السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 19 April 2015

யெமன்பிரச்சினையை சிக்கலாக்கும் பனிப்போர் சூழல்


யெமன்பிரச்சினையை சிக்கலாக்கும் பனிப்போர் சூழல்யெமன் உள்நாட்டு யுத்தம் விரைவில் முடிவது போல் தெரியவில்லை. இந்த யுத்தம் பிராந்தியத்தில் 'pயா-சுன்னி பிரச்சினையை கிளரிவிட்டதுபோல் ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தில் தீப்பற்றியிருக்கும் ரஷ்ய-அமெரிக்க பனிப் போர் சூழலுக்கும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருக்கிறது.
ஈரான் ஆதரவு 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் அதரவை கொண்ட ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் சுன்னி அரசை கவிழ் த்து தலைநகர் சனாவில் அதிகாரத்தை கைப்பற்றி யதை அடுத்தே கடந்த மாதம் பிரச்சினை ஆரம்பமா னது. ஹவ்திக்களின் இந்த வேலையால் யெமன் அல் கொய்தா அமைப்பினரை வேட்டையாடும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையும் குழம்பிப் போயிருக்கிறது.
யெமன் பிரச்சினையில் சவ+தி அரேபியா பிராந்திய சுன்னி நாடுகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஹவ் திக்கள் மீது இடைவிடாமல் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா அதற்கு ஆயுத மற்றும் உளவுத் தகவல்களை வழங்கி வெளிப்படையாக உத வுகிறது. இதனால் ஹவ்திக்கள் அமெரிக்காவை சமாளிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க ஏறுக்கு மாறாக தலையிட்டு வருகிறது. இதற்கு நல்ல ஒரு உதாரணம் சிரியா பிரச்சினை. சிரிய உள்நாட்டு யுத்தம் நான்கு ஆண்டுகள் கடந்து ஐந்தாவது ஆண்டிலும் ஓடிக் கொண்டிருப்பதற்கு பிராயெமன்பிரச்சினையை சிக்கலாக்கும் பனிப்போர் சூழல்ந்திய குழம்பங்களை தவிர்த்து காலாவதியான பனிப் போர் சூழலும் பங்களிப்பு செய்து வருகிறது.
பதவியை விட்டு வெளியேறாமல் அடம்பிடிக்கும் சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசுக்கு ரஷ்யா உதவி அளிக்காமல் இருந்திருந்தால் சிரியா வின் கதையே இன்று வேறுமாதிரி இருந்திருக்கும்.
இந்த சூழலில் யெமன் விவகாரத்தில் ரஷ்யா இதுவரை வெளிப்படையாக தலையிடவில்லை. ஆனால் அது ஈரான் மற்றும் ஹவ்தி முகாமில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த செப்டெம்பரில் யெமன் தலைநகர் சனாவை கைப்பற்றி இப்போது நாடு முழுவதையும் தனது ஆளுகைக்குள் கொண்டுவர தடுமாறும் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் அயலில் இருக்கும் சவ+தி அரேபியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று பிராந்திய சுன்னி நாடுகள் கருதுகின்றன. அதாவது ஹவ்திக்கள் என்பது ஈரானின் போலி வேடம் என்றே சவ+தி குற்றம்சாட்டுகிறது.
ஹவ்திக்கள் 'pயா முஸ்லிம்களின் செய்யிதி பிரிவைச் சேர்ந்தவர்கள். 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட யெமனில் ஹவ்திக் கள் சுமார் 30 வீத மாக இருக்கிறார் கள்.
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக் கும் பகுதிகளை தாண்டிப் பார்த்தால் அங்கு ஆகாப் என்று அழைக்கப்படும் அரபு தீபகற்பத்திற் கான அல்கொய்தா அமைப்பும் ஒரு சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத் திருக்கிறது. ரஷ்யா எப்போதும் ஈரானுக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே ஹவ்திக்களும் மொஸ்கோ பக்கம் உதவி கோர வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த பல தசாப்தங்களாக ரஷ்யா யெமனுடன் நல்லுறவையே பேணி வருகிறது. குறிப்பாக முன்னாள் சோவியத் ஒன்றிய காலத்தில் யெமன் பாதுகாப்பு படையினருக்கு ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனை என்ற ஏகப்பட்ட உதவிகளை வழங்கியவந்தது.
