உங்களின் முன்னோடிகள் தலாயிலுல் கைராத் ஓதி வந்திருக்கிறார்கள். மற்றவர்களை ஓதுமாறு பணிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சலவாத்தின் சிறப்புக்கள் ஒரு காலத்தில் பள்ளி வாசல்களில் உங்களால் வாசிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இப்போதெல்லாம் சலவாத்தின் சிறப்புக்கள் வாசிக்கப்படுவதில்லை. அது ஏன்? உங்கள் அமைப்பின் உலமாக்கள் பணி புரிய பள்ளிவாசல்களில் நுழைவதற்கு அப்பள்ளியில் சலவாத் சொள்ளப்ப்பட்டிருந்தலும் அது நிறுத்தப்படுகிறதே! அது ஏன்? உங்கள் அமீர்மார்கள் சலவாத்சொல்லும்போது கையேந்துவதும் இல்லையே! அது ஏன்?
உலமாக்களே! உங்கள் முன்னோர்கள் ஷைகுமார்களிடம் பைஆத் எடுத்திருக்கிறார்கள். ஷைகுமார்களை குத்புல் ஆலம் என்றும் போற்றிப் புகழ்ந்தும் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் சில்சிலா இருக்கிறது. அப்படி யாராவது உங்களுக்கும் இருக்கிறார்களா? அஜ்மீர் ராஜா காஜா கரீப் நவாஸின் சிஷ்யர்கள் உங்கள் பிதாக்கள். காஜா நாயகத்தின் தர்பாருக்கு கால் நடையில் சென்றவர்கள்.
السؤال الثامن و التاسع و العاشر
هل يصح لرجل أن يقلد أحداً من الأئمة الأربعة في جميع الأصول و الفروع أم لا ؟
و على تقدير الصحة ، هل هو مستحب أم واجب ؟
و من تُقلِّدون من الأئمة فروعاً و أصولاً ؟
வினா எட்டு ஒன்பது பத்து.
நான்கு இமாம்களில் ஒருவரைப் பின்பற்றுதல் தொடர்பில் என்ன சொல்லப் போகிறீர்கள்? அவ்வாறே நீங்கள் அவர்களில் யாரைப் பின்பற்றி வருகிறீர்கள்?
الجواب
لا بد للرجل في هذا الزمان أن يقلد أحداً من الأئمة الأربعة رضي الله تعالى عنهم ، بل يجب ، فإنا جربنا كثيراً أن مآل تركِ تقليد الأئمة و اتباعِ رأي نفسه و هواها السقوطُ في حفرة الإلحاد و الزندقة ، أعاذنا الله منها
و لأجل ذلك ، نحن و مشايخنا مقلدون في الأصول و الفروع لإمام المسلمين أبي حنيفة رضي الله تعالى عنه - أماتنا الله عليه و حشَرَنا في زمرته -
و لمشايخنا في ذلك تصانيف عديدة شاعت و اشتهرت في الآفاق
நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் வழி கேட்டில் வீழ்ந்துள்ளதை நாம் பரீர்சித்துப் பார்த்திருக்கிறோம். எனவே இந்தக் காலத்தில் நான்கு இமாம்களில் ஒருவரைப் பின்பற்றுவது வாஜிபாகும். நாங்களும் எமது ஷைகுமார்களும் இமாமுல் முஸ்லிமீன் அபூ ஹனீபா ரலியாள்ளஹு அன்ஹு அன்னவர்களைப் பின்பற்றுபவர்கள். இது தொடர்பில் எமது ஷைகுமார்களால் பல நூற்கள் எழுதப்பட்டுள்ளது.