السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 16 December 2024

வலிமார்களிடத்தில் வஸீலா 🌹

 






இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மகனாருக்கு கண் பார்வை பறிபோனது ,சில காலம் கழித்து அவருக்கு பார்வை மீண்டு வந்து பொழுது இது பற்றி ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி அவர்களிடம் கேட்கப்பட்டது . அன்னார்  ," நான் எனது மகனை அழைத்துக் கொண்டு இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه ( மறைவு ஹிஜ்ரி 241) அவர்களது மக்பாரவிற்கு சென்று பின்வருமாறு துஆ செய்தேன், ' யா அஹ்மது பின் ஹன்பல் அவர்களே ! உங்களிடத்தில் ஓர்  வேண்டுகோள் சமர்பிக்கின்றேன். இன்னும் தங்களை அல்லாஹ்  سبحانه و تعالى விடத்தில் வஸீலாவாக முன்னிறுத்தி துஆ செய்கின்றேன்- யா அல்லாஹ் ! எனது மகனுக்கு ஷிபா நல்கிடு. அவனது பார்வையை திரும்பச் செய்திடு " என்று துஆ செய்தேன். அன்றிரவு எனது மகனது பார்வை திரும்ப வந்ததை நான் கண்டேன் என்று நவின்றார்கள். ஸுப்ஹானல்லாஹ் ! 

📚 தாரீகே இஸ்லாம்,பாகம் 45,பக்கம் 194