கண்ணியமிக்க முஸ்லிம்களே.!
தவறு செய்தவர்களோடு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பழகுகிற பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஒருமுறை இளைஞர் ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு அந்நியப் பெண்ணோடு தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இதை அந்த வழியாக வந்த பெருமானார் பார்த்துவிட்டார்கள். என்ன ஹவ்வாப், இங்கே என்ன பண்றீங்க? யா ரசூலல்லாஹ்! என்னுடைய ஒட்டகம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடி வந்தேன்னு "பொய்" சொல்லிவிட்டார். இவர் கூறியது பொய் என்று ரசூலுக்கு தெரியாமலா இருக்கும்?
அதன்பிறகு, நபியவர்கள் என்னை பார்க்கும் நேரமெல்லாம் காணாமல்போன ஒட்டகம் கிடைத்துவிட்டதா? எனக் கேட்கலானார்கள். இன்னும் கிடைக்கவில்லை நாயகமே! ஒரு பொய்தான். அதற்கு பின்னாலே மறுபடியும் மறுபடியும் பொய்.
ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, எனக்கு ஒரு பெரிய பே (கெட்ட) நஸீபாகிப் போச்சு. ரசூலின் பார்வையிலிருந்து மறைந்து வாழ ஆரம்பித்துவிட்டேன்?! நபியை பார்த்தால்தானே கேட்பார்கள். நாம நிர்பந்தமாக பொய் சொல்லனும். முனாபிக்கள் மட்டும்தான் எங்கள் காலத்திலே நபியவர்கள் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் பின்னால் ஸஃப்பில் வந்து சேர்வார்கள். நபி ஸலாம் வாங்கியவுடன் ஓடிவிடுவார்கள். இந்த வேலையை சிறிது காலம் நான் செய்துகொண்டு இருந்தேன்னு சொல்றாங்க.
என்னால் நிம்மதியாக தொழ முடியவில்லை. நபியை பார்க்க முடியவில்லை. என் வாழ்நாட்களில் துர்பாக்கியமான நாட்கள் அந்த நாட்கள். அல்லாஹ்விடம் துஆ செய்தேன், யா அல்லாஹ்! என்னை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டுவந்துவிடு என்று.
ஒருநாள் மஸ்ஜிதுன் நபவியின் பக்கம் வந்தேன். ஜமாஅத் தொழுகையில்லாத நேரம். இன்றைக்காவது நிம்மதியாக தொழுவோம் என்று தக்பீர் கட்டித் தொழ ஆரம்பித்தேன். நபியவர்கள் என் பக்கத்திலே வந்து அமர்ந்துகொண்டார்கள். நான் தொழுகையை நீட்டினேன். நீ எவ்வளவு நீளமாக தொழுதாலும் நான் அந்தக் கேள்வியை கேட்டுவிட்டுத்தான் போவேன்னு சொல்லிட்டாங்க!
தொழுகையை முடிவிற்கு கொண்டுவந்து ஸலாம் வாங்கியவுடன், அந்தக் காணாமல் போன ஒட்டகம் என்னதான் ஆச்சுப்பா?ன்னு கேட்டாங்க. யா ரசூலல்லாஹ்! அல்லாஹ்வின்மீது சத்தியமாக அப்படியொரு ஒட்டகமே இல்லை. இதோடு விட்டுவிடுங்கள் நாயகமே. நான் பொய் சொல்லிவிட்டேன்.
அதற்கு நபி என்ன சொன்னார்கள் தெரியுமா? ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, "நபி சிரித்தார்கள்." அவ்வளவுதான் சிரித்துவிட்டு வெளியே போய்விட்டார்கள். வேற ஒன்றுமே சொல்லவில்லை.
"குற்றம் வெறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகளை அல்ல! ஷிர்க் வெறுக்கப்பட வேண்டும், முஷ்ரிக்களை அல்ல.! குஃப்ர் வெறுக்கப்பட வேண்டும், காபிர்களை அல்ல..!"
இதைச் சொல்லிக்கொடுத்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். குற்றத்தை வெறுக்கலாம். ஆனால் குற்றவாளிகளை வெறுக்கக்கூடாது. எத்தனைக் குற்றவாளிகளை தங்களுடைய ஒரு சிரிப்பால் திருத்தியிருக்கிறார்கள் தெரியுமா? இஸ்லாம் வளர்ந்தது அப்படித்தான்.
முனாபிக் - நயவஞ்சகன். (நம்பவைத்து கழுத்தை அறுப்பவன்)
ஷிர்க் - அல்லாஹ்வுடைய ஸ்தானத்தில் மற்றொன்றை வைப்பது. அவற்றை வணங்குவது. வழிபடுவது.
