السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 April 2015

தப்லீக் உலமாக்களே! உங்கள் மௌனத்தைக் கலையுங்கள் 05

நபிமார்களின் பணியை மேற்கொண்டு அவர்களின் அந்தஸ்தினைப் பெற்றிட முயற்சிக்கும் தப்லீக் உலமாக்களே! உங்கள் மௌனத்தைக் கலையுங்கள்.
அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் முதல் தடவையாக ஏகத்துவப் பிரசாரம் சைய்ய அபூ குபைஸ் மலை யடிவாரத்தில் கூட்டம் போட்டு இஸ்லாமிய தாவா பணியாற்றிய நேரத்தில் அபூ லஹப் பெருமானரை அவமதித்துப் பேசியபோது அபூ லஹபுக்கு எதிராக தனியானதொரு அத்தியாயத்தினை இறக்கி அபூ லஹபுக்கு அல்லாஹ் சாபமிட்டான்.
அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்ல்லாஹு அலைகஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஆண் வாரிஸ் இல்லாத ஒருவர் என்று ஆஸ் பின் வாயில் கூறியதற்கு அவனை சாடியும் அல்லாஹ் தனியொரு அத்தியாயத்தினை இறக்கி தன் நபியின் பெருமையை உலகறியச் செய்தான்.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் தூய மனைவியர்களை எதிரிகள் தரக்குறைவாகப் பேசியபோது அல்லாஹ் அவர்களை தூய்மைப்படுத்தி தூது அனுப்பி வைத்தான். இன்னும் அருமையான தோழர் பெருமக்களை போற்றிப் புகழ்ந்தும் பேசினான்.
இவ்வாறே பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் துல் குவைசரா நீதமாகப் பங்கிடுங்கள் என்று கூறியதற்கு அவ்வாறு சொன்னவனை கொலை செய்ய முற்பட்டிருந்தார்கள் அருமைத் தோழர்கள். பெருமானாரை விசுவசிக்க மறுத்த குடும்ப உறவினர்களுடன் போரிடப் புறப்பட்டவர்கள் புனித தோழர்கள்.
பெருமானாரின் நூரின் பொருட்டினால் நபிமார்கள் ரசூல்மார்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள் என உங்கள் முன்னோடிகள் கூறியிருகிறார்கள். பெருமானார் கூடுதலான சிறப்புக்களுடன் கப்ரில் உயிருடன் வாழ்கிறார்கள் என்றும் உங்கள் வழிகாட்டிகள் சொன்னார்கள். பெருமானாரிடம் நேரடியாக உதவி கேட்டு மௌலிது ஓதியிருக்கிறார்கள். பெருமானரை அவமதிக்கும் வஹ்ஹாபிகளுக்கு மறுப்புக் கூறியும் இருக்கிறார்கள். ஆனால் பெருமானாருக்காக என்ன செய்தீர்கள் என்று உங்கள் மனதிடம் கேட்டுப்பாருங்கள். உங்கள் தாவா பணியில் பெருமானாரின் பெருமை பற்றிப் பேசியிருப்பீர்களா?
காபா அர்ஷ் குரிஷியை விட சிறந்த பெறுமதியான பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் புனித ரவ்ழாவினை மஸ்ஜிதுன்னபவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று யூத நசாரக்களினால் தொடங்கி வைக்கப்பட்ட வஹ்ஹாபிகள் கருத்துக்கு வாய் திறந்தீர்களா? யா ரசூலல்லாஹ் என்று சொல்பவர்கள் முஷ்ரிகீங்கள் என்றும் சொல்வதைக் கண்டும்கூட வாய் திறக்காது இருக்கிறீர்களே அது ஏன்? உங்கள் வாய்களை பிறர்கள் மூடிக் கட்டுவற்கு முன் வஹ்ஹாபிகள் வாயினை மூட முன்வாருங்கள்.
السؤال السابع
வினா 7. நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் மீது அதிகமதிகம் சலவாத் சொல்வதும் தலையிலுள் கைரத் போன்ற சலவாத் ஓதுதல் தொடர்பில் என்ன கூறுகிறீர்கள்?.
ما قولكم في تكثير الصلاة على النبي صلى الله عليه و سلم و قراءة ‘دلائل الخيرات ’ أو الأوراد ؟
الجواب
يستحب عندنا تكثير الصلاة على النبي صلى الله عليه و سلم و هو من أرجى الطاعات و أحب المندوبات ، سواء كان بقراءة الدلائل و الأوراد الصلوتية المؤلفة في ذلك أو بغيرها ، و لكن الأفضل عندنا ما صح بلفظه 
صلى الله عليه و سلم ، و لو صلى بغير ما ورد عنه صلى الله عليه و سلم لم يخل عن الفضل و يستحق بشارة
‘ من صلى علىّ صلاة صلى الله عليه عشراً ’ 
و كان شيخنا العلامة الكنكوهي يقرأ الدلائل ، و كذلك المشايخ الأخر من ساداتنا ، و قد كَتب في إرشاداته مولانا و مرشدنا قطب العالم حضرة الحاج إمداد الله قدس الله سره العزيز و أمَر أصحابه بأن يحزبوه ، و كانوا 
يروون الدلائل رواية ، و كان يجيز أصحابه بالدلائل مولانا الكنكوهي رحمة الله عليه 
பதில்: இது எம்மிடம் மிகவும் சிறந்ததொரு வணக்கமாகும். நம்பகர்ந்மான வார்த்தைகள் உள்ள எந்த சலவ்த்தினையும் ஓதலாம். எங்கள் குரு நாதர் அல்லாமா கொங்க்கூஹியும் ஏனைய ஷைகுமார்கலும் தலையிலுள் கைரத் ஓதியிருக்கிரர்கள். எங்கள் வழி கட்டி குத்புல் ஆலம் மௌலானா இம்தாதுல்லாஹ் கதசள்ளஹு சிர்ராகுல் அஸீஸ் அவர்கள் தலையிலுள் கைரத் ஓதுமாறு உத்தரவிட்டுருக்கிரறாக்கள்.
eravur>kalmunai>thableeq>wahabisam