இந்தப் பள்ளிக்க நடு இரவில் கிரினட் எரியப்பட்ட ஒரு பகுதி சேதமாக்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் வந்து போன அபூஸாலிஹ் தங்கள் வாப்பா கொழும்பிலிருந்து அழைப்பு விடுத்தார்.
ஏறாவூர் தம்பி ஹாஜியாரை.
அவரைச் சந்திக்கப்போன தம்பி ஹாஜியாரக்க
ஒரு விடயத்தை சொல்லி பிரச்சனை யை சுமூகமாக தீர்த்து வைத்தார்.
அவர் சொன்ன விடயம் நாளை மறுமையில் உனக்க அல்லாஹ் வின் ஒரு மாளிகை வேண்டுமா.
அந்த நிலம் வேண்டுமா.
இவ்வாறே நமது முன்னோர்களை ஷேஹனாக்கள்
தங்கள் மார்கள்
குடும்ப பிரச்சனை யாகட்டும்.
சகல பிரச்சனை களையும் பள்ளியிலயே சமரசமாக்கினர்.
யாரும் பொலிஸ் நிலையத்தக்கோ
கோட்வாசல்களில்
நமது முஸ்லீம் போவது மிகவும் அரிது.
அதனாலே முஸ்லீம்களக்க
அதிக மதிப்பு இருந்தது.
இன்றைய நிலமை
தலைகீழ்.
பின்னர் அபூஸாலிஹ் தைக்காவாக இயங்கியது.
இவரது மகன் ஜேர்மனியிலுள்ளார்.
அனைவரும் கபுராலியாகப் போனார்கள்
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக
தொடரும்