அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மரணத்தின் முன்னர் எவ்வாறு இவ்வுலகில் உயிருடன் வாழ்ந்தார்களோ அவ்வாறே சிறு மாற்றம்கூட இல்லாது இன்றும் உயிருடன் இருக்கிறர்கள். எனவே யா ரசூலல்லாஹ் என்னைக் காப்பாத்துங்கள். உங்களைத் தவிர எனக்குதவ வேறு யாரும் இல்லை என்று கூறி நபியவர்களிடம் தேவபந்த் மூத்த அறிஜர்கள் உதவி தேடியிருக்கிறார்கள். இதுவாகத்தானே அரபுல அறிஜர்களின் அகீதாவுமாக இருந்திருக்கிறது. இது இஸ்லாத்திற்கு முரணான அகீதா என்று வஹ்ஹாபிகள் சொல்கிறார்கள் என்ற காரணத்திற்காகத்தானே அரபுலக அறிஜர்கள் மௌலானா கலீல் அஹ்மத் சகாரன்பூரி அவர்களிடம் இப்படியொரு கேள்வியை முன்வைத்து இது விடயத்தில் உங்கள் கொள்கை என்னவென்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டிருந்தார்கள். அதற்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் என்று பார்த்தீர்களா?
மௌலானா காசிம் நாநூத்தவி அவர்களின் ஆபே ஹயாத் மற்றும் ஜமாலே காசிமி போன்ற நூற்களைப் பாருங்கள். உர்து மொழி உங்களுக்கெல்லாம் தெரியும் அல்லவா? இவ்வாறு உங்கள் முன்னோடிகள் அகீதாவை அறிந்து கொள்லாமல்தானா வஹ்ஹாபிகள் அகீதாவை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மரணம் என்பதே ஏற்படவில்லை என்று ஆபே ஹயாத்தின் 37 ஆம் பக்கத்திலும் ஜாமாலே காசிமியின் 16 ஆம் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறனதொரு நிலைப்பாட்டினை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் இதுவரையில் பதிவு செய்யவில்லையே!
السؤال السادس
هل للداعي في المسجد النبوي أن يجعل وجهَه إلى القبر الشريف و يسأل من المولى الجليل متوسلاً بنبيه الفخيم النبيل
வினா இலக்கம் ஆறு: மஸ்ஜிதுன்னபவியில் பிரார்த்தனை புரியும் ஒருவர் சங்கையான கப்ரினை முன்னோக்கி நின்றுகொண்டு அல்லாஹ்விடம் நபியவர்களின் பொருட்டினால் பிரார்த்திக்க முடியுமா?
الجواب
اختلف الفقهاء في ذلك كما ذكره المنلا عليّ القاري رحمه الله تعالى في ‘مسلك المتقسط’ فقال: " ثم اعلم أنه ذكر بعض مشايخنا كأبي الليث و من تبعه كالكرماني و السروجي أنه يقف الزائر مستقبل القبلة كذا رواه الحسن عن أبي حنيفة رضي الله عنهما ، ثم نقل عن ابن الهمام بأن ما نقل عن أبي الليث مردودٌ بما روى أبو حنيفة عن ابن عمر رضي الله عنه أنه قال :" من السنة أن تأتي قبر رسول الله صلى الله عليه و سلم فتستقبل القبر بوجهك ثم تقول ‘السلام عليك أيها النبي و رحمة الله و بركاته’ " ، ثم أيده برواية أخرى أخرجها المجد اللغوي عن ابن المبارك قال: سمعت أبا حنيفة يقول : "قدم أبو أيوب السختياني و أنا بالمدينة فقلت : لأنظرنّ ما يصنع فجعل ظهره مما يلي القبلة و وجهَه مما يلي وجهَ رسول الله صلى الله عليه و سلم و بكى غير متباكٍ فقام مقام فقيه" ثم قال العلامة القاري بعد نقله : "و فيه تنبيه على أن هذا هو مختار الإمام بعد ما كان متردداً في مقام المرام ثم قال: الجمع بين الروايتين ممكن إلخ كلامه الشريف ،
فظهر بهذا أنه يجوز كلا الأمرين ، لكن المختار أن يستقبل وقت الزيارة مما يلي وجهَه الشريف صلى الله عليه و سلم ، و هو المأخوذ به عندنا و عليه عملنا و عمل مشايخنا
و هكذا الحكم في الدعاء ، كما روي عن مالك رحمه الله تعالى لما سأله بعض الخلفاء
و قد صرح مولانا الكنكوهي في رسالة ‘زبدة المناسك’ و أما مسألة التوسل فقد مرت نمبر 3 و 4 ص
பதில்: நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தரிசிக்க சென்று அவர்கள் முன்னிலையில் ஆஜரான ஒருவர் கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்ளவும் முடியும். அவ்வாறே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருவதனம் இருக்கும் திசை நோக்கி நின்றுகொள்ளவும் முடியும். இவ்வாறு இரண்டிற்கும் அனுமதி இருக்கிறது என்று சட்ட வல்லுணர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனாலும் இதில் இரண்டாவது கருத்து எம்மிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகும். இவ்வாறுதான் நாமும் எமது ஷைகுமார்களும் நடந்துள்ளனர். மௌலானா கொங்கோஹி ரிசாலத்துள் மனாசிக் என்ற பிரதியில் இது விடயமாக தெளிவு படுத்தியுள்ளார். வஸீலா தொடர்பான கேள்விக்கு பதில் கூறப்பட்டுவிட்டது.