சோவியட் ஒன்றிய காலத்திலிருந்து இன்று ரஷ்யா வரை சுமார் 50,000 யெமனியர் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றிருக்கிறார்கள். அதாவது ரஷ்யாவின் தாக்கம் யெமனில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.
இப்போதைய நிலையில் 'pயா ஈரானுக்கும் சுன்னி சவ+திக்கும் இடையிலான யுத்த களமாகவே யெமனை ரஷ்யா பார்ப்பது போல் தெரிகிறது. ஆனால் ரஷ்யா பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்திற்கு பாதகமாகவே செயற்பட்டு வருவதாக அதன் மீது சவ+தி அரேபியாவுக்கு ஏற்கனவே ஒரு முறுகல் இருக்கிறது. சிரியாவில் தமக்கு எதிரான 'pயா அரசுக்கு ஆதரவளிப்பது, ஈரானின் அணு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பது குறித்தே ரஷ்யா மீது சவ+திக்கு அதிக கோபம் இருந்து வருகிறது.
மறுபக்கம் சவ+தியின் செயற்பாடும் ரஷ்யாவின் கோணத்தில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. தெற்கு ரஷ்யாவில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான் மையாகக் கொண்ட செச்னியாவில் இஸ்லாமிய ஆயுதப் போராட்டத்திற்கு சவ+தி ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாக ரஷ்யா நம்புகிறது. இந்த போராளிகள் கடந்த காலங்களில் ரஷ்யாவில் நடத்திய தாக்குதல்கள் ஒன்று இரண்டல்ல.
எனவே தனது உள்நாட்டு பிரச்சினையில் மூக்கை நுழைக்கும் சவ+தி அரேபியா மற்றும் தம்முடன் எப்போதும் முட்டி மோதிக் கொள்ளும் அமெரிக்காவின் முகாமிற்கு எதிராக ஹவ்தி, ஈரான் முகாமில் ரஷ்யா சேர்வதில் நியாயமான காரணங்கள் அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது.
அண்மைக்காலத்தில் சர்வதேச எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை எப்போதும் இல்லாதவகையில் அதிகம் குறைந்திருக்கிறது. இந்த எண்ணெய் விலை குறைவால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்தும் பாதிப்பை சந்தித்தபோதும் அதிகம் சிக்கலை எதிர்கொண்டிருப்பது ரஷ்யாவும் ஈரானும் ஆகும். இந்த இரு நாடுகளையும் இலக்கு வைத்தே அமெரிக்கா எண்ணெய் விலையை செயற்கையாக குறைக்க சதி செய்ததாக குற்றச்சாட்டு ஒன்றும் இருக்கிறது.
எப்படி இருந்தபோதும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவ+தி அரேபியாவின் ஒத்துழைப்பு இன்றி எண்ணெய் விலையில் அமெரிக்காவால் தனியாக கைவைக்க முடியாது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும். எனவே இந்த எண்ணெய் விவகார அரசியலை யெமன் உள்நாட்டு யுத்தத்தில் புகுத்துவதற்கு ரஷ்யா இராஜதந்திர ரீதியில் செயற்பட்டால் அயலில் இருக்கும் சவு+தி அரேபியா நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.
இதில் தற்போது உக்கிர மோதல் நீடித்துவரும் யெமனின் அதென் நகரில் தந்திரோபாய ரீதியில் முக்கியமான தளமொன்றை அமைக்க ஹவ்தி தரப்ப ரஷ்யாவை கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. செங்கடலோர நகரான இந்த அதென் செங்கடல், அரேபிய கடல் மற்றம் இந்திய சமுத்திரத்திற்கு இடை யிலான கடல்வழிப் பாதையின் தீர்க்கமான இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு தளமொன்றை அமைக்க முடியுமாக இருந்தால் ரஷ்யாவுக்கு இராஜதந்திர ரீதியில் முக்கிய வெற்றியாக அமைந்து விடும்.
