السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 6 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206
அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் அவர்களின் கண் முன்னே இருந்து கொண்டிருந்தது.
ஆட்சித்தலைவராக இருந்து கொண்டு யுத்தத்திற்குச் சென்று விட்டு இப்போது தான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு அமீருல் முஃமினீனாக அங்கேயும் சிந்திப்பதற்கும் கவலைப் படுவதற்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.
ஆனாலும், மண்ணறையின் முன் நின்று அழுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்வதற்கும் அவர்களைத் தூண்டியது எது?
கொஞ்சம் பின்னோக்கிப் போய் உஹத் யுத்த களத்தை நம் மனக் கண் முன் கொண்டு வருவோம்.
உஹத் யுத்தம் முடிந்து, எதிரிகளெல்லாம் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருக்கிற தருணம் அது.
போரில் உயிர் நீத்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் நபித் தோழர்களோடு மாநபி {ஸல்} அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.
தூரத்தில் ஓர் வெண்ணிற மேனி கொண்ட ஓர் உடல் செங்குருதியால் நனைக்கப்பட்டு, அசைவற்று கிடந்ததைக் கண்ணுற்ற பெருமானார் {ஸல்} அந்த உடலை நோக்கி ஓடிப் போகிறார்கள்.
பூமியில் புதைந்திருந்த முகத்தை திருப்பிப் பார்க்கின்றார்கள். அது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் புனித உடல். எதிரிகளால் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்ததை மாநபி {ஸல்} அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
தோழர்களை அழைக்கின்றார்கள் {ஸல்} அவர்கள். அப்படியே அவரை மடியில் கிடத்தி அழுதவர்களாக “ அல்குர்ஆனின் (33:23) –ஆம் வசனத்தை ஓதியவர்களாக “முஸ்அபே! மக்காவில் வாழ்ந்த உம்முடைய ஆரம்ப கால வாழ்வை நான் நன்கறிவேன்! உம்மை விட அழகிய ஓர் வாழ்வை யாரும் வாழ்ந்ததாக நான் அறிந்திருக்க வில்லை! ஆனால், இன்றோ! தலையை மூடினால் கால் தெரிகிறது; காலை மூடினால் தலை தெரிகிறது! முழுமையான ஒரு கஃபன் துணி கூட இல்லை!
அல்லாஹ்வின் தூதர், நாளை மறுமையில் நீர் உயிர்த் தியாகி தான் என உமக்காக சாட்சி கூறுவார்!” என்று கூறினார்கள்.
பின்பு தோழர்களை நோக்கி “மக்களே! அல்லாஹ்விற்காக வாழ்ந்து உயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள்! இவர்களிடம் வாருங்கள்! இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் சொல்லும் ஸலாத்திற்கு அவர்கள் பதில் தருகின்றார்கள்!” என்று கூறினார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:31.)
உண்மையில், தம் தோழர்களில் 70 நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இழந்திருந்தார்கள். அதையெல்லாம் விட தமது பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்ட நிலையில்…
பெருமானார் {ஸல்} அவர்கள் “முஸ்அப் (ரலி) அவர்களின் புனித உடல் முன் நின்று அழுதது “எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருந்த நிலையில் அல்லாஹ்விற்காக வாழும், வாழ்ந்து மரணிக்கும் ஓர் உன்னத வாழ்வை தேர்ந்தெடுத்த ஓர் உத்தமரை நினைவு கூர்ந்திடும் நோக்கில் தான்.
இங்கிருந்து தான் அலீ (ரலி) அவர்கள் பாடத்தையும், முன் மாதிரியையும் பெற்றார்கள்.

Moulavi IM Sajith Musthafi


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206