السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 9 January 2019

இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்

இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்

இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கெதிரான இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் -Thehotline
எம்.ஐ.லெப்பைத்தம்பி
விவசாயம், நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கெதிராக தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனவாதப்பிரசாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஒரு பிரதேசத்திற்கோ ஒரு இனத்திற்கோ உரிய அமைச்சரல்ல. அவர் இந்த மாவட்டத்தினதும் தேசத்தினதும் மூவின மக்களுக்குமான அமைச்சர் என்பதை இனவாதப்பிரசாரத்தில் ஈடுபடும் தமிழ் தலைமைகள் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பதுடன், அவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து இனங்களுக்கிடையில் விரிசலை உண்டு பண்ணும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
இந்த மாவட்டத்தில் இன நல்லுறவு கட்டியெழுப்பட்ட வேண்டுமெனும் நன்னோக்கிலும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளும் தனது வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமையை நன்றியுடன் நினைவுகூர்ந்து தனது அபிவிருத்திப் பணிகளை முஸ்லிம் பிரதேசங்களை விடவும் அதிகமாக தமிழ் பிரதேசங்களில் முன்னெடுத்து வருவதுடன், எப்போதும் அவர் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக நன்றியுடன் நினைவுகூரும் ஒருவராகவே இருந்து வருகிறார்.
இதன் காரணமாக அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி என எதிர்க்கட்சியினரால் வசைபாடலுக்குள்ளான பல சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும், தமிழ் பிரதேசங்களும் சரி சமமாக அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் அதிகரித்து வரும் மதுச்சாலைகள் அகற்றப்பட வேண்டும் என குரல் கொடுத்து வரும் அமீர் அலியை விமர்சிப்பதை எந்த தமிழ் மகனாலோ ஏற்றுக்கொள்ள முடியாது.
தாங்கள் தமிழ் சமூகத்தில் இழந்து போயுள்ள செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள கையிலெடுத்திருக்கும் ஆயுதம் தான் அமீர் அலி மீதான இனவாத சாயம் பூசல்கள் என்பதை சகோதர இனமான தமிழ் மக்கள் உணராதவர்களல்லர்.
தாங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அமைச்சராக பழம் பெரும் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து தமிழ் சமூகத்திற்கும் பெற்றுகொடுத்தவை என்னவென்பதை உங்களைப் பார்த்து நீங்கள் கேள்வி தொடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் இந்த மாவட்டத்தின் தமிழ் சமூகம் அடைந்த பலாபலன்கள் என்ன? நீங்கள் சுகபோகமாக வாழ வேண்டுமென்பதற்காக இந்த சமூகத்தைப்பலி கொடுத்தீர்களே தவிர, உங்களால் ஆனது எதுவுமில்லை.
கடந்த காலங்களில் தங்கள் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் செல்லாக்காசாகிப் போனமையால், நீங்கள் இப்போது கையிலெடுத்திருக்கும் ஆயுதம் தான் அமீர் அலி மீதான இனவாதப்பிரசாரம். இவைகளை நம்பி இனியும் தமிழ் சமூகம் ஏமாறப்போவதில்லை. நீங்கள் யார் என்பதை தமிழ் சமூகம் உணர்ந்துள்ளது.
இரு இனங்களும் சரி சமமான அபிவிருத்திகளை அடைந்து கொள்ள வேண்டும். அன்னியோன்யமாக வாழ வேண்டுமெனும் நோக்கிலே அமீர் அலிக்கான ஆதரவை தமிழ் வழங்கி வருகின்றனர். இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் நீங்கள் முன்னெடுக்கும் இனவதப்பிரசாங்களுக்கு உங்களால் மூழைச்சலவை செய்யப்பட்ட ஒரு சிலர் அப்பாவி இளைஞர்கள் பலியாகியுள்ளமை கவலைக்குரியது.
கடந்த காலங்களில் இவ்வாறு மூழைச்சலவை செய்து பலி கொடுக்கப்பட்டு ஒரு தலைமுறையை அழித்த தவறுகளை இனி மேலும் தொடர்ந்து செய்யாமல், நிம்மதியாக வாழ எத்தனிக்கும் இரு சமூகங்களையும் வாழ விடுங்கள் எனப்பகிரங்கமாக கேட்டுக் கொள்வதோடு, அதற்காக நீங்கள் கைலெடுத்திருக்கும் அமீர் அலிக்கெதிரான இனவாதப் பிரசாரங்களை கைவிட்டு பிணக்குகள், சர்ச்சைகள் ஏற்படுகின்ற போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.