அல்லாஹ்வின் நேசர்களின் அடக்கஸ்தலங்கள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும் !
இமாம் ஷாபிஈ رضي الله عنه மற்றும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه ஆகியோரது கொள்கை :
قال الإمام الشافعي رحمة الله عليه : قبر موسى الكاظم ترياق مجرب الإجابة الدعاء، وقال حجة الإسلام محمد الغزالي: كل من يستمد به في حياته يستمد به بعد وفاته، وقال أحد من المشايخ العظام : رأيت أربعة من المشايخ يتصرفون في قبورهم كتصرفهم في حياتهم أو أكثر، الشيخ معروف الكرخي، والشيخ عبد القادر الجيلي ، وذكر رجلين غيرهما
!
இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் ,
" நாயகத் திருப்பேரர் இமாம் மூஸல் காழிம் رضي الله عنه ( இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்களது அருமை மகனார்) அவர்களது சங்கைமிகும் கப்ரு துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடமாகும். இது அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்ட மருந்தாகும் "
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் ,
" எவரொருவர் தமது வாழ்நாளில் ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது உதவி தேடினாரோ,அவரது வபாத்திற்குப் பின்னரும் அவரிடம் உதவி தேடுவது கூடும் ."
[ நூல் ஆதாரம் 📕 ஷரஹு மிஷ்காத் அல் மஸாபீஹ் ,பாகம் 4,பக்கம் 215 ]