السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 7 November 2018

முக்தி பெறுவதற்கான வழிz



உரை: ஷைகனா கௌதனா ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹழ்ரத் காதிரி காஹிரி  கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ்

மய்யித் என்றால் மௌத்தானவர் என்ற பொருளா? அல்லது மௌத்தாகிறவர் என்ற பொருளா? அல்லது   இனிமேல் மௌத்தாகக்கூடியவர் என்ற பொருளா?

இம்மூன்று காலத்தையும் விட்டுவிட்டு வெறும் மௌத்தையும், ஆளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ‘இன்னக மய்யிதுன்’ நேற்றும் மய்யித்துதான். இப்பவும்   மய்யித்துதான், நாளைக்கும் மய்யித்துதான்! இதைபோன்று அவர்களும் இன்றும் என்றும் எப்பவும் மய்யித்துதான். இதை ஆரிபீன்கள் கண்காட்சியாக காணுகிறார்கள். தாங்கள் மௌத்தானவர்கள் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். ‘தான்’ என்ற எண்ணம் அற்று மௌத்தாகி அல்லாஹ்வின் பக்கம் சேர்ந்துவிட்டவர்கள் இவர்கள்!

இதோ ஒரு ஆஷிக் சொல்கின்றார். “ஆண்டவனே! நான் உன்னிடத்தில் வராமல் தூர விலகிப்போய்  கிடக்கின்றேன். நான் என்ன பாவம் செய்தேனென்று என்னை தூரத்தில் போட்டிருக்கின்றாய் ? எனக் கேட்டேன். அந்த நேசன் பதில் சொன்னான்,

‘உன்னுடைய உஜூது (உள்ளமை) தான் பாவம். நீ போனால் அவன் வருவான்’ என்று!’’

 அப்படியானால் தன்னை அறிய வேண்டும். மௌத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். மௌத்தை தெரிந்துக் கொண்டவர் – தானொரு மய்யித்து என்பதைப் புரிந்துக் கொண்டவர்தான் ‘வலி’ தான் மய்யித்து என்பதைத் தெரிந்துக் கொள்ளாமல் தான் உயிரோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவன் அல்லாஹ்விடம் போக இயலாது.

 “ நீ நம்மிடம் சேர வேண்டுமென விரும்பினால் நீ மௌத்தாகிவிடுவது ஷர்த்து (நிபந்தனை) கொஞ்சம் பாக்கியிருக்கும் உயிர்கூட இருக்க கூடாது! சாவில்லா சுக வாழ்வை நாடி செத்துபோக வேண்டுமே! சேர்த்துவைக்கும் சால சிறந்த வழி இதுவே நேசரே!’’

ஆஷிக்கீன்களுக்கு தானும், அல்லாஹ்வும்தான் இருப்பதாக தெரியும். மற்றவர்களைப்பற்றி அவர்களுக்கு தெரியாது. இவர்கள்தான் மௌத்தை அனுபவித்தவர்கள். தங்கள் நப்சை மௌத்தாக்கிக் கொண்டவர்களாகும்.

 நாயகம் ﷺ  அவர்கள் ஒருமுறை யுத்தத்திற்குச் சென்று திரும்பிய பொழுது சொன்னார்கள். “நாம் இப்போது சின்ன சண்டையில் இருந்து திரும்பியுள்ளோம். பெரிய சண்டைக்கு வந்திருக்கிறோம்” சஹாபாக்கள் கேட்டார்கள் “ எங்கள் உயிரையெல்லாம் கொடுத்து ஜிஹாது செய்திருக்கின்றோம். இதைவிடப் பெரிய சண்டை வேறென்ன இருக்கிறது? ‘ நப்சுடன் செய்கிற சண்டைதான் அது’ என பதில் சொன்னார்கள்.

நப்சுடன் செய்கிற சண்டைதான் பெரிய சண்டை! இதைப் பெரிய சண்டை என்று சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. காபிரீன்கள் கண்முன்னால் இருந்தார்கள். ஆனால் இந்த எதிரியோ நம் கண்ணுக்கு தெரியமாட்டான். இந்த எதிரிக்கு ஷைத்தான்களும் பக்கபலமாக   இருக்கிறார்கள். இந்த எதிரியினால் நாம் வெட்டுப்பட்டுப் போனால் நம் நிலைமை மோசமாகிவிடும்.  இந்த எதிரியே நாம் அடக்கினால்தான் முக்தி பெற முடியும்.  காபிர்களோடு நாம் ஜிஹாது செய்து வெட்டுப்பட்டால் ஷஹீது ஆவோம். நாம் அவர்களை வெட்டினால் ‘பீஸபீல்’ செய்த நன்மை கிடைக்கும்.

இப்படி நப்சுடன் செய்கிற சண்டைக்கு வசீலா தேவை. ஆகவே அல்லாஹ் சொல்கிறான் ‘ வப்தகூ இலைஹில் வசீலத்த’ இப்படி சண்டை செய்து வெற்றியாகிவிட்டால்- அல்லாஹ்வின் பக்கம் சேர்ந்துவிட்டாய். அப்போ உன்னையே நீ பார்த்துகொண்டாய்! மௌத்தை நீ தெரிந்துக் கொண்டாய் என அர்த்தம்! பின்பு

“அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா கவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனூன்”

நிச்சயமாக அல்லாஹ்வுடைய ஒலிமார்களுக்கு பயமுமில்லை, அவர்கள் கவலைப் படவுமாட்டார்கள். “ அல்லதீன ஆமனூ வகானூ யத்தகூன்” அவர்கள் ஈமான் கொண்டு தக்வா செய்தார்களே – தக்வா செய்தவர்களாக ஆனார்களே அப்படிப்பட்டவர்கள்.

‘லஹுமுல் புஷ்ரா பில் ஹயாத்தித்துன்யா.....

அவர்களுக்கு இவ்வுலகிலும் நல்வாழ்வு இருக்கிறது. மறுமையிலும் நல்வாழ்வு இருக்கிறது! அல்லாஹ்வின் வார்த்தைகளில் மாற்றமிருக்காது. இதுதான் மிகப்பெரிய பாக்கியம் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த உலகத்தில் அவர்களுக்கு என்ன நல்வாழ்வு- நன்மாராயம் எனக் கேட்டால் கராமத் நடக்கிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு எத்தனையோ வேலைகளை முடிக்கின்றான். இப்போது அவ்லியாக்களுக்கு- மௌத்தாய்ப் போனவர்களுக்கு ‘கராமத்’ எப்படி வருமெனக் கேட்கிறார்கள்! கராமத் நடக்க வேண்டுமானால் மௌத்தாய்ப்  போகிறது ஷர்த்தாகும். எப்படி?

விலாயத்- ஒலித்துவம் வருகின்றது என்றால் – வலீயாக ஆவது என்றால் மௌத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தானொரு ‘மய்யித்’ என்று தெரிந்திருக்க வேண்டும். தானென்ற எண்ணம் மௌத்தாகிப் போனால்தான் விலாயத் வரும்.

அப்போ விலாயத்துக்கு மௌத்து ஷர்த்தாகும்போது கராமத்துக்கு மௌத்து எப்படி இடைஞ்சலாக முடியும்?

நூல்: ஷைகுனா அல்லாமா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ் நினைவு மலர்