பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.
இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.
நல்லதை மட்டும் அறிந்த வானவர்களாக மனிதர்களை இஸ்லாம் பார்க்கவில்லை.அவ்வாறே நல்லது – கெட்டது எது? என்று அறியாத விலங்குகளின் பட்டியலிலும் அவர்களை சேர்க்கவில்லை.
பாவம் செய்யும் இயல்பில் மனிதன் படைக்கப்பட்டதாக கூறும் இஸ்லாம் பாவ மன்னிப்பின் வாசல்களை அவனுக்காக திறந்தே வைத்துள்ளது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا رواه مسلم
படைத்த ஏக இறைவன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் தன்னை‘மன்னிப்பாளன்’ என்று கூறுவதின் நோக்கமும் இது தான்.
பாவ மன்னிப்பு தேடுங்கள்!
பாவம் செய்த மனிதன் உடனே இறைவனிடம் மன்னிப்பு தேட வேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மூன்று நிபந்தனைகளை கூறியுள்ளது.
see More