السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 6 August 2025

பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்

 


பெற்றோர்கள் பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்

பாடசாலையில் வீண் பிணக்குகளைத் தடுக்கலாம்.

----------------------------------------------------------------------------------

அன்பான பெற்றோர்களே!

எமது பிள்ளைகள் பாடசாலைக்கு ஆயத்தமாகிச் செல்லும்போது கவனம் செலுத்துகிறீர்களா?

பிள்ளையின்

* தலைமுடி பாடசாலை மாணவர்களுக்குப்

   பொருத்தமானதாக வெட்டப்பட்டுள்ளதா?

* சீருடை நேர்த்தியாக உள்ளதா?

* பாடசாலை இலச்சினை

   கழுத்துப்பட்டி முறையாகக் 

   கட்டியுள்ளாரா?

* பாதணிகளை அணிந்துள்ளாரா?

* புத்தகங்கள், புத்தகப்பை ஒழுங்காக

   உள்ளதா?

* தேவையற்ற பொருட்கள் ஏதாவது

   உள்ளதா?

* பாடசாலைக்கு சென்றடைவதற்குப்

   போதிய நேரத்தில் 

   பயணமாகிறாரா?

* சேர்த்து செல்லும் நண்பர்,நண்பிகள் 

   யார்?

* பாடசாலை முடிந்து உரிய நேரத்திற்கு

   வீடுவந்து சேர்கிறார்களா?


போன்ற விடயங்களில் பெற்றோர்கள் கவனமெடுக்காதபோது பாடசாலையில் இவைகளுக்காக அதிக நேரமொதுக்க வேண்டி ஏற்படுகிறது.

கண்டும் காணாமல் விடமுடியாது. இதனைச் சரிசெய்யும் முயற்சிகளின் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தொடர் முரண்பாடு தோன்றுகிறது.


மாணவர்களை ஏதோவொரு முறையில் கட்டுப்படுத்த முற்படும்போது பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுப்பதன் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது.

இதனால் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் கற்பித்தலோடு நின்று விடுகின்றனர். இது மாணவர்கள் ஒழுக்கவீனங்களுக்கு வித்திடுகிறது.


மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அடைவு மட்டம் தொடர்பாக கலந்துரையாடலுக்கு பெற்றோர்களை அழைக்கும்போது யாரோடு விடயங்களைக் கலந்துரையாடவேண்டிய தேவை உள்ளதோ. குறிப்பாக அப்பெற்றோர் கூட்டத்திற்கு வருவதில்லை.

ஆனால் பிள்ளைகளின் ஒழுக்கம்பற்றி ஆசிரியர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால். சட்ட வல்லுனர்களாக சண்டைக்கு வருவது அவர்களே!

ஆசிரியர்கள்மீது குறைபாடிருந்தால் பெற்றோர்கள் கேட்கவேண்டும். அவ்வாறே பிள்ளைகளின் விடயம் சம்பந்தமாக பெற்றோர்களை அழைக்கும்போதும் பாடசாலைக்குள் வரவேண்டும்.


எனது பிள்ளையின் ஒழுக்கத்திற்கு நானே முதலில் பொறுப்பேற்கவேண்டும்.

பிள்ளையின் அடைவுகள்,பாராட்டுக்கள், வெற்றிகளைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும்.

மாறாக பிள்ளைகள் வழிதவறும்போது நல்வழிப்படுத்தவேண்டியதும். தோல்வி அடையும்போது தட்டிக்கொடுத்து சரியான பாதைக்கு வழிகாட்டுவதும் பெற்றோரின் கடமையே.


எனது பிள்ளை அறிவாளி,கெட்டிக்காரர் என்பதைவிட ஒழுக்கமானவர் என்பதே நிலைபேறானது.


கால் நூற்றாண்டுகடந்த கல்விப்பணி மற்றும்

இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவே இதை எழுதினேன்.


படங்கள் முகநூலில் பெற்றது.


நன்றி

மாணிக்கம். இளங்கோ

FB