தினகரன் “ஆலமுல் இஸ்லாம்” பகுதியில் வந்த கட்டுரைக்கு மறுப்பு கட்டுறை
ஆணித்தரமான விடயங்கள் மட்டுமே மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்
தக்பீரின் போது கைகளை எங்கே வைப்பது எனும் கட்டுரைக்கு ஒரு கடிதம்
2015.03.27 அன்று வெளிவந்த தினகரன் “ஆலமுல் இஸ்லாம்” இஸ்லாமியப் சகோதரர் திக்குவல்லை இனாயாஹ் எழுதிய கட்டுரையைக் கண்ணுற்று கவலையடைந்தவனாய் அனைவரும் தெளிவு பெறும் நோக்கில் பதில் கடிதம் ஒன்றை வரைகின்றேன். இஸ்லாமிய மார்க்கம் அனைவருக்கும் இலகுவானதொரு வழிமுறையைக் காட்டித்தந்துள்ளது.
அவைகளை நாமும் கடைப்பிடித்து செயல்முறையில் கொண்டு வந்ததன் பிறகே பிறருக்கு எத்தி வைக்க வேண்டும். என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு யாரொருவர் செய்கிறாரோ அவரே உண்மையான இறைவிசுவாசியாகும். இஸ்லாம் என்பது கண்டவர்களெல்லாம் கருத்தாழம்புரியா கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு ஒரு விளையாட்டுப் பொருளல்ல.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், இமாம்கள் போன்றோரால் சொல்லப்படும் விடயங்களை நன்கு ஆய்வு செய்து கிடைக்கப்பெறும் ஆணித்தரமான விடயங்களை மாத்திரமே மக்களுக்கு மத்தியில் முன்வைக்க வேண்டும். மாறாக குழப்பங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தூண்டிவிடும் நம்பகமில்லா கருத்துக்களைக் கட்டவிழ்த்து விடுவதை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
சகோதரர் கட்டுரையில் குறிப்பிடுகையில் மக்கள் குர்ஆன், ஸ¤ன்னாவைப் புறக்கணித்து சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிப்பதாக எழுதியிருக்கின்றார். குர்ஆனும், ஹதீஸ¤ம் திருமணம், அகீகா, உழ்கிய்யா, குழந்தை பிறந்ததினம், மரணித்தவர்களுக்காக வேண்டி குர்ஆன் ஓதி தானதர்மங்கள் செய்தல் போன்ற பல்வேறு நல்ல விடயங்களை செய்து மறுமைக்காக நன்மைகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு ஏவுகின்றதே தவிர செய்யக்கூடாதெனத் தடுக்கவில்லை. இவ்வாறான நல்ல காரியங்களில் மார்க்கத்துக்குப் புறம்பான காரியங்கள் நடக்குமாயின் அவைகளைத் தடுக்க வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.
இங்கு சகோதரர் எந்த விடயங்களை ஆழ்மனதில் பதித்து எழுதியிருக்கின்றார் எனப்புரியவில்லை. முன்னோர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம் என இகழ்ந்து கூறியிருந்தார். அவைகள் என்னவெனக்கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இக்கட்டுரையில் ஆதாரமாக சுட்டிக்காட்டப்படும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களும் அல்லாஹ், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்காத அன்றையகால இறைநிராகரிப்பாளர்களான காபிர்களைக் குறிப்பிட்டுக்காட்டக்கூடியதாக இருக்கின்றது.
நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் இலங்கைத் திருநாட்டில் வாழக்கூடிய பெரும்பான்மையான முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய மத்ஹப் ஹிஜ்ரி 150 இல் பிறந்து ஹிஜ்ரி 204 இல் இறப்பை எய்திய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபியி என அனைவராலும் அறியப்பட்ட ஷாபிஃ இமாம் அவர்களின் ஷாபிஃ மத்ஹபாகும் அதன் பிரகாரமே எங்களுடைய அமல் இபாத்துகளை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
தக்பீரின் போது கைகளை நெஞ்சுக்குக் கீழே வைக்க வேண்டும் என்பதே அனைத்து இமாம்களின் ஏகோபித்த இறுதி முடிவாகும். மாலிக், அஹ்மத் இமாம்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய ஹதீஸில் ஷாபிஃ இமாம் அவர்களின் கருத்து நெஞ்சுக்கீழேயும், தொப்புளுக்கு மேலேயும் இரண்டுக்கும் இடைப்பட்ட இடமாகும். நவவி இமாம் அவர்கள் சொன்னார்கள் எங்களுடைய மத்ஹபில் தக்பீரின் போது இரு கைகளையும் நெஞ்சுக்குக் கீழாகவும், தொப்புளுக்கு மேலாகவும் உள்ள பகுதியில் வைத்துக்கொள்வதாகும். (ஷரஹுல் முஹத்தப் பாகம் 03, பக்கம் 313),
தொழுகையில் இரு கைகளையும் நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆக்கிக்கொள்ள வேண்டும். (துஹ்பா பாகம் 02, தக்கம் 152), ஷாபிஃ இமாம் மற்றும் அதிகமான இமாம்களினால் கூறப்பட்டுள்ள செய்தி, ஒரு மனிதர் தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் நெஞ்சுக்குக் கீழாகவும் தொப்புளுக்கு மேலாகவும் உள்ள பகுதியில் வைக்க வேண்டும் என கஸ்ஸாலி இமாம் அவர்களால் எழுதப்பட்ட (இஹ்யாஉ உலூமுத்தீன் பாகம் 01 பக்கம் 159) இல் கூறப்பட்டுள்ளது.
சகோதரரால் முன்வைக்கப்படும் முதலாவது ஹதீஸின் நபித்தோழரின் பெயர் (வாயிஸ் இப்னு ஹஜ்ரி) எனக்கூறப்பட்டுள்ளது. அது தவறான பெயராகும். (வாயில் இப்னு ஹுஜ்ர்) என்பதே சரியானதாகும்.
இந்நபித்தோழரால் அறிவிக்கப்படும் ஹதீஸ் இரு வழிமுறையில் வருகின்றது. ஒன்று தாய்வழி முறையாகவும் மற்றும் தந்தைவழி முறையாகவும் தாய்வழியில் பார்க்கின்ற போது தாய் யாருடன் போய் சேருகின்றார்கள், அவர்களுடைய பெயர் போன்றவைகள் சரியாக அறியப்படவில்லை. தந்தைவழியில் பார்க்கின்ற போதும் அவர்களைப் பற்றிய நம்பகமான கூற்று ஏதும் கிடையாது. அதனால் இந்த ஹதீஸ் இங்கு பலகீனமாகின்றது. ஆகையினால் அதைக்கொண்டு அமல் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது என்பதே உண்மையாகும்.
அதே வாயில் இப்னு ஹுஜ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ் இப்னு ஹுஸைமா அவர்களைத் தொட்டும் (இயானா பாகம் 01, பக்கம் 135) எனும் கிதாபில் இவ்வாறு வருகின்றது, “நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் தொழுதேன் அப்போது பெருமானார் அவர்கள் அவர்களுடைய வலது கையை இடது கையின் மீது நெஞ்சுக்குக் கீழே வைத்தார்கள்” இதே ஹதீஸை கஸ்தலானி இமாம் அவர்கள் (கஸ்தலானி பாகம் 01, பக்கம்75) இல் உறுதிப்படுத்துகின்றார்கள்.
இவ்வாறு தக்பீரின் போது கைகளை நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைப்பதற்கு பல சான்றுகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறிருக்க மாற்றமாக நெஞ்சின் மீது கைகளை வைத்து தக்பீர் கட்டுவோரைப் புதுமையாகப் பார்ப்பதில் எவ்விதத்தவறும் கிடையாது. நபிமொழி மற்றும் நல்லோர்களின் ஏகோபித்த சரியான கூற்றுக்களில் யார் குறைகாணுகின்றனரோ அவர்கள் நபிகள் நாயகத்தையும், நபித்தோழர்களையும், நல்லோர்களையும் குறைகண்டவராகிவிட்டார். யார் இவர்களைக் குறைகண்டுவிட்டாரோ அவர் இறைவனைக் குறைகண்டவராகி விட்டார். இறைவனைக் குறைகண்டவருக்கு இஸ்லாத்திலும், இரு உலகிலும் எவ்வித பங்கும், நன்மையும் கிடையாது எனும் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
சுங்காவில் முஸ்தபி...-
விரிவுரையாளர்,
மஆனீமுல் முஸ்தபா அரபுக் கல்லூரி
ஏறாவூர்-02.
விரிவுரையாளர்,
மஆனீமுல் முஸ்தபா அரபுக் கல்லூரி
ஏறாவூர்-02.