தவறு செய்தவர்களோடு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பழகுகிற பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஒருமுறை இளைஞர் ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு அந்நியப் பெண்ணோடு தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இதை அந்த வழியாக வந்த பெருமானார் பார்த்துவிட்டார்கள். என்ன ஹவ்வாப், இங்கே என்ன பண்றீங்க? யா ரசூலல்லாஹ்! என்னுடைய ஒட்டகம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடி வந்தேன்னு "பொய்" சொல்லிவிட்டார். இவர் கூறியது பொய் என்று ரசூலுக்கு தெரியாமலா இருக்கும்?
அதன்பிறகு, நபியவர்கள் என்னை பார்க்கும் நேரமெல்லாம் காணாமல்போன ஒட்டகம் கிடைத்துவிட்டதா? எனக் கேட்கலானார்கள். இன்னும் கிடைக்கவில்லை நாயகமே! ஒரு பொய்தான். அதற்கு பின்னாலே மறுபடியும் மறுபடியும் பொய்.
ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, எனக்கு ஒரு பெரிய பே (கெட்ட) நஸீபாகிப் போச்சு. ரசூலின் பார்வையிலிருந்து மறைந்து வாழ ஆரம்பித்துவிட்டேன்?! நபியை பார்த்தால்தானே கேட்பார்கள். நாம நிர்பந்தமாக பொய் சொல்லனும். முனாபிக்கள் மட்டும்தான் எங்கள் காலத்திலே நபியவர்கள் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் பின்னால் ஸஃப்பில் வந்து சேர்வார்கள். நபி ஸலாம் வாங்கியவுடன் ஓடிவிடுவார்கள். இந்த வேலையை சிறிது காலம் நான் செய்துகொண்டு இருந்தேன்னு சொல்றாங்க.
என்னால் நிம்மதியாக தொழ முடியவில்லை. நபியை பார்க்க முடியவில்லை. என் வாழ்நாட்களில் துர்பாக்கியமான நாட்கள் அந்த நாட்கள். அல்லாஹ்விடம் துஆ செய்தேன், யா அல்லாஹ்! என்னை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டுவந்துவிடு என்று.
ஒருநாள் மஸ்ஜிதுன் நபவியின் பக்கம் வந்தேன். ஜமாஅத் தொழுகையில்லாத நேரம். இன்றைக்காவது நிம்மதியாக தொழுவோம் என்று தக்பீர் கட்டித் தொழ ஆரம்பித்தேன். நபியவர்கள் என் பக்கத்திலே வந்து அமர்ந்துகொண்டார்கள். நான் தொழுகையை நீட்டினேன். நீ எவ்வளவு நீளமாக தொழுதாலும் நான் அந்தக் கேள்வியை கேட்டுவிட்டுத்தான் போவேன்னு சொல்லிட்டாங்க!
தொழுகையை முடிவிற்கு கொண்டுவந்து ஸலாம் வாங்கியவுடன், அந்தக் காணாமல் போன ஒட்டகம் என்னதான் ஆச்சுப்பா?ன்னு கேட்டாங்க. யா ரசூலல்லாஹ்! அல்லாஹ்வின்மீது சத்தியமாக அப்படியொரு ஒட்டகமே இல்லை. இதோடு விட்டுவிடுங்கள் நாயகமே. நான் பொய் சொல்லிவிட்டேன்.
அதற்கு நபி என்ன சொன்னார்கள் தெரியுமா? ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, "நபி சிரித்தார்கள்." அவ்வளவுதான் சிரித்துவிட்டு வெளியே போய்விட்டார்கள். வேற ஒன்றுமே சொல்லவில்லை.
"குற்றம் வெறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகளை அல்ல! ஷிர்க் வெறுக்கப்பட வேண்டும், முஷ்ரிக்களை அல்ல.! குஃப்ர் வெறுக்கப்பட வேண்டும், காபிர்களை அல்ல..!"
இதைச் சொல்லிக்கொடுத்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். குற்றத்தை வெறுக்கலாம். ஆனால் குற்றவாளிகளை வெறுக்கக்கூடாது. எத்தனைக் குற்றவாளிகளை தங்களுடைய ஒரு சிரிப்பால் திருத்தியிருக்கிறார்கள் தெரியுமா? இஸ்லாம் வளர்ந்தது அப்படித்தான்.
முனாபிக் - நயவஞ்சகன். (நம்பவைத்து கழுத்தை அறுப்பவன்)
ஷிர்க் - அல்லாஹ்வுடைய ஸ்தானத்தில் மற்றொன்றை வைப்பது. அவற்றை வணங்குவது. வழிபடுவது.