السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 17 December 2024

#பாத்திமா நாயகி

 


ஒரு பிடி பேரீச்சம் பழத்திற்காக...

**************************************


#உலகில் வேறெந்த உத்தமப் பெண்ணும் அனுபவித்திராத வறுமையின் வேதனையை பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அனுபவித்தார்கள்.


#இக்கால முஸ்லிம் பெண்கள் தங்களை பாத்திமா ( ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வழி முறையில் வந்தவர்கள் என்று சொல்லவே அருகதை அற்றவர்கள் என்று கூறலாம், தவறில்லை. அது மட்டுமல்ல, அவர்களை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை என்பதும் தெளிவு.


இவர்கள் தாங்களும் முஸ்லிம்களே என்று வீராப்புடன் கூறிக் கொள்வதை நினைக்கும் பொழுது சிரிப்பும், வேதனையும்தான் மிஞ்சுகின்றன.


பீபீ பாத்திமா, (ரலியல்லாஹு அன்ஹா), அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா), 

அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா ) ஆகிய இம்மாதரசிகளைக் 

காட்டினும் இஸ்லாமியப் பெண்ணிலக்கணத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் இவ்வுலகில் வேறு யார்? இவர்களைப் பின்பற்ற நம் பெண்கள் தயாரா?


இவர்கள் எந்த அளவிற்குக் கைசேதப்படப் போகிறார்கள் என்பது கியாம நாளில்தான் தெளிவாகும்.


நம் பெண்களிற் சிலர் தான்தோன்றித்தனமாக மாறுவதற்கு அவர்களின் கணவன்மார்களும் உடந்தை என்று எண்ணும்பொழுது எத்தனை வேதனை ஏற்படுகிறது.


பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருந்தார்கள். வீட்டில் மாமியார் இருந்த போதிலும், அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர்களே குடும்ப வேலைகள் அனைத்தையும் செய்தனர்.


பஞ்சைக் கொண்டு Tற்பது; சோளம், கோதுமை போன்ற தானியங்களைத் கெயில் இட்டு கை சிவந்து போகும் அளவிற்கு அரைப்பது; சிறு குழந்தைகளான பஞ்சைக் கொண்டு நூல் நூற்பது; சோளம், கோதுமை போன்ற தானியங்களைத் திரிகையில் இட்டு கை சிவந்து போகும் அளவிற்கு அரைப்பது; சிறு குழந்தைகளான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரையும் செவ்வனே கவனித்துக் கொள்வது; தண்ணீர் சுமந்து கொண்டு வருவது; துணிகளைத் துவைப்பது; பாத்திரங்களைக் கழுவுவது ஆகிய எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தார்கள்.


கணவர் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டினுள் நுழையும் பொழுது, அவர்களை அருமை மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா ) அவர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்ற பண்பாடு! ஆகா! அது அவர்களுக்கே உரிய கலையோ என்று எண்ணவும் தோன்றும்.


இத்தனைக்கும் கணவர் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வறுமையில் வாடியவராகவும், வெறுங்கையுடன் வீட்டினுள் நுழையக் கூடியவராகவுமே இருந்தனர்.


ஆனால் இன்று. கணவன் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் திறனாளியாகவும், கேட்பதையெல்லாம் வாங்கித்தரும் கையாளாகவும் இருந்தும் கூட, அவன் வீட்டினுள் நுழையும் பொழுது மனைவியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அந்த அளவிற்குக் கோணல் மாணலாக இருக்கும். மறுமையைப் பற்றிய சிந்தனை இல்லாததே இதற்குக் காரணம்!


ஒரு முறை ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஏதேனு மோரிடத்திலாவது கூலி வேலை கிடைக்காதா என ஏங்கியவர்களாக வெளியிற் புறப்பட்டார்கள்.


மதீனாவில் கூலி வேலை கிடைப்பதே அரிதாக இருந்தது; அவ்வாறு கிடைத்தாலும், கிடைக்கும் கூலியோ மிக சொற்பமானதாக இருந்தது. 

அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு தோட்டத்தினருகில் சென்றார்கள். அது ஒரு கிழவிக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. அவளிடம் சென்று அவர்கள் வேலை கேட்டார்கள்.


அவளும் தோட்டத்தில் நீர் இறைத்துப் பாய்ச்சும் வேலையைத் தந்தாள். அவள் சொன்ன அளவிற்கு அவர்கள் கடினமாக உழைத்து வேலையை முடித்தார்கள். கைகளில் கொப்புளங்கள் கூட வந்து விட்டன. அந்த அளவிற்கு உழைத்தார்கள்.


இறுதியில் அக்கிழவி கொடுத்த கூலி என்ன தெரியுமா? ஒரேயொரு பிடி பேரீச்சம் பழம் மட்டுமே. அதனைக் கொண்டு வந்து பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்தார்கள். பின்பொரு முறை இதே போன்று கூலி வேலை செய்த பொழுது அவர்களுக்கு கோதுமை கிடைத்தது.


இவ்வாறு அவர்களது குடும்ப வாழ்க்கை நடை போட்டுக் கொண்டிருந்தது. ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வேலை செய்ய சளைத்தவர் அல்லர். இறைவனின் நாட்டம் வறுமை அவர்களை வாட்டியது அவ்வளவுதான். அது மட்டுமன்றி முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்நாளில் தொழிலாளர்களிடம் கடினமான வேலை வாங்கிக் கொண்டு மிக மிக சொற்பமான கூலியைக் கொடுத்ததும் அவர்களின் ஏழ்மைக்கு மற்றொரு காரணம் எனலாம்.


#ஸலவாத் 

#islam 

#Fathima 

#ஸுப்ஹானல்லாஹ் #திக்ர் #வழிகெட்ட #லாயிலாஹ #மரணித்தவருக்காக #வீட்டிலிருந்து #நூரிஷாவை #துன்யாவை #கடன் 


@highlight 

Muhammed Yoosuf Musthafi