السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 19 January 2019

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று...

Saturday, 12 January 2019

ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலில் பயான்

இன்று 12/01/2019 சனிக்கிழமை ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளி வாயலில் இஷா தொழுகையினைத் தொடர்ந்து  நடைபெற்ற விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜமாஅத்தார்களும் முஹிப்பீன்களும் இந்தியா தமிழ்நாட்டின் உலமா சபையின் தலைவர் சங்கைமிக்க மெளலவி அல்ஹாபிழ் pm காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களை சந்தித்து முஸாஹபா ,முஆனகா செய்தபோது....

Wednesday, 9 January 2019

நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை! இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்,கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கூட்டம் ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் 45 உள்ளூராட்சி சபைகளுக்கான அனைத்து வெற்றிடங்களையும் இவ் வருடம் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அத்தோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக...

இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!

ஆளுனர் எனும் பெயரில் நடைபெறும் இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்! ஒரு தேசம் என்ற வகையில் குடிமக்களாக சகல இனங்களும் பார்க்கப்பட்டு அவர்கள் ஆளப்படும் முறையில் நீதம் இருக்குமானால் அங்கு இனவாதத்திற்கு இடமிருக்காது. "இனவாதம் என்பது கீழ்த்தரமாக ஒரு மிருக உணர்வு". "இன்று அரசியல் வாதிகள் தூக்கும் மிகப்பெரிய ஆயுதம்". இந்த அரசியல் வாதிகள் இவ்வாறு இனவாதத்தை தூண்டுவதனால்தான் மனிதம் செத்துப்போகிறது; சுயநலன் மேலோங்குகிறது. இதற்கு பிரதான காரணம் இன்றுள்ள முதலாளித்து...

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

(ஊடகவியலாளர் பஹத் ஜுனைட்) தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் இன முறுகல் நிலையை தொற்றுவிக்கும் வகையில் ஒரு சில இன வாதிகளிகளால் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.. பல தசாப்த காலத்தில் இருந்து அண்ணன் தம்பிகளாக ,அயல் வீட்டுக்காரர்களாக,உறவுகளை பேணி வரும் தமிழ் முஸ்லிம் உறவுகளை சகித்துஜ்கொள்ள முடியாத தனிப்பட்ட அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ், முஸ்லிம்...

மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.

நீ மனிதனாகப் பிறந்தால் மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது. 1. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ சாப்பிட்டுக்கோ என்று சொல்ல முடியாது. 2. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ கழிவகற்று ( பேன்று தள்ளு) என்று மற்றவர் ஒருவரைப் பொறுப்புச் சாட்ட முடியாது. 3. எனக்காக நீ இன்றிரவு தூங்கிக் கொள் என்று யாரையும் கேட்க முடியாது. ஆனால், எங்களுக்காக நீங்கள் அவர்களை நிர்வாணமாக்குங்கள் என்று யாரும் எவரையும் கேட்க முடிகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காணி...

வலயக்கல்வி பணிப்பாளரு நன்றி

ஏறாவூர் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு இம்முறை ஏறாவூர் கோட்டத்தில் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைக்கு விண்ணப்பித்திருந்தார்கள் கடந்த வருடம் 3 வகுப்புக்களுக்குரிய 103 மாணவர்கள் இணைக்கப்பட்டனர் . இம்முறை 132 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயில விண்ணப்பித்திருந்தனர் இவ்விடயத்தினை மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இப்பாடசாலை அதிபர் இப்பாடசாலைக்கு கடந்த ஆண்டை விட இம்முறை 29 மாணவர்கள் உள்ளதனால் 4 வகுப்புக்களாக...

இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்

இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கெதிரான இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் -Thehotline எம்.ஐ.லெப்பைத்தம்பி விவசாயம், நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கெதிராக தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனவாதப்பிரசாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஒரு பிரதேசத்திற்கோ ஒரு இனத்திற்கோ உரிய அமைச்சரல்ல. அவர் இந்த மாவட்டத்தினதும் தேசத்தினதும் மூவின மக்களுக்குமான அமைச்சர்...

