السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 2 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

Arwahe Salasa,Page 242

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!