கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இலக்கு இன்னும் ஓரிரு தினங்களில் செயல்வடிவம் பெறுகிறது.
கடந்த மூன்றாண்டுகால கடின உழைப்பின் பெறுபேறாய் எமது பராமரிப்பு இல்லம் எதிர்வரும் 13.01.2019 ஞாயிறு காலை தனது பராமரிப்பு சேவையினை ஆரம்பம் செய்ய இருக்கிறது.
எதிர்வரும் #மார்ச்_மாத_நடுப்பகுதியில் #வரலாற்று#முக்கியத்துவம்_நிறைந்த திறப்பு விழா (Grant Opening Ceremony) இடம்பெற இருக்கும் இதே வேளை முதலில் பயனாளிகளை உள்வாங்கி அவர்களுக்கான அடிப்படை விடயங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு நோயாளிகளை அனுமதிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அன்பார்ந்த உறவுகளே...
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நோயின் தீவிரநிலையை அடைந்து வாழ்நாளின் இறுதித் தருணங்களை கவலையோடும் உபாதைகளோடும் கடத்திக் கொண்டிருக்கும் உறவுகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் குடும்ப அங்கத்தவர்களின் சுமையை சற்று தளர்த்தி உதவிட முன் வாருங்கள்.
உங்களது உறவுகள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிந்திய நிலையை அடைந்து நிர்க்கதியான நிலையிலிருந்தால் #நாட்டின்_எப்பகுதியில் இருந்தாலும் அவர்களை எங்களோடு இணையுங்கள்.
தனித்தனியான சகலவசதிகளும் நிறைந்த அறைகளில் அவர்களை முற்றிலும் இலவசமாக பராமரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
முதல் கட்டமாக 12 தீவிரநிலை நோயாளர்களுக்கான இட ஒழுங்கே நம்மிடம் இருப்பதால் #பதிவுகளுக்கு_முந்திக்கொள்ளுங்கள்.
#இன_மத_வேறுபாடில்லாத #இலங்கையர் #யாவருக்குமான#இந்த_தேசிய_வேலைத் திட்டத்தில் அனைவரும் கை கோர்த்து நோயினால் நொந்து நூலாகிப்போன உறவுகளின் இறுதி நிமிடங்கள் அமைதியான சூழலில் ஆரோக்கியமான போசாக்குடன் ஆன்மீக திருப்தியுடன் நிம்மதிப் பெருமூச்சுடன் கழிந்திட நாம் எமது பங்களிப்பை தாராள மனதுடன் வழங்குவோம்.
உடனடித் தொடர்புகளுக்கு:
Dr.A.Iqbal(Consultant clinical oncologist)-0714442248
Mr.AM.Fairoos(Nursing Officer)-0779919986