Tuesday, 8 January 2019

நோயாளர் பராமரிப்பு சேவை ஆரம்பம்.

கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இலக்கு இன்னும் ஓரிரு தினங்களில் செயல்வடிவம் பெறுகிறது. கடந்த மூன்றாண்டுகால கடின உழைப்பின் பெறுபேறாய் எமது பராமரிப்பு இல்லம் எதிர்வரும் 13.01.2019 ஞாயிறு காலை தனது பராமரிப்பு சேவையினை ஆரம்பம் செய்ய இருக்கிறது. எதிர்வரும் #மார்ச்_மாத_நடுப்பகுதியில் #வரலாற்று#முக்கியத்துவம்_நிறைந்த திறப்பு விழா (Grant Opening Ceremony) இடம்பெற இருக்கும் இதே வேளை முதலில் பயனாளிகளை உள்வாங்கி அவர்களுக்கான...

ஒரு வழி பாதைக்கு மனச் சுவர்கள் தேவையில்லையே!

சுவர்கள் - வீட்டின் எல்லைகளாகவோ அல்லது பாதுகாப்பிற்காகவோ தேவைதான் என்றாலும், மனிதர்களுக்குள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணம் காட்டி தனித்தனியே அல்லது கூட்டாக தங்களுக்கிடையே மனங்களில் சுவர்களை எழுப்பிக் கொண்டு வாழ்தல் தேவையா என்பது ஆழ்ந்த சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய ஒன்றாகும்.           ஏதோ ஒரு அறியாமையில் அற்பக் காரணத்திற்காக     தத்தம் நெஞ்சத்திற்குள் நெடுஞ்சுவர்களை...

சாதனையின் திறவுகோல் உங்களிடமே

கல்விக்கு கண் உதவும். கேள்விக்கு காது உதவும். கேள்வியால் தான் ஞானம் பெற முடியும். நம் உடலில் ஒன்பது வாசல்கள். அவற்றுள் இரண்டுக்குத்தான் கதவுகள் இல்லை. ஒன்று மூக்கு, மற்றொன்று காது.  மூக்கு உயிர்மூச்சின் பயணப்பாதை. அது எந்த நேரமும் திறந்தே இருக்கும். அதுபோல நல்ல கருத்துக்கள் எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாரிடமிருந்து எப்போது வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் காதுகளுக்கு  கதவுகள் இல்லை. காதுகளின் மகிமை இப்போது புரிந்திருக்கும்.  இத்தகைய...

ஒரு ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ?

வை.எல்.எஸ்.ஹமீட்: ஆளுநர் நியமனம் : சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது . சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்கலாம். 154B(2) அதேநேரம் 2/3 பெரும்பான்மை மூலம் குறித்த காரணங்களுக்காக ஆளுநரை நீக்கும்படி மாகாணசபை கோரலாம். 154B(4) அதிகாரம் ————— ஜனாதிபதியைப்போன்று ஆளுநருக்கும் மாகாணசபையைக் கூட்டுகின்ற, ஒத்திப்போடுகின்ற ( to...

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல். நேற்று இரவு சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 01.சென்ற வாரம் தனது காணிக்குள் சென்ற எமது ஊரைச்சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரரை நிர்வாணப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செயலை சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான ஒரு நிகழ்வு எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் ஏற்படக்கூடாது. 02. மேற்படி...

தண்டனைகள் - தண்டம் (Punishments - Fines)

சில குற்றங்களுக்குத் தண்டனையாகத் தண்டப்பணம் விதிக்கப்படும். பொதுவாகச் சிறு சிறு குற்றங்களுக்குத் தண்டம் விதிக்கப்படுகிறது.பெரிய குற்றங்களுக்கும் சிறைத்தண்டனையோடு தண்டமும் விதிக்கப்படும். போக்குவரத்து, வாகனங்கள் தொடர்பான குற்றங்கள், மதுபானங்கள், நுகர்வுப் பொருட்கள், பொது ஒழுங்கு விதிகள்.. போன்ற குற்றங்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது. தண்டம் ஒன்று விதிக்கப்படுகையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தண்டம் ஒன்று செலுத்துவதால் பாரிய சட்ட...