السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 20 August 2025

ஏழையின் தர்மம்

 

#ஒரு நாள், ஒரு முதிய பெண் ரூமி நாயகத்திடம் வந்தாள்.

அவள் மிகவும் வறுமையில் இருந்தாள்,

ஆனால் அவள் கையில் ஒரு பழைய துணிக்கம்பளி இருந்தது.


அவள் கூறினாள்:

“உஸ்தாத்! நான் மிக ஏழையாக இருக்கிறேன்.

ஆனால் உங்களின் அறிவும் ஞானமும் எனக்கு மிகப்பெரிய அருள்.


"என்னிடமுள்ள சிறிய கம்பளியை உங்களுக்குக் கொடுக்க வந்துள்ளேன்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.”


#ரூமி நாயகம் அந்த கம்பளியைப் பார்த்து சிரித்தார்.

அவர் சீடர்களிடம் சொன்னார்:

“இந்தக் கம்பளி தங்கத்திற்கும் மேலானது.

ஏன் தெரியுமா?

ஏழையிடமிருந்து வரும் கொடை,

அவன் உள்ளத்தின் அன்பில் மூழ்கியிருக்கும்.


ஒரு ராஜா ஆயிரம் தங்கக் காசுகளை கொடுத்தாலும்,

அதில் பெருமை கலந்து இருந்தால் அது குறைந்த மதிப்பு உடையது.

ஆனால் இந்த பெண் தனது வறுமையிலேயே

முழு இதயத்துடன் கொடுக்கிறாள்.


إنَّما الأعْمالُ بالنِّيّاتِ 


மெளலவீ:- அப்துல் மலிக் { நஜாஹீ }


2025.08.21