எது எப்படி இருந்தபோதும் மத்திய கிழக்கில் சவ+தி அரேபியா மற்றும் ஈரான் மோதலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ரஷ்யா கவனமாக காயை நகர்த்த வேண்டி இருக்கிறது. ஏற்கனவே சோவியட் ஒன்றிய காலத்தில் ஆப்கானில் மூக்கடைபட்ட அனுபவத்தை ரஷ்யா இன்னும் மறந்திருக்காது.
யெமன் தலைநகரை கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி ஏன் சவ+தி அரேபியாவும் அங்கிருந்து தனது தூதரகங்களை இழுத்து மூடிவிட்டன. இந்த நிலையில் யெமனில் எரிபொருள் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஹவ்திக்களுக்கு ஒரே மாற்று சக்தியாக ரஷ்யாவே கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.
அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் கைவிட்ட நிலையில் தமது மாற்று அரசுக்கு சட்ட அங்கீகாரம் பெறுவதற்கு ரஷ்யா மற்றம் சீனா உதவிக்கு வரவேண்டி இருக்கிறது. இந்த இரு நாடுகளும் தான் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றிருக்கின்றன. எனவே பாதுகாப்புச் சபைக்கு வரும் எந்தவொரு தீர்மானத்தையும் குப்பையில் போடும் வீட்டோ அதிகாரம் இந்த இரு நாடுகளிடமும் இருக்கின்றது.
சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அ'hத் இந்த இராஜதந்திரத்தை சரியாக கையாண்டு வருகிறார். இதனால்தான் பாதுகாப்புச் சபையாலோ, ஐ.நாவினாலோ அவரது அரசை இன்றுவரை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இதே இராஜதந்திரத்தை கையாண்டால்தான் ஹவ்திக்களால் தொடர்ந்து தாக்கப் பிடிக்க முடியுமாக இருக்கும்.
ஏற்கனவே ஹவ்தி அரசு யெமனின் முதலீடுகளுக்கு ஈரானின் உதவியை நாடியிருக்கிறது. அண்மையில் ஈரானுக்கும் யெமன் தலைநகருக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதனையெல்லாம் தாண்டி சவ+தி அரேபியாவின் எல்லையில் இருக்கும் ஹவ்தி கட்டுப்பாட்டு நகரங்களான அல் ஜவ்ப் மற்றும் சாதாவிலும் முதலீடுகளை செய்ய ஈரானை ஹவ்திக்கள் அணுகியுள்ளனர். இது சவு+திக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும்.
சிரியாவின் ப'ர் அல் அஸாத் அரசு தனது சொந்த மக்கள் மீது விதம் விதமாக தாக்குதல்களை நடத்தி அன்றாடம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டபோதும் சர்வதேசத்தால் அதனை ஒதுக்கிவிட மாத்திரமே முடிந்தது. அஸாத் அரசுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை ஒன்றை எடுக்க முடியாமல் போயிருக்கிறது.
இந்த சூழல் மனித உரிமைகள் மீறும் ஏனைய நாடுகளுக்கும் இராஜதந்திர பாடத்தை கற்பித்து வருகிறது. இந்த பாடத்தை யெமனின் ஹவ்தி கிளர்ச்சியாளர்களும் சரியாக கையாண்டால் அந்த நாடும் இன்னும் ஒரு சிரியாவின் நிலைமைக்கு மாறிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைந்ததை அடுத்து பனிப்போர் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த பனிப்போரின் எச்ச சொச்சம் இன்னும் முடிவதாக தெரியவில்லை. ரஷ்யாவின் விலாடிமிர் புடின் அரசு மற்றும் வழமையாக உலகை தனது கைக்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் அமெரிக்காவுக்கு இடையில் பனிப்போர் என்று சொல்லப்படாவிட்டாலும் ஒரு பனிபோர் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இதில் ஒரே வித்தியாசம் சோவியத் ஒன்றிய காலத் தில் வெளிப்படையாக தெரிந்த இந்த பனிப்போர் இப்போது மறைமுகமாக இயங்கி வருகிறது. ஓராண் டுக்கு முன் உக்ரைன் உள்நாட்டு யுத்தம் உக்கர மடைந்தபோது ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இந்த முறுகல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரம் அடைந்திருக்கிது.
இந்த பனிபோர் சூழலை ஹவ்தி கிளர்ச்சியாளர் கள், ப'ர் அல் அஸாத் போன்றவர்கள் முடியுமான அளவுக்கு தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.